Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர்ந்த தமிழர்களை அடக்க ரொஹான் குணரட்ன புதிய ஆலோசனை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்களை அடக்கிவிட சிறீலங்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே. இந்த அடக்குதலுக்கு தற்போது பேராசிரியர் ரொஹான் குணரட்ன புதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் சிறீலங்காவிற்கு எதிரான பிரசாரங்களை முறியடிப்பதற்கான எதிர் பிரச்சாரங்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான ஆலோசனைப் பிரிவொன்றையும் புலம்பெயர்ந்தோர் ஆலோசனைப் பிரிவொன்றையும் ஏற்படுத்த வேண்டும் என சிறீலங்கா அரசாங்கத்துக்கு பயங்கரவாத விவகார நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன ஆலோசனை வழங்கியுள்ளார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற யுத்தத்துக்குப் பின்னரான சிறீலங்காவின் சவால்கள் எனும் கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். எமது தூதரகங்கள் மேலும் வினைத்திறனானதாக இருக்கவேண்டும். புலிகளினால் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படும் பொய்யான பிரசாரங்களை வெளிவிவகார அமைச்சினால் முறியடிக்க முடியவில்லை. புலிகளின் தலைமைத்துவம் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் சர்வதேசவலையமைப்புக்கு அரசாங்கத்தினால் தனியாக பதிலடிகொடுக்க முடியவில்லை.

எமது வெளிநாட்டு பங்காளர்களுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். புலிகள் தற்போது ஒரு பிரசார அமைப்பாக மாறியுள்ளது. புலம்பெயர்ந்தோருடன் செயற்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.1995ம் ஆண்டு 95 சதவீதமான ஆயுதங்கள் லெபனான் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாங்கப்பட்டன. 1997ல் 95 சதவீதமான ஆயுதங்கள் வடகொரியாவிலிருந்து வாங்கப்பட்டன. புலிகளின் முன்னணி ஆயுத முகவர்களை கைது செய்வதற்கு அமெரிக்கப் புலனாய்வுத்துறை எமக்கு மிக உதவியாக இருந்தது எனவும் ரொஹான் குணரட்ன தெரிவித்தார்.

இதேவேளை, போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வலுவான பரப்புரை வலயமைப்பு ஒன்று தேவையான சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளில் இருந்து சென்ற இலங்கையர்கள் சிலரை அலரி மாளிகையில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேற்கத்தைய நாடுகளில் வாழ்கின்ற விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகின்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வகையிலான பரப்புரை பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதற்கு வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்கள் இவ்விடயம் தொடர்பில் முக்கிய பங்காற்ற வேண்டும். வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டபோரின் போது படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு, சனல் 4 தொலைக்காட்சி மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் காத்திரமான ஆதாரங்களை முன்வைத்துள்ளன.

இந் நிலையில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு எதிராக இக்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு,சர்வதேச மனித உரிமை அமைப்

புக்கள் மற்றும் மேற்கத்தைய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந் நிலையில் சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக காணப்படும் பாதகமான நிலைமைகளை மாற்றியமைக்கும் நோக்குடனேயே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி - ஈழமுரசு

http://www.tamilkathir.com/news/5316/58//d,full_article.aspx

பயங்கரவாத விவகார நிபுணர் என்பதற்காக எதையாவது சொல்லித்தான் ஆக வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் சிறீலங்காவிற்கு எதிரான பிரசாரங்களை முறியடிப்பதற்கான எதிர் பிரச்சாரங்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான ஆலோசனைப் பிரிவொன்றையும் புலம்பெயர்ந்தோர் ஆலோசனைப் பிரிவொன்றையும் ஏற்படுத்த வேண்டும் என சிறீலங்கா அரசாங்கத்துக்கு பயங்கரவாத விவகார நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆனால் இப்படிப்பிரிவுகள் மேற்கொண்டுதான் உருவாக்கப்படல் வேண்டும் - சிங்களம் இதுவரை இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது தம்மையே ஏமாற்றும் கூற்றாகும்.

எங்களை எந்த சிறிலங்கா அதிகாரியும் ஒன்றுமே செய்யமுடியாது. நாங்கள் அகதியாகத்தான் புலம் பெயர்ந்தோம்.எங்களிடம் உங்கள் நாட்டு ஆவணங்கள் ஏதுமில்லை..எங்களுக்கு நீங்கள் இரட்டை வதிவிட உரிமையும் தரவில்லை.எங்களுக்கு உங்கள் நாட்டுக்கு வரவேண்டிய தேவையுமில்லை.வரப்போவதுமில்லை.ஆனால் எங்கள் உறவுகளுக்கு ஒரு தெஅசம் தேவை அது தான் தமிழீழம்.அதை எப்படியும் பெற்றுகொடுப்போம்.அதுவரை எமது போராட்டம் தொடரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.