Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- வடக்கு, கிழக்கு இந்தியாவும் அதிர்ந்தது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கிம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- வடக்கு, கிழக்கு இந்தியாவும் அதிர்ந்தது!

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 18, 2011, 19:13 [iST]

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தை மையமாக வைத்து இன்று மாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநில மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

வட கிழக்கு மாநிலமான சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் சிக்கிம்-நேபாள எல்லைப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு 6.8 ரிக்டராக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் விரிசல் கண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிக்கி்ம் மாநிலம் முழுவதும் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் மாநிலமே இருளில் மூழ்கியுள்ளது. உயிரிழப்பு குறித்தோ, பிற சேதம் குறித்தோ விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இன்று மாலை 6.11 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் பெரும் பீதியுடன் வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர். பல இடங்களில் கட்டடங்கள் இடிந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

தரைக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட, கிழக்கு இந்தியாவில் நில அதிர்வுகள்

இதேபோல வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்துள்ளனர்.

டெல்லியின் பல பகுதிகளில் மக்கள் நில அதிர்வுகளை உணர்ந்தனர். டெல்லியின் தென் பகுதியில்தான் நிலஅதிர்வு அதிக அளவில் உணரப்ட்டது. சமீபத்தில்தான் டெல்லியை நிலநடுக்கம் தாக்கியது. அப்போது 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது என்பது நினைவிருக்கலாம்.

பீகார் மாநிலம் பாட்னா, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, உ.பி. மாநிலம் லக்னோ, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தி ஆகிய நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

வடக்கே டெல்லி முதல் கிழக்கே கிழக்கு நேபாளம் வரை பல பகுதிகளை நிலநடுக்கம் ஆட்டிப் படைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.

சிக்கிமை மையமாகக் கொண்ட இந்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மாநிலங்களில் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

Read: In English

நேபாளம், பூடானிலும் நில அதிர்வு

வட இந்தியாவை உலுக்கிய இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட நில அதிர்வுகள் பூடான், நேபாளம் ஆகிய நாடுகளின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் அங்கும் பீதி ஏற்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/09/18/magnitude-6-8-quake-jolts-sikkim-tremors-felt-india-aid0091.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிக்கிம் மாநில பூகம்பத்திற்கு 18 பேர் பலி- மீட்புப் பணியில் விமானப்படை, ராணுவம்

திங்கள்கிழமை, செப்டம்பர் 19, 2011, 8:52

டெல்லி: சிக்கிம் மற்றும் நேபாள எல்லைப் பகுதியை மையமாக கொண்டு தாக்கிய கடும் நிலநடுக்கத்திற்கு 18 பேர் பலியாகியுள்ளனர். இதில் சிக்கிமில் 13 பேரும், நேபாளத்தில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை 6.11 மணியளவில் சிக்கிம்-நேபாள எல்லைப் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இருந்தது. இதன் பாதிப்பை வட இந்தியா மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் உணர்ந்தன. மேலும் நேபாளம், வங்கதேசம், பூட்டான் ஆகிய நாடுகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இந்த பூகம்பத்திற்கு சிக்கிமில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பீகாரில் ஏழு வயது சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். லேட்டகார் என்ற பகுதிதான் பூகம்பத்தால் பெரும் சேதத்தை சந்தித்தது. அங்கு வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். சாலைகள் பெருமளவில் விரிசல் கண்டன.

மேற்கு வங்கத்தில் 4 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் காத்மாண்டுவைச் சேர்ந்தவர்கள். அங்கு இங்கிலாந்து தூதரக அலுவலக கட்டடம் இடிந்து விழுந்தது. ஒரு கார் நசுங்கி சேதமடைந்தது.

லக்னோ, பாட்னா, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

சிக்கிமில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 5.7, 5.1, 4.6 என்ற ரிக்டர் அளவிலான மூன்று ஆப்டர்ஷாக் எனப்படும் தொடர் நில அதிர்வுகளும் ஏற்பட்டன.

சிக்கிம் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல கட்டடங்கள் இடிந்து விட்டன. சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழக கட்டடமும் இடிந்துள்ளது. சட்டசபை கட்டடமும் விரிசல் கண்டுள்ளது.

சிக்கிமில் நிலை கொண்டுள்ள ராணுவத்திற்குத்தான் பூகம்பத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வடக்கு சிக்கிமில் உள்ள ராணுவக் கட்டடம் முழுமையாக சேதமடைந்தது. ஒரு ராணுவப் பஸ்ஸையு்ம், பல வாகனங்களையும் காணவில்லை.

