Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாகை மீனவர்களை தாக்கியது டக்ளஸ் தேவானந்தா ஆட்கள்: சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாகை மாவட்டம் அக்கரைப்பட்டு கிராமத்தில் இருந்து இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள், கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். பல படகுகளில் வந்த சுமார் 30 பேர் கட்டைகளால் அடித்தும், கத்தியால் குத்தியும், தாக்கியுள்ளனர். மீனவர்கள் வைத்திருந்த திசை, தூரம் காட்டும் ஜி.பி.எஸ். கருவிகளையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்தியது இலங்கை மீனவர்கள் என்று செய்திகள் கூறுகின்றன. உண்மை அதுவல்ல. இலங்கைத் தமிழ் மீனவர்கள் ஒரு போதும் தமது சகோதர மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை.

அவர்களுடைய ஒரே கோரிக்கை, இழுவைப்படகைக் கொண்டும், தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டும் மன்னார் கடலில் மீன் பிடிக்க வேண்டாம் என்பதே. இதைத் தவிர இரு நாட்டு மீனவர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

இந்த தாக்குதல், இலங்கையில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தத்தின் தூண்டுதலின் பேரிலேயே நடத்தப்பட்டுள்ளது என்கிற தகவல் கிடைத்துள்ளது.

கெய்ட்ஸ் தீவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடிப்பது இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது என்ற இலங்கை அரசின் சூழ்ச்சித் திட்டத்திற்கு உதவ, தனது ஆட்களை அனுப்பி தமிழக மீனவர்களைத் தாக்கியுள்ளார் என்பதே உண்மை.

இலங்கை தமிழர் பிரச்சினைகளில் தமிழக முதல்வர், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை கடுமையாக விமர்சித்த இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச, இலங்கை மீனவர்கள்தான் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றனர். அவர்களை ஜெயலலிதா முதலில் தடுத்து நிறுத்தட்டும் என்று கூறினார்.

அதனை மெய்ப்பிக்கவே இப்படியொரு தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. எனவே தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு, அந்த குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://www.nakkheera...ws.aspx?N=59872

இதுவும் சிங்கள, அயலக பயங்கரவாதிகளின் மிக மோசமான சூழ்ச்சியாக இருக்கலாம்.

ஏனெனில் கொலை, களவு, கொள்ளை, கப்பம் மன்னன் டக்லஸ் அயலக பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பவன். அவனுடன் எப்பவும் அயலக பயங்கரவாதிகளில் சிலர் தன்க்யிருப்பது வழமை.

'குறுமன்னன்' மீது இன்னொரு வழக்கை தாக்கல் செய்யவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க்கனவே முன்பு தமிழக இளுவைப்படகுகளின் கைதான விவகாரத்தின் போதும் டக்கிளசுக்கு நெருக்கமான நண்பர்களின் படகுகளை வைத்தே நாடகம் ஆடினார்கள் அப்படி பார்க்கும் போது டக்கிளசின் அல்லக்கைகளை பயன்படுத்தி பல சதி திட்டங்கள் நடைபெறுவது புலனாகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.