Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடங்குளம் அணுமின் நிலையம் முற்றுகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

KOODANKULAM-1.jpg

KOODANKULAM-2.jpg

KOODANKOUAM-3.jpg

KOODANKLAM-5.jpg

KOODANKLAM-4.jpg

HANOYCAPED-6.jpg

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களின் பிரதிநதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தப் பிறகும், முடிவு எட்டப்படாததால் இரண்டாம் கட்டமாக தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 09.10.2011 அன்று தொடங்கினர்.

உண்ணாவிரதம் ஒரு பக்கம் நடைபெற்றாலும், அதோடு தொடர்புடைய தங்களது எதிர்ப்பை மற்றொரு வழியில் தெரிவிப்பதற்காக தீவிரம் ஆனார்கள். அதன் ஒரு அங்கமாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எந்த ஒரு பணியும் நடக்கக் கூடாது என்பதற்காக முற்றுகை போராட்டத்தில் இறங்கினார்கள்.

ஒரு பக்கம் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், போராட்டக் குழுவின் மற்றொரு பிரிவினர், அணுமின் நிலையம் செல்லும் ஒப்பந்த தொழிலாளர் மற்றும் தினக்கூலி தொழிலார்களை கூடங்குளம் எஸ்எஸ்.புரத்தில் வழி மறித்து தடுத்து நிறுத்தினர்.

அதோடு, மூன்றாவது பிரிவினர் செட்டிக்குளம் கூடங்குளம் கடற்கரை சாலை வழியாக வரும் ஒப்பந்தப் பணியாளர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து கூடங்குளம் இதுபோன்ற கடுமையான முற்றுகைக்கு உட்பட்டதால், அரசு இயந்திரங்கள் அங்கே குவிந்தது.

ஆர்டிஓ, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வள்ளியூர் ஏஎஸ்பி விஜயகுமா ஆகியோர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதட்டம் பதவியிருக்க அணுமின் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள எஸ்எஸ்புரம் விளக்கில் சுமார் 30 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கன்னியாகுமரி ராமேஸ்வரம் நெடுஞ்சாலை போக்குவரத்து முடக்கப்பட்டு திணறியது.

இதையறிந்த அதிகாரிகள் வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர். பிரதமரை சந்தித்துவிட்டு வந்தபிறகு, கூடங்குளம் அணுஉலை எதிர்பாளர்களின் எதிர்ப்பு பல்வேறு முறைகளிலும் தீவிரமாக நடத்தப்பட்டதால், அரசு அதிகாரிகள் அதிர்ந்துபோய் உள்ளனர்.

மக்களின் இதுபோன்ற உணர்சிக்கரமான பல்முனை தாக்குதல் போராட்டத்தை இதுவரை நாங்கள் கண்டதில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.nakkheera...ws.aspx?N=63213

இந்த திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் இதனால் தாய்தமிழக உறவுகளுக்கும் தாயகத்தில் இருக்கும் தமிழர்களுக்கும் பாதிப்பு ஏற்படும், ஏன் இந்த திட்டத்தை வட இந்தியாவில் செய்திருக்கவில்லை ? தமிழர்கள் அழியட்டும் தாங்கள் எங்கள் பகுதிகளையும் ஆக்கிரமிக்கவா ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.