தேசிய பேரிடர் துயர் தீர்ப்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்திய விமானப்படையின் ஐந்து விமானங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ராணுவத்தினரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிலிகுரி-கேங்டாக் நெடுஞ்சாலையில் 25 இடங்களில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. அதைச் சரி செய்ய ராணுவத்தினர் தீவிரமாக முயன்றுள்ளனர்.

கேங்டாக் மற்றும் டார்ஜீலிங்கில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சிக்கிமின் சில பகுதிகளில் தொலைபேசி இணைப்புகளும் செயலிழ்ந்துள்ளன. மேற்கு வங்கத்திலும் தொலைபேசி இணைப்புகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட இந்தியாவில் கடும் நிலநடுக்கம்.

19 செப்டம்பர் 2011

நேபாளம், சிக்கிம் போன்ற பகுதிகள் அல்லாமல் லக்னோ, பாட்னா, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

nepal-quake-300_CI.jpg

நேற்று மாலை 6.11 மணியளவில் சிக்கிம்-நேபாள எல்லைப் பகுதியில் ஏறப்பட்ட கடும் நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயந்துள்ளது.நேபாளத்திலும், வடகிழக்கு இந்தியாவிலும் பலத்த சேதங்கள் இந்த நில நடுக்கத்தால் உருவாகியுள்ளன. ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆக பதிவாகியுள்ள இந்த நடுக்கத்தின் சேதம் எதிர்ப்பாத்ததை விட குறைவாக இருப்பதால் அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளானர்.நேபாளம், சிக்கிம் போன்ற பகுதிகள் அல்லாமல் லக்னோ, பாட்னா, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பெரும்பலான பிரமாண்ட கட்டிடங்கள் பலத்த சேதமாகியுள்ள நிலையில் இந்திய இராணுவம் நேபாளத்திற்கும் சிக்கிமுற்கும் அனுப்பட்டுள்ளது. நிவாரணப்பணிகள் கால நிலை காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

வட இந்தியாவில் கடும் நிலநடுக்கம்.

18-09-2011 - 14:06

சற்று நேரத்தின் முன்னர் வட கிழக்குப் பகுதி மாநிலமான சிக்கிமை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆக பதிவாகியுள்ள கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களாக மணிப்பூர், நாகாலந்து, ஜார்கண்ட், மிசோராம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் காணபட்ட்டதாகவும், இந்த நடுக்கத்தின் உணர்வு அதையும் கடந்து டில்லி, பீஹார் வரை உணரப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதா?என்ற செய்திகள் எதுவும் கிடைக்கப்பெற வில்லை என்றாலும், இந்தியாவில் ஏற்பட்ட கடும் நில நடுக்க அளவு என்று இது கணிக்கப்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலத்தை மையமாக வைத்து இன்று மாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிக்கிம் மாநிலத்தை மையமாக வைத்து இன்று மாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநில மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

வட கிழக்கு மாநிலமான சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் சிக்கிம்-நேபாள எல்லைப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு 6.8 ரிக்டராக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் விரிசல் கண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிக்கி்ம் மாநிலம் முழுவதும் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் மாநிலமே இருளில் மூழ்கியுள்ளது. உயிரிழப்பு குறித்தோ, பிற சேதம் குறித்தோ விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இன்று மாலை 6.11 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் பெரும் பீதியுடன் வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர். பல இடங்களில் கட்டடங்கள் இடிந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

தரைக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட, கிழக்கு இந்தியாவில் நில அதிர்வுகள்

இதேபோல வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்துள்ளனர்.

டெல்லியின் பல பகுதிகளில் மக்கள் நில அதிர்வுகளை உணர்ந்தனர். டெல்லியின் தென் பகுதியில்தான் நிலஅதிர்வு அதிக அளவில் உணரப்ட்டது. சமீபத்தில்தான் டெல்லியை நிலநடுக்கம் தாக்கியது. அப்போது 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது என்பது நினைவிருக்கலாம்.

பீகார் மாநிலம் பாட்னா, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, உ.பி. மாநிலம் லக்னோ, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தி ஆகிய நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

வடக்கே டெல்லி முதல் கிழக்கே கிழக்கு நேபாளம் வரை பல பகுதிகளை நிலநடுக்கம் ஆட்டிப் படைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.

சிக்கிமை மையமாகக் கொண்ட இந்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மாநிலங்களில் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

நேபாளம், பூடானிலும் நில அதிர்வு

வட இந்தியாவை உலுக்கிய இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட நில அதிர்வுகள் பூடான், நேபாளம் ஆகிய நாடுகளின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் அங்கும் பீதி ஏற்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/67376/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.