Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம் அழிவதற்குத் துணைபோன கருணாநிதியுடன் கைகோத்து நின்றதற்கு ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்!

Featured Replies

தி.மு.க., அ.தி.மு.க. என இரு திரா விடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, அவர்களை ஆட்சியில் அமர்த்தியதற்காக மன்னிப்பு கேட் கிறேன்!’ என்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். இதைப்பற்றி சம்பந்தப்பட்ட இரு கட்சியினரும் என்ன நினைக்கிறார்கள்?

அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளரும் சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பழ.கருப்பையா.

''அ.தி.மு.க. இனி பா.ம.க-வை சேர்த்துக் கொள்ளத் தயாராக இல்லை. தி.மு.க-வோ மூழ்கிக் கொண்டு இருக்கும் ஒரு கப்பல். வேறு என்ன வழி, பா.ம.க. தனித்துத்தானே நிற்க வேண்டும். இதில் என்ன வாய் வீச்சு? 2016-ல் ஆட்சிக்கு வரப் போவதாக கூச்சமே இல்லாமல் சொல்கிறார் ராமதாஸ். அடுத்த ஆண்டு நடக்கப்போகும் நடைப் பந்தயத்தில் வெல்லப்போவதாக கருணாநிதி சொன் னால் எப்படியோ... அப்படித்தான் இதுவும்!

தமிழ்நாட்டில், ஊருக்கு ஏழு கருணாநிதிகள் இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் நாடு வேட்டைக் காடாக இருந்தது. உலகம் கண்டும் கேட்டும் அறிந்திராத மாபெரும் ஊழலை தி.மு.க. அமைச்சர் ஆ.ராசா செய்திருக்கிறார். எவனும் சொத்து வைத்துக்கொள்ள முடியவில்லை; அடித்துப் பிடுங்கிக்கொண்டே இருந்தார்கள். மக்களே கொதித்தெழுந்து மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். இதை பா.ம.க. போன்ற ஒரு கட்சி யின் தலைமையால் உய்த்து உணர்ந்து அறிய முடியவில்லை. எல்லாம் துடைத்தெறியப்பட்ட பிறகு, 'இது தி.மு.க. மீதான வெறுப்பால் வந்த தோல்வி’ என்று சொல்வதற்கு, என்ன ஆராய்ச்சி தேவைப்படுகிறது?

திராவிடக் கட்சிகளோடு இதுவரை மாறி மாறிச் சேர்ந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று வேறு சொல்கிறார், ராமதாஸ். அவர் மன்னிப்பு கேட்பது என்றால், ஈழம் அழிவதற்குத் துணைபோன கருணாநிதியுடன் கைகோத்து நின்றதற்கு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!

ராமதாஸின் புத்திர பாசம்தான் அவரது அரசியல் குளறுபடிகளுக்குக் காரணம். ஒரு கட்சியோடு கூட்டணி பேசும்போது, முதல் நிபந்தனையாக தன் மகனை எந்த சிரமமும் இல்லாமல் மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நிலை என்றால், அந்தக் கட்சியை அழிக்க இந்த பலவீனம் ஒன்றே போதும்!

நடந்து முடிந்த தேர்தலில், ஏறத்தாழ சாதி கட்சிகள் ஒடுக்கப்பட்டுவிட்டன. யானையின் மீது இருந்த ஒரு கொசு, 'யானையின் காதுக்குள், நான் போவதாக முடிவு செய்துவிட்டேன்...’ என்று சொன்னதாம். கொசு இருந்தால் என்ன, போனால் என்ன?'' - நையாண்டியாக முடித்தார், பழ. கருப்பையா.

தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளரும் மாநிலங்கள் அவை தி.மு.க. குழுத் தலைவருமான திருச்சி சிவா

''முதலில் ராமதாஸின் வார்த்தைகள் எந்த அளவுக்கு ஸ்திரத்தன்மை வாய்ந்தவை என்பதை எதிர்வரும் நாட்கள்தான் சொல்ல வேண்டும். தேர்தல் நேரங்களில் கட்சிகளுக்கு இடையில் வலுவான கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைப்பது எனும் நிலை மாறி, அப்போதைய முக்கியப் பிரச்னைகள் அடிப்படையில் கூட்டணி என மாறியதற்குப் பின்பு, இந்த இரண்டு காரணங் களுக்கும் உட்படாமல், வேறு சில காரணங்களின் அடிப்படையில் முடிவெடுக்கும் கட்சிகள், அரசிய லின் தரத்தை நீர்த்துப் போகச்செய்யும்.

இவருடைய கட்சி எந்த வரிசையில் என்பதைவிவரம் தெரிந்த தமிழக மக்களின் கருத்துக்கே விட்டுவிடுகிறேன். எந்த அரசியல் கட்சியும் ஆட்சிக்கு வர நினைப்பது அவரவர் உரிமை. அது நடைமுறையில் சாத்தியமா என்பதை அவர்களின் கடந்த காலச் செயல் பாடுகளும் நிகழ்கால நிலைப்பாடுகளும்தான் தீர்மானிக்கும்.

'லட்சியப் பயணம் போகும்போது, காகங்கள் நம் மீது எச்சமிடும். அதற்காக, காகத்தை விரட்டிக்கொண்டு செல்லக் கூடாது. அதை விரட்டுவதிலும் வீழ்த்துவதிலும் நமக்கு எந்தப் பெருமையும் இல்லை. காகத்துக்குத் தெரிந்ததும் புரிந்ததும் இவ்வளவுதான் என்று எச்சத்தைத் துடைத்தெறிந்துவிட்டு, பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்!’ என அண்ணா சொன்னதை நாங்கள் நினைத்துக் கொள்கிறோம்!'' என்றார் அர்த்தபுஷ்டியுடன் சிரித்தபடி.

Thanks to Junior vikatan.

To see the pictures of this news please go to

http://www.thedipaar.com/news/news.php?id=32885

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.