Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைநகரைக் கைப்பற்றப் போவது யார்? நிர்ணயிக்கும் சிறுபான்மையின வாக்குகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைநகரைக் கைப்பற்றப் போவது யார்? நிர்ணயிக்கும் சிறுபான்மையின வாக்குகள் _

வீரகேசரி இணையம் 9/26/2011 2:20:28 PM

பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் சமமான முக்கியத்துவத்துடன் கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் தலைநகரைத் தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. இதனைவிட சிறுபான்மையினக் கட்சிகளும் இத்தேர்தலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் பொதுவாக ஒரு மினித் தேர்தலாகக் கருதப்படுவதே வழமை. ஆரவாரங்கள் இல்லாத ஒன்றாகவே அது நடைபெற்று முடிவடைந்து விடுகின்றது. இது ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியளவிலான தேர்தலாக இருப்பதில்லை என்பதால் தேசிய ரீதியான முக்கியத்துவமும் இதற்குக் கிடைப்பதில்லை. ஆனால், அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல் ஒரு பொதுத் தேர்தலுக்கான ஆரவாரங்களுடன் சூடுபிடித்திருக்கின்றது.

ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெறப்போகும் இந்தத் தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் பெறுவதற்கு சுவாரஸ்யமான சில காரணங்கள் உள்ளன.

1. மக்கள் இப்போதும் தம்முடன் நிற்கின்றார்கள் என்பதைக் காட்டிக்கொள்வதற்கு இத்தேர்தலில் வெற்றிபெற்றுக் காட்ட வேண்டிய தேவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இருக்கின்றது.

2. மறுபுறத்தில் கட்சியில் தலைமைப் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இத்தேர்தலில் வெற்றிபெற்றேயாகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது.

3. தன்னுடைய தம்பி ஐ.தே.க.வில் வெற்றிபெற்று ஆளும் கட்சிக்குச் சென்றதை கொழும்பு வாழ் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் தமிழர்கள் மத்தியில் தனக்குள்ள செல்வாக்கையும் வெளிப்படுத்திக் காட்ட வேண்டிய தேவை மனோகணேசனுக்கு இருக்கின்றது என்றபடியால், அவர் நேரடியாகவே களம் இறங்கியுள்ளார்.

இந்த நிலையில், கொழும்பு மாநகரசபையின் அபிவிருத்தி என்பதைப் பிரதான கோஷமாகக் காட்டிக் கொண்டு பிரதான கட்சிகள் களத்தில் குதித்திருந்தாலும், ஒவ்வொரு கட்சியும் தமக்கென வெவ் வேறு நிகழ்ச்சி நிரல்களுடனேயே உள்ளனர். இதற்காக ஒவ்வொரு தரப்பினரும் வகுத்துக் கொண்டுள்ள உபாயங்கள் எவ்வாறானவையாக அமைந்திருக்கின்றன அவை எந்தளவுக்கு வெற்றிபெறும் என்பதையிட்டு சுருக்கமாகப் பார்ப்போம்.

கொழும்பு மாநகரசபை ஐந்து பாராளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. கொழும்பு வடக்கு, கொழும்பு கிழக்கு, கொழும்பு மேற்கு, கொழும்பு மத்தி மற்றும் பொரளை என்பனவே அவை. இதில் மூன்று தொகுதிகள் சிறுபான்மையின மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டவை என்பது கவனிக்கத்தக்கது.

கொழும்பு மாநகரசபையின் மொத்த வாக்காளர் தொகை சுமார் நான்கரை இலட்சம் என மதிப்பிடப்படுகின்றது. இதில், சுமார் 50 வீதமானவர்கள் சிறுபான்மையினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான், கடந்த காலங்களில் சிறுபான்மையினத்தவர்கள் பலரும் கொழும்பின் மேயர்களாகவும் பிரதி மேயர்களாகவும் இருந்துள்ளார்கள். கொழும்பு ஒரு பல்லின சமூகத்தைக் கொண்ட நகராக இருப்பதால் இது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்துள்ளது. அதேவேளையில், தலைநகரின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் சிறுபான்மையினருடைய பங்கு பிரதானமாக இருந்து வருகின்றது.

அதேவேளையில் இதில் கவனிக்கத்தக்க மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், கொழும்பு மாநகரசபைக்காக கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் பெரும்பாலும் ஐ.தே.கட்சியே வெற்றி பெற்றிருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது அதன் ஆதரவு அணிகளோ கொழும்பு மாநகரைக் கைப்பற்றியதாக சரித்திரம் இல்லை. இறுதியாக 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் கூட, ஐ.தே.க.வின் வேட்பாளர் பட்டியல் நிராகரிக்கப்பட்டு அந்தக் கட்சிக்கு வாக்களிக்க முடியாத நிலை தலைநகர மக்களுக்கு ஏற்பட்டதால், சுயேட்சையாகப் போட்டியிட்ட ஓட்டோ சாரதி ஒருவரை அவர்கள் மேயராகத் தெரிவு செய்திருந்தமை மறக்க முடியாத ஒன்று. அந்த சந் தர்ப்பத்தில் கூட, ஆளும் கட்சிக்கு சார்பாக தலைநகர மக்கள் வாக்களிக்கவில்லை. அந்த வகையில் கொழும்பு யானையின் கோட்டையாகவே இருந்துவருகின்றது. இந்தக் கோட்டையை ஐ.தே.க. தக்கவைக்குமா? என்பதுதான் இன்றுள்ள கேள்வி!

