Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தை திசைதிருப்ப போராளிகளின் விடுதலையை பயன்படுத்துகிறது கொழும்பு! - இராஜதந்திர வட்டாரம் தகவல்

Featured Replies

சர்வதேசத்தை திசைதிருப்ப போராளிகளின் விடுதலையை பயன்படுத்துகிறது கொழும்பு! - இராஜதந்திர வட்டாரம் தகவல்

சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் விடுதலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முனைவதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்த 1,800 விடுதலைப் புலிகளின் போராளிகளை சிறிலங்கா அரசாங்கம் நேற்று (30.09.11) விடுதலை செய்துள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ வாசல்தலமான அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் தூதுவர்கள் முன்னிலையில் இப்போராளிகள் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறும் நோக்குடனேயே சிறிலங்கா அரசாங்கத்தால் இந்நிகழ்வு உரியமுறையில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

2009ஆம் ஆண்டு மே மாதம் வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்த இப்போராளிகளை பார்வையிட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட தொண்டு நிறுவனங்கள் பல கோரிக்கை விடுத்திருந்த போதிலும், சிறிலங்கா அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

அத்துடன், இவ்வாறு சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகளின் விபரங்களை வெளியிடுமாறு சர்வதேச மணிதவுரிமை அமைப்புகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், சிறிலங்கா அரசாங்கம் இப்போராளிகள் குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

இந்நிலையில், அதிகரிந்து வரும் சர்வதேச அழுத்தங்களின் காரணமாகவே வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் தூதுவர்கள் முன்னிலையில் இப்போராளிகளை சிறிலங்கா அரசாங்கம் விடுதலை செய்துள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்நிகழ்வில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றெனிஸ் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது தொழிற்பயிற்சிகளை நிறைவு செய்த போராளிகளுக்கான சான்றிதழ்களையும் வெளிநாட்டு இராஜதந்திரிகளே வழங்கியுள்ளனர்.

ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கம் கடுமையான அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அதேபோன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளச் சென்ற சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியூயோர்க்கில் நடத்திய சந்திப்புகளின் போதும் கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன.

>இந்நிலையில், வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்கும், அவுஸ்திரேலியாவில் இம்மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதைத் தவிர்க்கவுமே சர்வதே இராஜதந்திரிகளின் முன்னிலையில் பெருமளவு விடுதலைப் புலிகளின் போராளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

இதற்கு முன்னதாக சிறிலங்கா அரசாங்கத்தால் இவ்வாறு பெருமளவு விடுதலைப் புலிகளின் போராளிகள் விடுதலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில், வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்து தற்போது புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு விடுதலையாகும் போராளிகளின் இறுதி அணி இதுவென சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இவ்வாறு சரணடைந்த மேலும் நூற்றுக்கணக்கான போராளிகள் சிறிலங்கா படைத்தரப்பினரின் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.

சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்து தற்போது புனர்வாழ்வு வழங்கப்படும் போராளிகள் அனைவரும் இவ்வாண்டு இறுதிக்குள் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவர் என சிறிலங்கா அரசாங்கம் முன்னர் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளின் இறுதி அணியே நேற்று அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை, சிறிலங்கா படைத்தரப்பினரால் மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் உறவினர்கள் மத்தியில் கவலையையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்த சுமார் 12,000 போராளிகளில் சுமார் 800 வரையிலானோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.

இத்துடன், இதனை உறுதிசெய்யும் வகையில் 2,000 போராளிகள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாக நியூயோர்க்கில் கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

இதனால் சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு வழங்கப்பட்டு இதுவரை விடுதலை செய்யப்படாத போராளிகள் மீது சிறிலங்கா அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வி இப்போராளிகளின் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={256C0A0B-46E3-4BAF-91B4-B0F264B905D7}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.