Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனது இசையில் கிளிநொச்சி மக்கள் பூரித்துப் போனார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது இசையில் கிளிநொச்சி மக்கள் பூரித்துப் போனார்கள் :

09 அக்டோபர் 2011

மக்களின் உண்மை நிலையை இந்திய இசைக்கலைஞர் கிருஷ்ணா மறைக்க முயல்கிறாரா?செம்மணச் செல்வன்

எனது இசையை ரசித்த கிளிநொச்சி மக்கள் பூரித்துப்போனார்கள் என்றும் முப்பது வருடங்களாக அவர்கள் எந்த இசை நிகழ்ச்சியையும் பார்த்தில்லை என்றும் இந்திய இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இவர் கிளிநொச்சியில் கர்நாடக இசை நிகழ்ச்சியை நடத்தியதோடு யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களையும் சந்தித்தாக இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதை ஒரு மேன்மையான அனுபவமாக மிகுந்த மகிழ்ச்சியுடன் எஸ்.எம் கிருஷ்ணா சித்திரித்துள்ளார்.

இவரது கருத்துக்கள் கிளிநொச்சியிலும் தமிழகத்திலும் பலரிடையே வேதனையை தோற்றுவித்துள்ளது. போருக்குப் பின்னர் வன்னியில் வாழும் மக்கள் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் அரசியல் ரீதியான இலக்கை வைத்து கிளிநொச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட இவரது பயணத்தை இலங்கை அரசாங்கம் வழி நடத்தியுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வாறான கருத்துக்கள் வன்னி மக்களின் நெருக்கடி மிக்க வாழ்க்கையை மறைத்து உண்மைக்குப் புறம்பான சூழலை சித்தரித்து அரசியல் செய்வதற்கு பயன்படுத்தப்படுவதாக விசனங்கள் எழுந்துள்ளன.

தனது கர்நாடக இசையினாலும் இவ்வாறான இசை நிகழ்ச்சிகளாலும் கிளிநொச்சி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர் என்று அவர் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர்தான் இப்படி ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த முடிந்தது என்றும் அதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சிடைந்தனர் என்றும் தனக்கு இது ஒரு மேன்மையான அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை புலிகளின் ஆட்சியில் இருந்த கிளிநொச்சியில் 30 வருடங்களின் பின்னர் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த முடிகிறது எனவும் 1960களில் கிளிநொச்சிக்கு டி.எம் சௌந்தர்ராஜன் வருகை தந்து இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் எனவும் இந்திய இசைக்கலைஞர் கிருஷ்ணாவின் வருகை குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தாகவும் இந்தியப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

போருக்குப் பின்னரான வன்னி மக்களின் அப்படிடைப் பிரச்சினைகளை மறைக்கும் முகமாகவும் வன்னி மக்களின் வாழ்க்கையை திசை திருப்பும் முகமாகவும் அங்கு நடக்கும் உண்மையான பிரச்சினைகள் வெளித் தெரியாமலும் இவ்வாறான இசை நிகழ்ச்சிகள் படைத்தரப்பாலும் அரச தரப்பாலும் கிளிநொச்சியில் தொடர்ச்சியாக ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டு மக்கள் கட்டாயமாக கொண்டு செல்லப்படுகிறார்கள்.

அதேவேளை அண்மையில் இந்தியப் பாடகர்களான மனோ, சுஜித்திரா உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு கிளிநொச்சியில் இசை நிகழ்ச்சியை நடத்த வருகை தந்த பொழுது அது இலங்கை ஜனாதிபதிக்கு தேர்தல் பிரசாரத்திற்காக நடத்தப்படவுள்ள அரசியல் இசை நிகழ்ச்சி என்ற உண்மையை ஈழ ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து நிகழ்ச்சியை இரத்துச் செய்திருந்து சென்னை திரும்பியிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கிளிநொச்சி இருந்த காலத்தில் பல இந்திய இசைக்கலைஞர்கள் வருகை தந்து கிளிநொச்சி நகரில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அதேவேளை பல இந்தியப் பாடகர்கள் விடுதலைப் புலிகளுக்கான ஈழப் புரட்சிப் பாடல்களையும் அவர்கள் பாடியுள்ளனர். யுத்த காலங்களிலும் விடுதலைப் புலிகள் இவ்வாறான இசை நிகழ்ச்சிகளை கிளிநொச்சியில் நடத்தியுள்ளனர்.

இவை இப்படியாக இருக்க கிளிநொச்சி இசை நிகழ்ச்சியையும் யாழில் இடம்பெற்ற நிகழ்ச்சியையும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா ஆகியோரே முன்னின்று நடத்தி இருந்தார்கள்.

மாபெரும் துயரங்களிடையேயும் இசை என்பது மனித மனங்களை நெகிழ வைப்பது என்பதும் துயரங்களைச் சுமப்பவர்கள் இசையை ரசிக்க மாட்டார்கள் என யதார்த்தத்திற்கு புறம்பாக எவரும் சிந்திக்க முடியாது என்பதும் உண்மையே. எனினும் இவ்வாறான இசை நிகழ்ச்சிகள் மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்வுகளில் மக்கள் பூரித்தார்கள் திழைத்தார்கள் எனக் கூறுவதற்கும் பிரச்சாரப்படுத்துவதற்கும் பின்னால் உள்ள அரசியல் என்ன என்பதுவே பிரதான கேள்வியாகும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68362/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இசை நிகழ்ச்சியை நடத்தியதோடு யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களையும் சந்தித்தாக இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதை ஒரு மேன்மையான அனுபவமாக மிகுந்த மகிழ்ச்சியுடன் எஸ்.எம் கிருஷ்ணா சித்திரித்துள்ளார்.

இவனுக்கு தந்தியோ தபாலோ அனுப்பினால் சரோஜா தேவி வீட்டுக்குத்தான் போகுதாம் .. என்ன கண்ராவியோ தெரியல..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இசைக்கலைஞர் கிருஷ்ணாவும் ஓர் மலையாளியா???????????

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்புன்னாக்கின் இசையை கேட்டு புண்ணான மனங்கள் ஆறுச்சாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.