Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் முத்துமாரியம்மன் கோவிலை இடிக்கத் துடிக்கும் தூதர் அம்சா

Featured Replies

லண்டன் முத்துமாரியம்மன் கோவிலை இடிக்கத் துடிக்கும் இலங்கைத் தூதர் அம்சா: தமிழர்கள் கொதிப்பு

இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதர் தமிழ்க்கலாசாரத்தை அவமதிப்பதாக அவர் மீது புகார்கள் எழுந்துள்ளன.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இது தமிழ்க்கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. இங்கு தமிழர்கள், ஈழத் தமிழர்கள், இந்துக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த கோவிலில் ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒரு தூண் உள்ளது. இப்படிபட்ட கோவிலை எப்படியாவது இடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் இலங்கை தூதரக உயர் அதிகாரி அம்சா சதி வேலை செய்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த கோவிலில் பயங்கரவாதத்திற்கு ஆதரவான செயல்கள் நடைபெறுவதாகவும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகள் அளிக்கப்படுவதகாவும் இங்கிலாந்து அரசிடம் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறை கொண்ட நாடாக இங்கிலாந்து இருப்பது அம்சாவுக்கு பிடிக்கவில்லை. அதை மாற்றத் தான் இவ்வாறு அவதூறு புகார்களை தெரிவிப்பதாக இங்கிலாந்து வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரின் நடவடிக்கைகளால் இங்கிலாந்தில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள தமிழர்களும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இதே அம்சா தான் நான்காம் ஈழப்போரின்போது சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரியாக இருந்தார். அப்போது தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு தூண்டுதலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லண்டனிலும் சென்னையில் செய்த வேலையை தொடர்கிறார். அம்சா ஒரு தமிழ் முஸ்லீ்ம் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2011/09/13/lankan-ambassador-defames-tamil-culture-aid0128.html

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று அனுராதபுரத்தில் இடிக்கப்பட்ட முஸ்லீம்களின் ஸியாரத்துக்கு.... அம்சா என்ன செய்தானாம்.

தென்னை மரத்திலை, தேள் கொட்டினால், பனை மரத்தோடை ஏன் கோவிக்கிறான் பாவி.

அது சரி, தமிழன் தான்... இழிச்ச வாயன் ஆச்சே... அம்சா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன் முத்துமாரிகோவில் யாருக்கு சொந்தம்.

இவர் விடுதலைப்போராட்டத்துக்கு என்ன செய்தார்

என்ன இப்போ செய்கிறார்.

இவருக்கும் கே.பிக்கும் இருக்கும் ரத்த சொந்தம் என்ன

ச்சும்மா எல்லாத்துக்கும் அம்சா புராணம் பாடாமல் என்ன நடந்தது என்டு பாருங்கோ.

கிட்டற்றை காலத்திலையே லண்டன் அலுவலகத்தை விட்டு கலைபட்டவர்தான் இந்த கோயில் முதலாளி.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் உள்ள அகூதாவும், ஆப்கானிஸ்தானில் உள்ள தமிழ்சிறியும் செய்திகளின் அடிப்படையடையில் மட்டுமே... கருத்துக்களை எழுத முடியுமே... தவிர, இதுக்காக லண்டன் முத்துமாரியம்மன் கோவிலுக்கு, ஹம்சா என்பவன் என்ன செய்கிறான்? மற்றவன் என்ன செய்கிறான் என்று பார்க்க வரமுடியாது. உங்களுக்கு தெரிந்ததை அல்லது லண்டன் உறவுகள் அனுபவபட்டதை சொன்னால் தானே... உண்மை தெரியும். தேன்மொழி.rolleyes.gif

  • தொடங்கியவர்

கோயிலை யார் நடாத்துகிறார்கள்? அவர்கள் ஏமாற்றுப்பேர்வழிகளா? - தெரியாது.

ஆனால் இந்த ஹம்சா கோயிலுக்கு எதிராக இப்படியெல்லாம் செய்யக்கூடியவன் என்று மட்டும் உறுதியாக தெரியும். எங்கள் தேவை சிங்கள் ஏதிரிகளுக்கு எதிராக பலம் சேர்ப்பதே, ஒற்றுமை கொண்டு எதிர்ப்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஜெயதேவனின் கோவிலா?

ஜெயதேவன் என்பவரும் கொஞ்சக்காலம் கோயில் சண்டையில் ஈடுபட்டவர் என அறிகின்றேன்.

இதுக்குள் கே.பி. எப்பிடி வந்தார்? கிட்டு எப்பிடி வந்தார் என்று மட்டும் விளங்கவில்லை.

ஆனால் ஹம்சா தியரிப்படி எல்லாரும் வருவார்கள். அது தான்... சிங்கள ஸ்ரீலங்கா.

