Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போனில் பேசிய நபருக்கு வலைவீச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை, செப். 2-

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்துக்கு பேசிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி விஷமிகள் யாராவது போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறார்கள்.

நேற்று மாலை 3.12 மணியளவில் இந்த அலுவலகத்துக்கு சிறுவன் குரலில் மர்ம நபர் ஒருவர் பேசினார். "ஜெயலலிதா அம்மாவுக்கும், அவரது அலுவலகத்துக்கும், டைம் செட் பண்ணியாச்சி. சொல்வதை சொல்லிவிட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்" என்று பேசி விட்டு அந்த மர்ம நபர் போனை வைத்து விட்டார்.

இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் உஷார்படுத்தப்பட்டனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு பிறகு வெறும் மிரட்டல் தகவல் என்று தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து போனில் பேசி மிரட்டிய நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். போனில் பேசிய நபர் கடலூரில் இருந்து பேசி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

http://www.koodal.com/news/tamilnadu.asp?id=67135&section=tamil&title=fake-bomb-threat-to-jayalalithaa

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்வருக்கு குண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் கைது

சென்னை : முதல்வருக்கு ஜெயலலிதாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, மிரட்டல் விடுத்த சென்னையை சேர்ந்த பெண்னை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில், 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமையகம் செயல்படுகிறது. அங்கு நேற்று முன்தினம் மாலை வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய பெண், முதல்வர் ஜெயலலிதாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் குண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்தார்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டு அது புரளி எனத் தெரிந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், அழைப்பு வந்த இடத்தையும், மொபைல்போன் எண்ணையும் வைத்து விசாரி்த்தனர்.

இதில், அந்த மர்ம அழைப்பை விடுத்தவர், தாம்பரம் மறைமலைநகரை சேர்ந்த செந்தமிழ் செல்வி (32) எனத் தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், கணவரை பிரிந்த வாழும் செந்தமிழ் செல்வி, ஆசிரியர் பயிற்சி முடித்தவர் என்பதும், கணவரை பழிவாங்க அவரது பெயரில் உள்ள மொபைல்போனில் இருந்து மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் சிலர் கூறுகையில், குடும்பப் பிரச்சனையி்ல் தவித்த செந்தமிழ்செல்வி, கணவனை பழிவாங்கும் நோக்கில் 108 அலுவலகத்திற்கு பலமுறை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்றனர்.

http://thatstamil.oneindia.in/news/2011/09/03/tamil-nadu-cm-received-bomb-treat-aid0180.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.