ஆளும் கட்சியின் உபாயம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், கடந்த தேர்தல்களின் போது வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டைகளை அவரால் வீழ்த்த முடியாவிட்டாலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள ஐ.தே.க.வின் கோட்டைகள் அனைத்தையுமே வீழ்த்திவிட்டார். கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின் முடிவுகள் இதற்கு சான்றாகும். இந்த நிலையில் ஐ.தே.க.விற்கு எஞ்சியுள்ள ஒரேயொரு கோட்டை கொழும்புதான். கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலுள்ள தேர்தல் தொகுதிகள் பலவற்றில் ஆளும் கட்சி வெற்றி பெற்றிருந் தாலும் கூட கொழும்பு மாநகரசபையில் ஆளும் கட்சி வெற்றிபெற்று சரித்திர சாதனை படைக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், தலைநகரைக் கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட் டால் ஆளும் கட்சிக்கு அது ஒர் கௌரவப் பிரச்சினையாக இருக்கும்.

வடபகுதியில் இரு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஆளுங்கட்சி மண்ணைக் கவ்வியது. இந்த நிலையில் கொழும்பைக் கைப்பற்றுவதன் மூலமாகத்தான் சிறுபான்மையினர் ஓரளவுக்காவது தம்முடன் இணைந்திருக்கின்றார்கள் என சர்வதேச சமூகத்துக்குக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தலைமையில் ஆளுங்கட்சி அணி தலைநகரில் களமி றங்கியுள்ள அதேவேளையில், அதில் கொழும்பு மாநகர முன்னாள் மேயர் கணேசலிங்கத்தின் மனைவி யமுனா கணேசலிங்கமும் களமிறக்கப்பட்டுள்ளார். கணேசலிங்கம் ஐ.தே.க.வின் பொருளாளராக இருந்தவர். பிரதி மேயராகவும், சில காலம் மேயராகவும் பதவி வகித்தவர். அவரது மனைவி இப்போது கட்சிமாறி ஆளும் கட்சியில் களம் இறங்கியுள்ளார். அவர் மூலமாக தமிழர் களின் வாக்குகளைப் பெறலாம் என்ற ஆளும் கட்சியின் உபாயம் எந்தளவுக்குப் பலனளிக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கடந்த நான்கு வருட காலமாக இடம்பெற்ற தேர்தல்கள் அனைத்திலும் போர் வெற்றியையும், சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக தாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் மையப்படுத்தியதாகவே அரசின் பிரசாரங்கள் இருந்துள்ளன. ஆனால், கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல் பிரசாரத்தில் இந்த உத்தியை அரசு மாற்றிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. கொழும்பை அழகுபடுத்துதல், சுகாதார வசதிகள் போன்றனவே தற்போதைய பிரசாரக் கோஷங்களாக உள்ளன. கொழும்பு சிறுபான்மையினரை சுமார் 50 வீதமாகக் கொண்டதாக இருப்பதால், போர் வெற்றிக் கோஷங்கள் வாக்குகளை அள்ளித் தரப்போவதில்லை என்பதை ஆளும் கட்சி சரியாகவே மதிப்பிட்டுள்ளது. அதனால்தானோ அந்தக் கோஷத்தை அரச தரப்பு கொழும்பில் மாற்றிக்கொண்டுள்ளது.

ஐ.தே.க.வின் நெருக்கடிகள்

கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது ஐ.தே.க. இரு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது.

1. தலைமைத்துவப் பிரச்சினை

2. மனோகணேசனை எப்படியாவது சமாளித்து ஐ.தே.க.வுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது.

இதில் உட்கட்சிப் பிரச்சினை தற்காலிகமாக ஓய்ந்திருப்பது ரணிலுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தாலும் கூட, தேர்தல்களில் ஐ.தே.க. தோல்வியடையும் சந்தர்ப்பங்களிலேயே ரணிலுக்கு எதிரான உட்கட்சிக் கிளர்ச்சி தீவிரமடைகின்றது. இரு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஐ.தே.க. தோல்வியடைந்த நிலையிலேயே கட்சித் தலைமையை மாற்றுவதாக சஜித் பிரேமதாச அணியினர் அறிவித்திருந்தார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்க வேண்டிய விடயம்.

இப்போது தேர்தல் பிரசாரம் உச்சமடைந்திருப்பதால் உட்கட்சி மோதல்கள் ஓய்ந்திருப்பது போன்ற ஒரு தோற்றம் காணப்பட்டாலும்;, தேர்தலில் ஐ.தே.க. கோட்டை விட்டால் ரணிலின் தலைமைப் பதவிக்கு அரோகரா சொல்ல வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடும். ஏனெனில் இதுவரையில் யானை தோற்காத ஒரே இடம் கொழும்புதான். கொழும்பையும் ரணில் கோட்டைவிட்டால், சஜித் அணியினர் பொறுத்துக்கொண்டிருப்பார்களா?