நாங்கள் சொறி நாய்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாபர் மசூதியை உடைச்சுப்போட்டாங்கள் எண்டு கூப்பாடு போடுற மாதிரிதான் கோயிலை இடிக்ப போறாங்கள் என்ற தலைப்பே ரொம்ப பிழை பாருங்கோ..

கோயில் ஒரு உணவுச்சாலைக்கு மேலே இருந்த கட்டடத்தில் உருவாக்கப்பட்டது.

இப்பகூட கோயிலை இடிக்கச்சொல்லி யாராவது நோட்டீசு குடுப்பாங்களா..

உந்த கட்டடத்தை விட்டு வெளியேறச்சொல்லி தான் நோட்டீசு விட்டிருக்காங்கள்.

அதலையும் இப்ப கோயில் இருந்த இடத்து கீழே இருந்த உணவுவிடுதிகாரன் ஒரு வருசத்துக்கு முதலே எழும்பி விட்டான்.

கட்டடம் எழும்ப சொன்னா அதுக்கு அந்த கட்டடத்தின் பாராமரிப்பு, உரிமம், உள்ளுராட்சிசபை அனுமதி என்று

ஆயிரத்தெட்டு காரணம் இருக்கும்.

கோயில் ஒரு யாவாரம் இப்போ.

கோயிலை விட்டு எழுப்பினாலும் அதையும் யாவாரமாக்கி அம்சா என்று அழுது காசு பார்க்கும் பகல்கொள்ளைகார எண்ணம்தான்.

இனி ரொயிலற்றிலை தண்ணி வராட்டியும் அம்சாதான் என்டு கத்தினா நம்பிடுவீங்களோ..

  • கருத்துக்கள உறவுகள்

தேன் மொழி அக்கா,

நீங்க தான் சொன்னீங்க கே.பி. அண்ணா, கிட்டு அண்ணாவை பற்றி...

இப்ப... ரெஸ்ரோறன்றுக்கு மேலை கோயில் என்னும்.... அது சைவ ரெஸ்ரோறன்ரா, மச்ச ரெஸ்றோறன்ரா?

லண்டன் முத்துமாரியம்மன் கோவிலை இடிக்கத் துடிக்கும் இலங்கைத் தூதர் அம்சா: தமிழர்கள் கொதிப்பு

இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதர் தமிழ்க்கலாசாரத்தை அவமதிப்பதாக அவர் மீது புகார்கள் எழுந்துள்ளன.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இது தமிழ்க்கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. இங்கு தமிழர்கள், ஈழத் தமிழர்கள், இந்துக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்

.

விசமத்தனமான கருத்துத் திணிப்பு. தமிழ்க்கலாச்சாரம் எண்டால் அம்மன் கோயில் ஈழத்தமிழன் எண்டால் இந்து என்று திணிக்கப்படுகின்றது. அங்கங்க அறுபத்தெட்டு கோயிலக் கட்டி நல்லா பணம்சம்பாதிக்கும் வியாபாரம் செய்துகொண்டு அதுக்கு ஒரு பிரச்சனை எண்டவுடன் எதுக்கு அதை தூக்கி தேசியவாதத்துக்குள்ள போட்டு கலாச்சாரம் மண்ணாங்கட்டி எண்டு ? கோயில துறந்து யாவாரம் செய்றது அந்த இடத்துக்கு பிரச்சனை எண்டா என்னுமொரு கட்டடத்த வாடகைக்கு எடுத்து யாவராத்தை தொடர்ந்து செய்ய வேண்டியதுதானே ? இவ்வளவு அடிவாங்கிய பின்னும் கோயிலுக்குள்ளால தேசிவாதத்தை கட்டிஎழுப்ப முற்பட்டால் எந்தக் காலத்திலும் உருப்பட முடியாது.

  • தொடங்கியவர்

விசமத்தனமான கருத்துத் திணிப்பு. தமிழ்க்கலாச்சாரம் எண்டால் அம்மன் கோயில் ஈழத்தமிழன் எண்டால் இந்து என்று திணிக்கப்படுகின்றது. அங்கங்க அறுபத்தெட்டு கோயிலக் கட்டி நல்லா பணம்சம்பாதிக்கும் வியாபாரம் செய்துகொண்டு அதுக்கு ஒரு பிரச்சனை எண்டவுடன் எதுக்கு அதை தூக்கி தேசியவாதத்துக்குள்ள போட்டு கலாச்சாரம் மண்ணாங்கட்டி எண்டு ? கோயில துறந்து யாவாரம் செய்றது அந்த இடத்துக்கு பிரச்சனை எண்டா என்னுமொரு கட்டடத்த வாடகைக்கு எடுத்து யாவராத்தை தொடர்ந்து செய்ய வேண்டியதுதானே ? இவ்வளவு அடிவாங்கிய பின்னும் கோயிலுக்குள்ளால தேசிவாதத்தை கட்டிஎழுப்ப முற்பட்டால் எந்தக் காலத்திலும் உருப்பட முடியாது.

