Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தரும், சுரேசும் மகிந்தவின் சதியில் வீழ்ந்து விட்டனரா?- இரா.துரைரத்தினம்

Featured Replies

13ஆவது திருத்தத்தை தாண்டியும் செல்வதா? : அதிகாரப் பகிர்வுக்கு கிளம்புகிறது எதிர்ப்பு; அரசின் மூத்த அமைச்சர்களே போர்க்கொடி

தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் அரசின் முடிவுக்கு அமைச்சர்கள் சிலரே கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். சர்வதேச அழுத்தத்துக்கு அரசு அடிபணிந்து விட்டது என்ற குற்றச்சாட்டை உதயனிடம் தெரிவித்த மூத்த அமைச்சர் ஒருவர், அரசு கூறுவது போன்று அரசமைப்பின் 13ஆவது திருத் தத்துக்கு அப்பால் சென்று ஒரு தீர்வைக் காண நாம் விடமாட்டோம் என்று அழுத்தம் திருத்த மாகத் தெரிவித்தார்.

தேசியப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அரசுக்கும், கூட்டமைப்பினருக்குமிடையில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள பேச்சில் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பது தொடர்பில் இரு தரப்புகளும் இணங்கி இருந்தன. பகிரப்பட வேண்டிய அதிகாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த வரைவில் தெரிவிக்கப்பட்டிருந்த 51 அதிகாரங்களில் 18 அதிகாரங்கள் 13ஆவது திருத்தத்துக்கு அப்பாலானவை என்று அரசு தெரிவித்திருந்தது. எனினும் அவை குறித்துப் பேசித் தீர்க்கலாம் என்றும் அது தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அரசு 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு வழங்க எடுக்கும் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவதன் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுக்க அமைச்சர்மார் சிலர் தீர்மானித்துள்ளனர். அந்த எதிர்ப்பு அரசினால் பொருட்படுத்தப்படாத பட்சத்தில் அமைச்சர் பதவிகளையும் தூக்கி எறியவும் தாம் தயாராக இருக்கிறார்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் உதயனிடம் பேசிய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர், "13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு வழங்கவேண்டுமென்று சர்வதேச அழுத்தம் அரசுக்கு வந்துவிட்டது. அரசு

இதனை ஏற்றுக்கொண்டு செயற்பட்டால் இலங்கையில் ஆட்சி ஸ்திரமற்றுப் போய்விடும். இந்த நிலைமையைப் பயன்படுத்தி சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்த சர்வதேச நாடுகள் முயல்கின்றன. எனவே, எமது நாட்டையும் எமது தலைவர்களையும் காப்பாற்றுவது எமது பொறுப்பு. 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் ஒரு திருத்தத்தை வரவே விடமாட்டோம்'' என்று கூறினார்.ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் இது குறித்து நேரடிப் பேச்சு நடத்தவும் இந்த அமைச்சர்மார் தயாராகியிருக்கின்றனர். http://onlineuthayan...285565720715161

  • Replies 79
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒன்றுபட்டு வெளிப்படுத்தக்கூடிய ஒரு அரசியல் தலைமை காலத்தின் கட்டாயம் என்ற அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

· தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம்.

· இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு பிராந்தியம் தமிழர்களின் தாயகம்.

· தமிழ்த் தேசத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டு.

என்ற கோட்பாடுகள் அங்கீகரிக்கபடல் வேண்டும். இம்மூன்று அடிப்படைகளும் தமிழ்மக்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதையும், அதற்குத் தனித்துவமான இறைமை உண்டு என்பதையும் வலியுறுத்துகின்றன. இத்தகைய அங்கீகாரம் தருகின்ற அரசியல் அந்தஸ்த்தின் நிலை நின்றே தமிழர் தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியும்.

. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலான அரசியற் பேச்சுவார்த்தை மூலம்தான் தமிழர்களின் அரசியற் பிரச்சினைக்கான தீர்வை நாம் எட்ட முடியும். இந்தப் பாதையிலிருந்து தமிழர்களின் அரசியற் தலைமைகள் ஒருபோதும் விலகிப்பயணிக்க முடியாது.

