Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரமக்குடி கலவரத்தின் பின்னணியில் திருமாவளவனா? போலீஸார் சந்தேகம்.

Featured Replies

சிறு பொறி இருந்தாலே பற்றிக் கொள்ளும் தென் மாவட்டங்களில், இப்போது பெரு நெருப்பே கொளுத்தி விடப்பட்டிருக்கிறது. பரமக்குடியில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் தமிழகமே பரபரப்பில் இருக்க, “நீண்ட நாள் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த துப்பாக்கிச் சூடு’’ என கலவரத்திற்கு பின்னணி சொல்லிப் பதறுகிறார்கள்.

தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி (11-ம் தேதி) அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வழக்கம் போல் இந்த ஆண்டும் தலித் மக்கள் தயாராயினர். இது தொடர்பான பிரச்னைகள் இந்த மாத ஆரம்பத்திலேயே ஏற்பட்டது. மதுரை உத்தப்புரத்தில் இம்மானுவேல் சேகரன் குருபூஜை சம்பந்தமான ஃபிளக்ஸ் போர்டு ஒன்றை தலித் மக்கள் வைக்க, அதில் தங்கள் மனதைப் புண்படுத்தும் வாசகங்கள் உள்ளதாக இன்னொரு பிரிவினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க... கலவரத்தின் ஆரம்பம் தென்பட்டது.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம், பச்சேரியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் பழனிக்குமார். ப்ளஸ் ஒன் படிக்கும் இவர் வெள்ளிக்கிழமை (9-ம் தேதி) நள்ளிரவில் கொலையானான். பச்சேரி கிராமத்தின் அருகே உள்ள முத்துராமலிங்கம் புதூர் ஐயனார் கோயில் திருவிழாவில் நாடகம் பார்த்து விட்டு இரவு 11 மணியளவில் நண்பர்களுடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தான். மண்டலமாணிக்கம் குண்டாறு வழியாக வந்தபோது, பத்துப் பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வழிமறித்தது. நண் பர்கள் சிதறி ஓடிவிட, தனியாக மாட்டிக் கொண்ட பழனிக்குமார் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டான். இதையடுத்து பதற்றம் ஏற்பட்டது.

பழனிக்குமாரின் கிராமமான பச்சேரியில் உள்ள குடிநீர் கிணற்றில் யாரோ விஷத்தைக் கலந்து விட்டார்கள் என்கிற செய்தியால் பதற்றம் அதிகரித்தது. ”சோதனைக்கு நீரை அனுப்பியிருக்கிறோம். சோதனை முடிந்த பின்னரே, விஷம் கலந்தது பற்றித் தெரிய வரும்’’ என போலீஸார் தெரிவித்தாலும், கிணற்றில் விஷம் கலந்தது உண்மை தான் என்கிறார்கள் ஊர்மக்கள்.

இப்படி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு முன்னரே பிரச்னைகள் ஆரம்பித்து விட்ட நிலையில், இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்து வதற்காக ஞாயிற்றுக்கிழமையன்று (11-ம் தேதி) பரமக்குடி கிளம்பினார் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன். கொலை செய்யப்பட்ட மாணவன் பழனிக்குமார் வீட்டிற்கு அவர் செல்வார் என்பதால், கலவரம் நடக்க வாய்ப்பிருப்பதாகக் கூறிய போலீஸார், தூத்துக்குடி வல்லநாட்டில் வைத்து அவரைக் கைது செய்தனர்.

ஜான்பாண்டியன் கைதான செய்தி கேட்டு பரமக்குடியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அவரை விடுதலை செய்யக்கோரி பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் அவரது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிக் கொண்டிருந்த வண்டிகளுக்கும் அவர்கள் வழிவிட மறுத்து ஆர்ப்பாட்டம் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டம் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட சென்னை துணை கமிஷனர் செந்தில்வேலனின் சட்டையை ஒருவர் பிடித்து இழுத்ததாகவும், இதையடு த்து தள்ளுமுள்ளு அதிகமாகி அது மோதலாக வெடித்ததாகவும் போலீஸார் தரப்பில் தெரிவித்தனர். மறியலில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கலவரத்தைத் தூண்ட முயற்சிக்க, போலீஸார் தடியடி நடத்தத் தொடங்கினர். பதிலுக்கு அவர்கள் போலீஸார் மீது கற்களைக் கொண்டு தாக்கத் தொடங்கினர்.

ராமநாதபுரம் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல், டி.சி. செந்தில்வேலன், டி.எஸ்.பி. கணேசன் உட்பட பலர் கல்வீச்சில் காயமடைந்தனர். தள்ளுமுள்ளில் டி.எஸ்.பி. கணேசன் தவறி கீழே விழ, அவர் மீது வன்முறைக்காரர்கள் நிதானமாக கற்களை வீசி அடித்ததாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர், அங்கு நின்றிருந்த இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் எடுத்து, அதை பாட்டில்களில் நிரப்பி வீசத் தொடங்கினர்.

கலவரத்தைக் கட்டுப்படுத்த, கொண்டு வரப்பட்ட வஜ்ரா (தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்) வாகனம், தீயணைப்பு வாகனம், போலீஸாரின் கார், ஜீப் அனைத்தும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. சுகாதாரத் துறைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ், ஜீப் ஆகியவையும் கல்வீச்சில் சேதமடைந்தன. ஏராளமான அரசு, தனியார் வாகனங்களும் கல் வீச்சில் உருக்குலைந்து கிடந்ததைக் காண முடிந்தது.