அந்த வகையில்- ரணிலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகவும் இது அமைந்திருப்பது இத்தேர்தலின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம். அதேவேளையில், ரணிலின் எதிராளிகள் இப்போது அமைதியாக இருந்தாலும் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் ஐ.தே.க.வின் வெற்றிக்காக அவர்கள் முழுமனதுடன் உழைப்பார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.

ஐ.தே.க.வுக்குள்ள இரண்டாவது பிரச்சினை சிறுபான்மையினரின் வாக்குகள். கடந்த காலங்களில் கொழும்பு மாநகரசபையில் ஐ.தே.க.வின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் சிறுபான்மையினரின் வாக்குகளே முக்கியத்துவம் பெற்றிருந்தன. கொழும்பு மத்தியில் பெரும்பான்மையாக வசிக்கும் முஸ்லிம்களும், கொழும்பு வடக்கு மற்றும் கொழும்பு மேற்கு பகுதிகளில் கணிசமாக உள்ள தமிழர்களும் யானைக்கே வாக்களித்துப் பழக்கப்பட்டவர்கள்.

கடந்த இரண்டு தேர்தல்களில் மனோ கணேசன் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைந்து களம் இறங்கியமையாலேயே தமிழ் வாக்குகளை யானையால் பெற முடிந்தது என்பதை இங்கு வெளிப்படையாக கூறமுடியும். இம்முறை ஐ.தே.க.வுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் மனோ தனியாகக் களம் இறங்கியிருக்கின்றார். தன்னுடைய வழமையான வாக்குவங்கிக்கு மேலாக மனோவுக்கு தமிழ் வாக்குகள் பெருமளவுக்குக் கிடைக்கும் என பலராலும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில், 1. போர்க் காலத்தில் காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் விவகாரத்தில் மனோ கணேசன் மேற்கொண்ட நடவடிக்கைகள். 2. கடந்த பொதுத் தேர்தலின் போது ஐ.தே.க.வும், கட்சியின் தேசிய அமைப்பாளராகப் பணியாற்றிய பிரபா கணேசனும் மனோ கணேசனுக்குத் துரோகமிழைத்துவிட்டதாகக் கருதும் மக்கள் மனோ கணேசன் மீது கொண்டுள்ள அனுதாபம். என்பவற்றை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

தமிழர்களின் வாக்குகள்

மேற்கூறப்பட்ட இரண்டும் வாக்குகளாக மாற்றமடையும் போது ஐ.தே.க.வுக்கு கொழும்பில் உள்ள தமிழர்களின் பாரம்பரியமான வாக்குவங்கியில் சரிவு ஏற்படும் எனக் கருதலாம். இதனால்தான் இறுதிக் கட்டம் வரையில் மனோவுடன் சமாதான உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்த ஐ.தே.க. தலைமை பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், மனோ முன்வைத்த நிபந்தனைகளை ஐ.தே.க. தலைமையால் ஏற்க முடியாத நிலையில் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

இருந்தபோதிலும், ஐ.தே.க.வின் மேயர் வேட்பாளர் முஸம்மில் கணிசமான முஸ்லிம் வாக்குகளைக் கவரக்கூடிய ஒருவராகவே கருதப்படுகின்றார். அத்துடன் ஏனைய இனத்தவர்கள் மத்தியிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ளது என்பதும் உண்மை. முஸ்லிம்களின் வாக்குகள் கணிசமாக ஐ.தே.க.வுக்குச் செல்லலாம் என்ற நிலையில்தான், முஸ்லிம் காங்கிரஸை தனியாக களமிறங்குமாறு ஆளும் கட்சி கேட்டுக்கொண்டிருக்கலாம் என்ற கருத்து ஒன்றும் உள்ளது. இருந்த போதிலும், தமிழ் வாக்குகளை மனோவின் அணி பிரித்தெடுக்கும் அளவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரித்தெடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இத்தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் குழப்பாகவே இறுதிவரையில் இருந்துள்ளது. ஆனால், இத்தேர்தலில் கூட்டமைப்பின் வழிகாட் டல்தான் தமிழர்களின் வாக்குளை நிர்ணயிப்பதாக அமைந்திருக்கும் எனக் கூற முடியாது. கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் மனோவுக்கு ஆதரவை வெளிப்படுத்த, மறுபிரிவினர் ஐ.தே.க.வையே ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது. அதனால், உத்தியோகபூர்வமான முறையில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதில் கூட் டமைப்பு திணறுகின்றது.

இந்த நிலையில் தலைநகர மக்கள், குறிப்பாக தமிழர்கள் எவ்வாறானதொரு தீர்மானத்துக்கு வரப்போகிறார்கள் என்பதை அக்டோபர் 8 ஆம் திகதி வரையில் பொறுத்திருந்து பார்ப்போம்!

http://www.virakesar...asp?key_c=34002

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.