இதனையே தமிழ்மக்கள் மீண்டும் மீண்டும வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். 2001 ம் 2004 ம் ஆண்டு 2010 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களில் த.தே.கூ வினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையும் இதுவே. இந்த நிலைப்பாடு தமிழர்களின் அரசியற் கொள்கைகளிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாதது. சமரசத்திற்கு அப்பாற்பட்டது.

அந்த எதிர்ப்பு அரசினால் பொருட்படுத்தப்படாத பட்சத்தில் அமைச்சர் பதவிகளையும் தூக்கி எறியவும் தாம் தயாராக இருக்கிறார்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் உதயனிடம் பேசிய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர், "13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு வழங்கவேண்டுமென்று சர்வதேச அழுத்தம் அரசுக்கு வந்துவிட்டது. அரசு

இதனை ஏற்றுக்கொண்டு செயற்பட்டால் இலங்கையில் ஆட்சி ஸ்திரமற்றுப் போய்விடும். இந்த நிலைமையைப் பயன்படுத்தி சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்த சர்வதேச நாடுகள் முயல்கின்றன. எனவே, எமது நாட்டையும் எமது தலைவர்களையும் காப்பாற்றுவது எமது பொறுப்பு.

இந்த வீரப்பிரதாபங்கள் எல்லாம் தலைக்கு கீழ் வெள்ளம் இருக்கும் வரை தான்.

13ஆவது திருத்தத்தை தாண்டியும் செல்வதா? : அதிகாரப் பகிர்வுக்கு கிளம்புகிறது எதிர்ப்பு; அரசின் மூத்த அமைச்சர்களே போர்க்கொடி

உதயனைக் கூப்பிட்டு பேட்டி கொடுக்கும்படி யாரோ ஒரு மந்திரி பணிக்க பட்டிருக்கிறார். இல்லையேல், யார் யார் இந்த சில மந்திரிகள், எந்தெந்த இடங்களில் பேசினார்கள், எப்போது முடிவெடுத்தார்கள் எல்லாம் வெளியில் வந்திருக்கும். டக்கி சொல்லியிருந்தாலும் உதயன் வாய் திறக்காது.

Edited by மல்லையூரான்

அரசுடன் கட்டம் கட்டமான பேச்சு என்பது பொய்: சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையிலான பேச்சு கட்டம் கட்டமாக இடம்பெறுமென்றும் எடுக்கப்படும் முடிவுகள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவினாலேயே அங்கீகரிக்கப்படுமெனவும் வெளிவந்த செய்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முற்றாக மறுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையிலான பேச்சு தொடர்பில் வெளிவந்த வெவ்வேறுபட்ட செய்திகள் தொடர்பில் சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்படி குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் தமிழ்மிரருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்...

அரசுக்கும் எங்களுக்குமிடையிலான பேச்சு தொடர்பில் நாங்கள் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தோம். அவ்வறிக்கையில் கட்டம் கட்டமான பேச்சு என்பது பற்றி ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படியிருக்கையில் கட்டம் கட்டமான பேச்சு என்பது பற்றி செய்திகள் வெளிவந்திருப்பது அவர்களின் கற்பனையாகத்தான் இருக்க முடியும். எங்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான பேச்சில் அப்படியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தமிழ் மக்களுக்கு தீர்க்கமானதொரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற நோக்கிலேயே நாங்கள் பேச்சில் ஈடுபடுகின்றோம். இது எங்களுக்கும் அரசுக்குமிடையில் தீர்க்கமான முடிவுகளை தரக்கூடிய பேச்சு. இவ்விடயத்தினை சிலர் திரிவுபடுத்திப் பார்க்கின்றனர். இது முற்றிலும் தவறானதாகும்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கும் எங்களுக்குமிடையில் பேச்சு நடைபெறுமா இல்லையா என்பது பற்றி நாம் இப்பொழுது எதுவும் கூறமுடியாது. ஆனால், அரசாங்கத்துடனான பேச்சுக்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். அரசுடனான பேச்சின்மூலம் சுமுகமான அரசியல் தீர்வினையே நாங்கள் எதிர்பாக்கிறோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/28152-2011-09-20-06-00-45.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.