தேசியவாதம் ( இந்த கோவிலில் ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒரு தூண் உள்ளது) அந்தகோயிலில் கட்டி எழுப்பப்பட்டதாக செய்திக்கட்டுரை கூறுகிறது.

புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்கள் அல்லாத தமிழர்களும் கோயில்களுக்கு வருவதுண்டு. இந்த செய்தி மூலமும் தமிழக ஊடகம் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த மூலத்தில் அது நடாத்தப்படும் இடம் பிரச்சனை என குறிப்பிடப்படவில்லை. அது ஒரு உறவின் கருத்து.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் முத்துமாரியம்மன் பயங்கரவாதிகளுக்கு உதவியாம்! கோவிலை இடிக்கத் துடிக்கும் இலங்கைத் தூதரான மதவாதி அம்சா முஸ்லிம்களின் வழிபாட்டிடம் அனுராதபுரத்தில் இடிக்கப்படுவதையும் தட்டிக்கேட்பாரா?

[Tuesday, 2011-09-13 22:56:58]

இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதர் தமிழ்க்கலாசாரத்தை அவமதிப்பதாக அவர் மீது புகார்கள் எழுந்துள்ளன. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இது தமிழ்க்கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. இங்கு தமிழர்கள், ஈழத் தமிழர்கள், இந்துக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த கோவிலில் ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒரு தூண் உள்ளது. இப்படிபட்ட கோவிலை எப்படியாவது இடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் இலங்கை தூதரக உயர் அதிகாரி அம்சா சதி வேலை செய்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த கோவிலில் பயங்கரவாதத்திற்கு ஆதரவான செயல்கள் நடைபெறுவதாகவும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகள் அளிக்கப்படுவதகாவும் இங்கிலாந்து அரசிடம் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறை கொண்ட நாடாக இங்கிலாந்து இருப்பது அம்சாவுக்கு பிடிக்கவில்லை. அதை மாற்றத் தான் இவ்வாறு அவதூறு புகார்களை தெரிவிப்பதாக இங்கிலாந்து வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

அடிப்படையில் மதவாதியான அவரின் நடவடிக்கைகளால் இங்கிலாந்தில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள தமிழர்களும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இதே அம்சா தான் நான்காம் ஈழப்போரின்போது சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரியாக இருந்தார். அப்போது தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு தூண்டுதலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லண்டனிலும் சென்னையில் செய்த வேலையை தொடர்கிறார். அம்சா ஒரு மதவாதம்மிக்க தமிழ் முஸ்லீ்ம் என்பது குறிப்பிடத்தக்கது.

Temple Flag Lowering Festival Part 2 @ London Muththumari Amman Temple from Anand Kumar (London Temples) on Vimeo.

பொலிசாரின் மேற்பார்வையிலேயே பிக்குகளும் சேர்ந்து முஸ்லிம்களின் தொழுகை கூடத்தை தகர்த்தனர்.

முஸ்லிம்களின் வழிபாட்டிடம் நேற்று முந்தினம் இடிக்கப்பட்டபோது அதற்கு பொலிசார் பாதுகாப்பு கொடுத்துள்ளனர் என அறியவருகின்றது. இதே வேளை துட்டகெமுனு மன்னனின் வாளைத் தேடி அலையும் சில பௌத்த அமைப்புகளே அநுராதபுரம் ஒட்டுப்பளம் பிரதேசத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் ஸியாரத்தைத் தரைமட்டமாக்கின எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தேசிய சிங்கள ராவய என்ற அமைப்பும் அதன் கீழான சில பௌத்த பிரிவுகளுமே குறிப்பிட்ட ஸியாரத்தைத் தரைமட்டமாக்கி அங்கு துட்டகெமுன மன்னனின் வாளைத் தேடியதாக சிங்கள இணையமான லங்கா சி நியூஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட ஸியாரம் கடந்த வாரம் பொலிஸார் முன்னிலையிலேயே தரைமட்டமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயம் தொடர்பில் அரசின் பங்காளி முஸ்லிம் கட்சிகளோ அமைச்சர்களோ இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலண்டனில் இந்துக்களின் கோவிலை துவம்சம் செய்யத்துடிக்கும் அம்சா அனுராதபுர விவகாரத்தையும் கண்டுகொள்வாரா என இலண்டன்வாழ் தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

musleemtemple-srilanka_distroyed130911_001.jpg

musleemtemple-srilanka_distroyed130911_002.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=49716&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.