Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் தகர்ப்பு: அவசரநிலை பிரகடனம்!

Featured Replies

எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் தகர்ப்பு: அவசரநிலை பிரகடனம்!

எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தைப் பொதுமக்கள் அடித்துத் தகர்த்தனர். இதனைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டத்தையடுத்து, எகிப்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இஸ்ரேலின் தூதரக அலுவலகம் உள்ளது. ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தவரை இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் இடையே நல்லுறவு இருந்து வந்தது. முபாரக்கிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இஸ்ரேலுடனான உறவுக்கு எதிராக பொதுமக்கள் அவ்வபோது கிளர்ச்சி செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் எகிப்து ஆயுத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் எகிப்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இது எகிப்து மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை முடிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் கெய்ரோவிலுள்ள சுதந்திர மைதானத்தில் திரண்டு அரசியல் சீர்திருத்தம், இஸ்ரேலுடனான உறவு முறித்தல் போன்ற கோரிக்கைகளை விடுத்தனர்.

அவர்களின் போராட்டம் சிறிதுநேரத்திலேயே இஸ்ரேலுக்கு எதிரான கோபத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. பக்கத்திலிருந்த இஸ்ரேல் தூதரகத்துக்குச் சென்ற பொதுமக்கள், அங்கு புகுந்துத் தாக்குதல் நடத்தினர். தூதரக அலுவலகத்தின் கட்டிடடம் இடிக்கப்பட்டது. தூதரகத்திலிருந்த 6 பணியாளர்களைப் பொதுமக்கள் சிறை வைத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முற்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் காவல்துறையினரையும் தாக்கினர். தூதரக அலுவலகத்துக்குத் தீவைக்கப்பட்டது.

கலவரத்தை க்கட்டுப்படுத்த முடியாததால் நூற்றுக் கணக்கான அதிரடி கமாண்டோ ராணுவ வீரர்கள் சுதந்திர மைதானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் 6 இஸ்ரேலிய பாதுகாவலர்களையும், தூதரக அலுவலர்களையும் மீட்டனர். அதைத் தொடர்ந்து தூதர் யிட்சாக் தனது குடும்பத்தினர் மற்றும் 80-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் ஊழியர்களுடன் வெள்ளிக்கிழமை இரவே விமானம் மூலம் இஸ்ரேல் திரும்பினார்.

இஸ்ரேலுக்கு எதிரான மக்களின் கோபம் நேற்றும் தொடர்ந்தது. நேற்று நடந்த கலவரத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை 19 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு வரை கலவரம் தொடர்ந்து நடந்தது.

இதனால் கெய்ரோ நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். "இது மோசமான சம்பவம்" என்று கூறியுள்ளார். இதற்கிடையில் "இஸ்ரேல் தூதரகத்துக்கு எகிப்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

அரபு நாடுகளில் ஜோர்டானுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் அரசாங்கரீதியாக நெருக்கமும் நட்புறவும் கொண்டுள்ள நாடு எகிப்து என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியின் அடிப்படை காரணங்களுள் ஒன்று, இஸ்ரேலுடனான ஹோஸ்னி முபாரக்கின் நெருங்கிய உறவு என்று கூறப்படுகிறது. எகிப்தும் இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொண்டால், அது இஸ்ரேலுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் எனக்கருதப்படுகிறது.

http://www.inneram.com/2011091118846/israel-embassy-attacked-emergency-announced-in-egypt

  • தொடங்கியவர்

எகிப்திய போலீசும் இந்திய மீனவரும் சுடப்படுவது எதனால்..?

எகிப்தில் ஊழல் சர்வாதிகாரியான கொஸ்னி முபாரக் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் பழைய கில்லாடியான இஸ்ரேலின் வயிற்றில் மெல்லிய கலக்கம் இருந்து வந்தது. புதிய ஆட்சியாளர் இஸ்லாமிய வீறாப்புக் கொண்டு இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்களோ என்றும் அஞ்சியது. இதனால் தன்னுடைய பாணியில் எகிப்திய காவல் கடமையில் இருந்த ஐந்து போலீசாரை சுட்டுக் கொன்று எகிப்திய புதிய அரசை ஆழம் பார்த்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பாரிய முறுகல் ஏற்பட்டு, அரபு லீக் அவசரமாகக் கூட்டப்பட்டதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இஸ்ரேலிய அடாவடித்தனங்களை கண்டித்து எகிப்தில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை மூடும்படி கெய்ரோவில் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. இன்று இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேல் – எகிப்து ஆகிய இரு நாடுகளின் நட்புறவும் 1979ம் ஆண்டு ஒப்பந்தப்படி தொடர்வதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன் யாகுவின் தொடர்பாளர் றொனி சோபர் தெரிவித்தார். இரு நாடுகளும் முபாரக் காலத்தில் இருந்ததைப்போல நட்பாக செயற்படும் என்றும் அவர் கூறினார். கொஸ்னி முபாரக் காலத்தில் இஸ்ரேலுக்கு கப்பமாகக் கட்டப்பட்ட பெருந்தொகை எரிபொருள் தொடர்ந்து போகும் என்பது இதனுடைய உட் பொருளாகும்.

இஸ்ரேல் எகிப்தியரை சுட்டது போலவே சிறீலங்கா கடற்படைகள் தமிழக மீனவர்களை சுட்டு இந்திய நடுவண் அரசின் மனப்போக்கை நாடி பிடித்துப் பார்ப்பது தெரிந்ததே. கச்சதீவு இலங்கைக்கே சொந்தம், இலங்கை கடற்பகுதிக்குள் மீன் பிடிக்கப்போவது தமிழக மீனவர் செய்யும் தவறு என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதும். இலங்கையை பகைக்க முடியாது என்று மன்மோகன் சிங் கூறியதும் இலங்கைக்கு சிறிது காலம் மகிழ்வு கொடுக்கும்.

தமிழருக்கு எதிரான செயற்பாடு என்னும் வட இந்தியக் கப்பம் கிடைக்காவிட்டால் சிங்கள அரசின் கோபம் தமிழக மீனவரின் தலையில் விடிந்துவிடுகிறதா என்பதும் கேள்விக்குரிய விடயமாகும்.

http://www.alaikal.com/news/?p=81949

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.