Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வட பகுதியில் 60 வீதமானவர்களுக்கு போதிய உணவில்லை – ஐ.நா. முகவர் நிறுவனங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

food-150x150.jpg

இலங்கையின் வடபகுதியில் உள்ள மக்களில் 60 வீதமானவர்களுக்குப் போதிய உணவு கிடைப்பதில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வருமானத்தைப் பெறுவதற்கான வழிவகைகள் மிகக் குறைவாக இருப்பதே இதற்கான காரணம் என்றும் அவை கூறுகின்றன. இத்தகைய நெருக்கடி நிலையிலும் இலங்கைக்குக் கிடைக்கும் சர்வதேச நிதி உதவி மிகக் குறைந்துள்ளதாக அவை கவலை வெளியிட்டுள்ளன.

வடக்கில் 60 வீதமான மக்களுக்குப் போதிய உணவு இல்லை. அடிப்படை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு வருமானக் குறைவும் உற்பத்திக் குறைவும் தடையாக இருக்கின்றன என்று உலக உணவுத் திட்ட அதிகாரிகள் ஐ.ஆர்ஐ.என். ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளனர். வடமாகாணத்தில் வாழும் அரைப்பங்குக்கும் அதிகமான மக்கள் தமக்கான உணவுப் பொருள்களை வாங்குவதற்கான வருவாயைக் கூடக் கொண்டிருக்கவில்லை என அண்மையில் வெளியிடப்பட்ட உலக உணவுத் திட்டத்தின் ஆய்வறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உண்மையில் இங்கு உணவுப் பொருள்கள் உள்ளன. ஆனால் இவை மிகவும் விலை கூடியவையாகும். இவ்வாறான விலை உயர்ந்த பொருள்களை வாங்குவதற்கான வருவாய், போர் இடம்பெற்ற பகுதிகளுக்குத் திரும்பி வந்துள்ள மக்களிடம் கிடையாது” என அன்ட்ரே குமாச்சர் தெரிவித்தார். இவர் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான முகவர் நிலையத்தின் அதிகாரி இவர்.

இவரது முகவர் நிலையம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் வடக்கில் உள்ள பெரும்பாலான மக்கள் தமது நாளாந்த உழைப்பில் 50 முதல் 90 வீதத்தை தமது உணவுத் தேவைக்காகவே செலவிடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

உதவி குறைகிறது இந்த மக்களுக்குத் தொடர்ந்தும் உணவு நிவாரணம் வழங்க வேண்டி இருக்கும் நிலையிலும் சர்வதேச நிதி உதவிகள் இலக்கைக்குக் குறைந்து வருவதை ஐ.நா. முகவர் நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

போரால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தின் அபவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் “உதவிக்கான கூட்டுத் திட்டம்’ தற்போது 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான நிதிப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசும் ஐ.நா. முகவர் நிறுவனங்களும் இணைந்து செயற்படுத்தும் இந்தத் திட்டத்துக்காகக் கோரிக்கைவிடப்பட்ட 289 மில்லியன் டொலரில் 76.5 மில்லியன் அதாவது 26 சதவீதம் மட்டுமே இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாக செப்ரெம்பர் 27 அன்று தயாரிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கில் பெருபாலான மக்கள் குறைந்த வருமானத்தைப் பெறுகின்றபோதும், இலங்கை இடைநிலை வருமானத்தைப் பெறும் நாடு என்று அண்மையில் உலக வங்கி தரப்படுத்தி இருந்தது. இதனால் மத்திய வருமானத்தைப் பெறும் நாடு ஒன்றுக்கு ஏன் உதவி செய்யவேண்டும் என்று நன்கொடையாளர்கள் நினைக்கிறார்கள் என்கின்றனர் அதிகாரிகள்.

நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டபோதும் வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளில் உடனடியாகக் குறைப்பை மேற்கொள்ளும் திட்டம் ஏதுமில்லை என்று ஐ.நா. முகவர் நிலையங்கள் அறிவித்துள்ளன.

http://www.saritham.com/?p=36881

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.