Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்களைக் காப்பாற்றுங்கள்: முள்ளிவாய்க்காலில் இருந்து ஜோசேப் அடிகளார் பாப்பரசருக்கு எழுதிய இறுதிக்கடிதம்

Featured Replies

Fr%20Francis%20Joseph.jpg

”நாங்கள் செத்துக்கொண்டிருக்கின்றோம் எங்களைக்காப்பாற்றுங்கள்” இவ்வாறு முள்ளிவாய்க்காலில் இருந்து மே மாதம் 10 நாள் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசேப் பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

.

இந்த கடிதத்தில் சிறிலங்காவில் உள்ள தேவாலைய சபைகள் தமிழ் மக்களை காப்பாற்ற நாதியற்றவர்களாக உள்ளனர். ஆகவே தமிழ் மக்கள் உங்களைத்தான் நம்பி இருக்கின்றோம் எனவும் சுதந்திரத்திற்காக உயிர்ப்பலிகளை கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்றுங்கள் என தனது இறுதிக்கடிதத்தில் பாப்பரசரை இறைஞ்சி எ\ழுதிய கடிதமே அவரது இறுதிக்கடிதமாக இருக்கும் என பிபிசி கூறியுள்ளது.

.

அவரது கடிதத்தில் ; இந்த வாரம் வரை 3318 பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் 4000 பேர்வரையில் காயம் அடைந்து உயிருக்காக போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். விமானத்தாக்குதல்கள் எறிகளைத்தாக்குதல்கள் தொடர்ந்து சிறிலங்கா அரச படைகளால் நடத்தப்படுகின்றன. மக்கள் செய்வதறியாது உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

.

ஆனால் சிறிலங்காவில் உள்ள தேவாலைய சபைகள் மட்டுமல்ல பாப்பரசரும் இந்த கடிதத்தினை குப்பைத்தொட்டியில் போட்டுள்ளனர். எல்லாமே நடந்து முடிந்த பின்னர்தான் பாப்பரசர் மெனிக் முகாமிற்கு வந்து சேர்ந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொ|ண்டுள்ளார்.

.

சுதந்திரத்திற்காகவும், ஏழை எழிய மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்த ஆண்டவர் ஜேசுவின் திருச்சபையினை வழி நடத்தும் பாப்பரசர் 40,000 மக்கள் பலி எடுக்கப்படும்வரை பார்த்துக்கொண்டுதான் இருந்துள்ளார்.

.

அடுத்ததாக இந்த பாப்பரசருக்கு கடிதம் எழுதிய அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் எங்கே?

.

2009 மே மாதம் 18 ஆம் நாள் அருட்திரு பிரான்சிஸ் ஜோசஃப் அவர்கள் சில பொதுமக்கள் மற்றும் போராளிகளுடன் ஓமந்தை இராணுவ சாவடியில் சரணடைந்துள்ளார். அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இவ்வாறு மஹிந்த இராஜபக்‌ஷவின் நல்லிணக்க ஆணைக்குழு முன்னால் சாட்சியம் அளித்துள்ளார் மட்டு மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை.

.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

.

அருட்திரு பிரான்சிஸ் ஜோசஃப் அவர்கள் முன்நாள் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் அதிபர் ஆனால் துரதிஸ்டவசமாக மத அமைப்புக்களோ அல்லது வெளி நாடுகளில் உள்ள சென் பற்றிக்ஸ் பழைய மாணவர்களோ அருட்திரு பிரான்சிஸ் ஜோசஃப் அடிகளாரின் பிரச்சினை தொடர்பில் கேள்வி எழுப்பவில்லை. மனித உரிமை அமைப்புக்களை நாடவிலை ஏன்?

.

அவரிடம் கல்விகற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் புலம்பெயர் நாடுகளில் பெரும் பதவிகளில் உள்ளார்களே. அவர்களாவது குரல் கொடுப்பார்களா?

http://www.eelanatha...%AE%AE%E0%AF%8D

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

ககத்தோலிக்கத் திருச்சபை மேற்கத்தைய நாடுகளின் செல்லப்பிள்ளை. பாப்பரசர் ஒருபோதுமே அமெரிக்க பிரித்தானிய நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேசப்போவதில்லை. 2009 மேயில் மகிந்த தமிழரைக் குதறிக்கொண்டிருந்த தறுவாயில், கொழும்புப் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். அதாவது, மகிந்த போன்ற மென்போக்கான சிங்களத்தலைவர்கள் பயங்கரவாதத்திற்கெதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளை தடுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு தடுத்தால் முழுநாடுமே தீவிர சிங்கள கடும்போக்காளர்களான ஜாதிக்க ஹெல உறுமய, ஜே வீ பீ போன்றவர்களின் கைக்குள் போய்விடும், ஆகவே தயவுசெய்து மகிந்த நடத்திவரும் யுத்தத்தை எக்காரணம் கொண்டும் தடுக்க வேண்டாம் என்று கூறியதாக விக்கி லீக் தகவல் வெளியிட்டிருக்கிறது.

ஆகவே மல்கம் ரஞ்சித்தின் செய்தியைப் படித்துவிட்டு, ஜோசப் அவர்களின் கடித்தத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர் என்றுதான் நினைக்கிறேன்.

உள்ளூர் கத்தோலிக்கக் குருக்களில் பலர் தமிழத் தேசியத்திற்கு ஆதரவாக இருந்தாலும்கூட, வெளியுலகில் எம்மைப் பயங்கரவாதிகளாகத்தான் பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" வெள்ளையர்கள் எங்கள் நாட்டுக்கு வரும்பொழுது அவர்களிடம் பைபிள் இருந்தது எங்களிடம் எங்கள் நாடு இருந்தது, அவர்கள் திரும்பிச்செல்லும்பொழுது எங்களிடம் பைபிள் இருந்தது அவர்களிடம் எங்கள் நாடு இருந்தது" - ஆப்பிரிக்கா மக்கள் சொன்னது

பாப்பரசர் தம் சில மதகுருக்களின் லீலைகளால் தொல்லைப்படுகிறார். இதைக்கவனிக்க அவருக்கு எங்கே நேரம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.