கூட்டத்தைக் கலைக்க, கண்ணீர்ப் புகை குண்டு வீசியும் நிலைமை கட்டுக்குள் வராததால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியானார்கள். இதில் இருவர் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கும், இரண்டு பேரின் உடல் பரமக்குடி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டன. இறந் தவர்கள் பாக்கெட்டிலிருந்த மொபைல் போன்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன. இதை வைத்துத்தான் போலீஸார், இறந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிந்தனர்.

இந்தச் சம்பவத்தையொட்டி தென் மாவட்டங்களில் பதற்றம் அதிகரித்தது. சிவகங்கை மாவட்டம் பொட்டப்பாளையம் கிராமம் பாட்டம் என்ற இடத்திலிருந்து பரமக்குடிக்கு வேனில் சென்றவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மதுரை புறநகர் சிந்தாமணி செக்போஸ்ட் அருகே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பெண் போலீஸார் ஒருவரை அந்தக் கும்பல் தாக்க, பதிலுக்கு போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜெயபிரசாந்த், பாலகிருஷ்ணன் என இருவர் காயமடைந்தனர்.

‘‘இது ஒரே நாளில் ஏற்பட்ட நிகழ்வல்ல. கடந்த எட்டு மாதங்களாக நீறுபூத்த நெருப்பாக இருந்த விஷயம் வெடித்திருக்கிறது’’ என்று இந்தக் கலவரத்திற்குக் காரணம் சொல்கிறார்கள் பரமக்குடி மக்கள்.

ஜான் பாண்டியன் பரமக்குடி வந்தால், படுகொலை செய்யப்பட்ட மாணவன் பழனிக்குமார் வீட்டுக்குச் செல்வார். அதனால் பிரச்னை ஏற்பட்டு விடும் என காவல்துறை க ருதியது. அதுமட்டுமின்றி அவர் இங்கு வந்தால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் காவல்துறை நினைக்கிறது. அப்படியானால் இவருக்கு யாரால் ஆபத்து ஏற்படுமோ அவர்களைத் தானே காவல்துறை கைது செய்திருக்க வேண்டும்?

“ஒரு சமூகத்தினரை அவமானப்படுத்துவது போல் சுவரில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அதுதான் இந்த மோதலின் அடிப்படைக் காரணம்’’ என்கிறார்கள் ஊர்க்காரர்களில் சிலர்.

“தற்காப்புக்காகவும், பொதுச்சொத்துக்களைப் பாதுகாக்கும் வகையிலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்’’ என அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இறந்தவர்கள் கு டும்பத்துக்கு தலா ஒரு லட்சம் அறிவித்திருக்கிறார். இந்தக் கலவரம் தென் மாவட்டங்களில் பரவி விடக்கூடாது என்பதில் அரசு அதிக அக்கறை எடுத்து வருகிறது. காவ ல்துறையை மட்டுமின்றி வருவாய்த்துறையினரையும் இணைத்து கிராமம் வாரியாக அமைதிக் குழுக்களை அமைக்க அரசு யோசித்து வருகிறதாம். அதுமட்டுமில்லாமல் அ.தி.மு.க.வில் உள்ள தலித் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணியில் உள்ள தலித் தலைவர்களிடம் முதல்வர் தொடர்ந்து யோசனை கேட்டு வருகிறாராம். தென் மாவட்டங்களில் மேலும் கவனம் தேவை என்பதை முதல்வர் அறிந்திருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

சிறையில் இருந்து வெளியே வந்த ஜான் பாண்டியன், திருமாவளவனுடன் நெருங்கி வந்தார். பரமக்குடி கலவரங்களைப் பார்க்கும் போது, பெருமளவில் திட்டமிட்டு நடத் தப்பட்டது போல் தெரிவதாகக் கூறும் போலீஸார், ‘‘இந்த திட்டமிடுதல் ஜான் பாண்டியனுக்குத் தெரியுமா? என்பது தெரியவில்லை. இதன் பின்னணியில் திருமாவளவன் இ ருக்கலாம் என்றும் சந்தேகம் இருக்கிறது’’ என்கிறார்கள். வழக்கமாக விருதுநகர், மானாமதுரை வழியாக பரமக்குடி வரும் ஜான் பாண்டியன் இந்தமுறை கமுதி வழியாக வர முயன்றதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இவர்கள் இருவரையும் வேறு யாராவது இயக்குவார்களோ என்ற சந்தேகமும் போலீஸுக்கு இருக்கிறது.

ஆட்சி மாறியதில் இருந்தே தி.மு.க.வினர் வரிசையாக உள்ளே போய்க் கொண்டிருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் எந்த அனுதாபத்தையும் தி.மு.க.விற்குப் பெற்றுத் தரவில்லை. உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இது தனக்கு பெருமளவு பின்னடைவாக இருக்கும் என தி.மு.க. நினைக்கிறது. எனவே, இந்தக் கலவரத்தின் பின்னணியில் தி.மு.க. இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை செல்கிறது. எந்த பிரச்னைக்கும் அறிக்கை கொடுக்கும் கருணாநிதி இதற்கு அறிக்கை கொடுக்காததை காரணமாகச் சொல்கிறார்கள்.

இதனிடையே சட்டப்பேரவையில் இதுகுறித்து நடந்த விவாதத்திற்குப் பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, ‘ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும்’ என்று அறிவித்துள்ளார்.

thanks to kumudam reporter.

இச்செய்தியின் படங்கள் பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=33802

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.