Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உயிரை மாய்த்துக் கொண்ட செங்கொடி! -குமுதம் ரிப்போட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02.jpg 04.09.11 ஹாட் டாபிக்

ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு,தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் மீதான கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், மூவரையும் தூக்கிலிடக் கூடாது என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மூவர் உயிரையும் காக்க இ ளம்பெண் செங்கொடி என்பவர் தீ வைத்து இறந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என சிறைத்துறை அறிவித்தது. ஆனால், தூக்கு தண்டனைக்குத் தடை விதிக்கக்கோரி,மூவரின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதால், தண்டனையை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சிறைத்துறை அறிவித்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கு விசாரணை முறையாக நடைபெறாத நிலையில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மூவரையும் சிறைக்குள் அடைத்துவிட்டு மரண தண்டனை கொடுப்பதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் கயல்விழி, வடிவாம்பாள், சுஜாதா மூவரும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த 26-ம் தேதி தொடங்கினர். திரைத்துறையினர், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். ரயில் மறியல், ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் செங்கொடி, ‘‘சாந்தன், முருகன், பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்’’ என்ற கோரிக்கையோடு, தன் உடலில் தீ வைத்து இறந்து போனார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செங்கொடிக்கு02a.jpg அம்மா இல்லை.பத்து வயதிலேயே காஞ்சிபுரத்தில் செயல்படும் ‘காஞ்சி மக்கள் மன்றம்’ அமைப்பால் எடுத்து வளர்க்கப்பட்டவர். காஞ்சி மக்கள் மன்றத்தோடு இணைந்து பல போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதில் இருந்தே நிம்மதியின்றி இருந்திருக்கிறார் செங்கொடி.

மூவர் விடுதலைக்காக நடந்த அனைத்துப் போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த வேலூர் வரை பைக்கில் செல்லும் போராட்டம், காஞ்சியில் நடந்த ஆர்ப்பாட்டம் எல்லாவற்றிலும் பங்கெடுத்திருக்கிறார். வழக்கறிஞர்கள் மூவர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் கடந்த சனிக்கிழமை கலந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து இந்தப் பிரச்னை குறித்தே பேசிக் கொண்டிருந்த செங்கொடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தன் உடல்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து இறந்து போனார். உடல் பற்றியெரியும் நிலையிலும், ‘‘தமிழக அரசே கருணை காட்டுங்கள். மூவர் தூக்கை ரத்து செய்யுங்கள்’’ என்ற கோஷத்தை எழு ப்பியவாறே இருந்திருக்கிறார். மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலை என்பதால் இந்த தகவல் உடனடியாகப் பரவியது. அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்ப டும் வழியில் செங்கொடியின் உயிர் பிரிந்தது.

சுதந்திர இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக தீக்குளித்து இறந்த முதல் பெண் செங்கொடிதான். செங்கொடி மரணம் கேட்டு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் காஞ்சிபுரத்தில் குவிந்துவிட்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவே

காஞ்சிபுரம் வந்தார்கள்.

‘‘போராளிகள் எல்லாப் பிரச்னைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். முத்துக்குமாரில் ஆரம்பித்து இப்படிப்பட்ட தற்கொலைகள் தொடர்வது வருத்தம் அளிக்கிறது. செங்கொடியோடு இந்த தற்கொலைகள் முடியட்டும். போராட்ட தீயை மனதில் ஏற்றுங்கள் உடலில் வேண்டாம்’’ என வைகோ வேண்டுகோள் விடுத்தார்.

காஞ்சி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் ஜெசி,மகேஷ் இருவரிடமும் பேசினோம்.‘‘தோழர் செங்கொடியை நாங்கள் தியாகி என்றுதான் அழைப்போம். தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் யாருக்காவது தூக்கிக் கொடுத்து விடுவார். சமூக விஷயங்களுக்காகப் போராட முதல் ஆளாக நிற்பார். ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு வெற்றி கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பது குறித்து செங்கொடி எப்போதும் வருத்தப்படுவார். அதனால் தான் இப்படி ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்து போய்விட் டார்.

நாங்கள் 02b.jpgநடத்திய போராட்டங்களுக்காக எங்கள் மீது என்னென்ன வழக்குகள் இருக்கிறதோ,அதெல்லாம் அவர்மீதும் இருக்கிறது. எங்களோடு அவர் சிறையிலும் பல நாட்கள் இருந்துள்ளார். ஈழ விஷயம் அவரை ரொம்பவே பாதித்தது. குறிப்பாக, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீசப்பட்டிருக்கும் காட்சிகளைப் பார்த்து பலதடவை அழுதிருக்கிறார்.

‘முத்துக்குமார் இறந்து ஒரு எழுச்சியை உண்டாக்கியது போல், யாராவது செய்தால் மூவரும் விடுதலையாவார்களா?’ என சனிக்கிழமை எங்களிடம் கேட்டார். ‘மரணம் எதற்கும் தீர்வாகாது’ என நாங்கள் சொன்னோம். ஞாயிற்றுக்கிழமை மாலை அவரை வீட்டில் காணவில்லை என்றபோதே, எங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. அவர் இறந்து போன அதே இடத்தில்தான் நாங்கள் பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டிருக்கிறோம். அப்போது எங்களோடு செங்கொடியும் இருந்தார்’’ என்று கூறிவி ட்டு, கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கினார்கள்.

‘‘முருகன், சாந்தன், பேரறிவாளன் மூன்று பேரும் விடுதலையாக வேண்டும்’’என்ற கோரிக்கையோடு அந்த இளம்பெண் இறந்து போயிருக்கிறார். தன்னுடைய மரணம் மூவர் விடுதலையை சாத்தியப்படுத்தும் என்றுதான் மரணத்திற்கு முந்தைய நொடிகளில் செங்கொடி நம்பியிருக்கக் கூடும்.

செங்கொடியின் நம்பிக்கையையும்,கனவையும் அரசு நினைத்தால் நினைவாக்க முடியும்!

படங்கள்: எம். ரமேஷ்பாபு

ம.பா.கெஜராஜ்

சிறை முற்றுகை!

‘தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ சார்பில் ‘மரண தண்டனை ஒழிப்பு மாநாடு’ மறைமலை நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

‘‘பதினோரு ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த கருணை மனுவை இப்போது ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி கேட்ட அவர்கள் மூவரையும் விடு தலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை நிறைவேறாவிட்டால், செப்டம்பர் 8-ம் தேதி தமிழகத்தின் அனைத்துப் பகு திகளில் இருந்தும் தொண்டர்கள் திரள்வார்கள். செப்டம்பர் 9-ம் தேதி பத்து லட்சம் பேரோடு வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்’’ என்றும் அரசை எச்சரித்தார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.