Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

30 ஆயிரம் வாக்குகளுடன் தலைநகர தமிழர் தலைமைக் கட்சி என்ற அந்தஸ்து உறுதியாகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30 ஆயிரம் வாக்குகளுடன் தலைநகர தமிழர் தலைமைக் கட்சி என்ற அந்தஸ்து உறுதியாகிறது

  • Sunday, October 16, 2011, 19:08

கொழும்பு மாநகரசபை,தெகிவளை-கல்கிசை மாநகரசபை,கொலொன்னாவை நகரசபை ஆகிய கொழும்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களிலே நமது கட்சியின் தனித்துவமான ஏணிச் சின்னத்திற்கு கிடைத்துள்ள சுமார் 30 ஆயிரம் வாக்குகள் மூலம் தலைநகர தமிழர்களின் தலைமைக்கட்சி என்ற எமது அந்தஸ்து தெட்டத் தெளிவான முறையிலே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 30 ஆயிரம் வாக்குகளை வெகுவிரைவில் 60 ஆயிரமாக மாற்றிக்காட்டுவோம். அதற்கான துணிச்சல் மிக்க வல்லமை எங்களுக்கு இருக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்பிலே கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

கொழும்பு மாநகரசபையிலே நாம் 26,229 வாக்குகளையும் தெகிவளை-கல்கிசை மாநகரசபையில் 2,167 வாக்குகளையும் கொலொன்னாவை நகரசபையில் 939 வாக்குகளையும் பெற்றுள்ளோம். கொழும்பு மாநகரசபையிலே நமது தமிழ் வாக்காளர்களின் தவறுகள் காரணமாக ஏணிச்சின்னத்திற்கும்ää பிறிதொரு சின்னத்திற்கும் வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே எமது ஒட்டுமொத்தமான வாக்குத்தொகை 30 ஆயிரத்தையும் தாண்டுகின்றது. எமது அணியின் சார்பாக கொழும்பு மாவட்டத்திலே மொத்தமாக 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். வரலாற்றில் முதன்முறையாக எமது கட்சியின் சார்பாக கொழும்பு மாநகரசபையில் 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, தெகிவளை-கல்கிசை மாநகரசபையிலும்ää கொலொன்னாவை நகரசபையிலும் நாம் முதன் முறையாக இடம்பிடித்துள்ளோம். கொலொன்னாவை பகுதியில் தேர்தல் தினத்தன்று வன்முறை இடம்பெற்றிருக்காவிட்டால், எமது வாக்காளர்களின் வாக்களிப்பு விகிதம் அதிகரித்து, மேலதிக வாக்குகளையும் உறுப்பினர்களையும் நாம் நிச்சயமாக பெற்றிருப்போம்.

தொகுதிகள் அடிப்படையில் வடகொழும்பிலே நாம் முதன் முறையாக தனித்துவமாக 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளோம். அதேபோல் மத்திய கொழும்பிலே 6ää216 வாக்குகளையும் கொழும்பு மேற்கிலே 4,473 வாக்குகளையும் கொழும்பு கிழக்கிலே 4,056 வாக்குகளையும் பொரளை தொகுதியிலே 1,467 வாக்குகளையும் தமிழ் மக்கள் எமது ஏணிச்சின்னத்திற்கு வழங்கியுள்ளார்கள். கடந்த காலங்களில் பெரும்பான்மை கட்சிகளின் ஏகபோக கோட்டைகளாக இருந்த தொகுதிகளிலே இன்று எமது ஏணிச் சின்ன தமிழ் கொடி பட்டொளி வீசி பறக்கின்றது.

கொழும்பு மாநகரத்தின் ஐந்து தொகுதிகளிலும் அமைந்திருந்த 255 வாக்களிப்பு நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்திய எமது முகவர்களின் தகவல்களின்படி 44,100 தமிழ் பெயர்களை கொண்ட வாக்காளர்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளார்கள். இரண்டு பெரும்பான்மை கட்சிகளிலும் சுமார் 20 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதை தவிர பெருந்தொகையான சுயேட்சைக்குழு தமிழ் வேட்பாளர்களும் போட்டியிட்டார்கள். பெரும்பான்மை கட்சிகளின் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓரிரு தமிழ் வேட்பாளர்களினதும் தோல்வியடைந்த பலரினதும் விருப்பு வாக்குகளை கூட்டி கணக்கெடுக்கும் பொழுது இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் சுமார் 15 ஆயிரம் தமிழ் வாக்குகளை பெற்றுள்ளமை தெரியவருகின்றது. நமது கட்சிக்கு கிடைத்த 26 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளையும் பழுதான வாக்குகளையும் சேர்த்து பார்க்கும் பொழுது 45 சதவிதமான தமிழ் வாக்காளர்களே கொழும்பு மாநகரத்தில் வாக்களித்துள்ளமை பதிவாகியுள்ளது. தமிழ் மக்கள் மத்தியிலே நிலவுகின்ற வாக்களிப்பில் இந்த அக்கறையின்மையை மாற்றுவதே ஜனநாயக மக்கள் முன்னணியின் அடுத்தக்கட்ட செயற்பாடாக இருக்கப்போகின்றது. எதிர்வரும் வாரங்களில் எமது கட்சியிலே கொண்டுவரப்படவிருக்கும் புதிய அமைப்பாளர்களின் நியமனங்கள் மற்றும் சீர்திருத்தங்களை அடுத்து “கொழும்பு மாவட்டத்தில் 60 ஆயிரம் வாக்குகள்” என்ற எமது அடுத்தக்கட்ட இலக்கை நோக்கி நாங்கள் நகருவோம்.

ஒரு காலத்தில் பெரும்பான்மை கட்சிகளின் வாக்கு வங்கிகளாக கொழும்பு மாவட்ட தமிழர்கள் இருந்தார்கள். இன்று தலைநகர தமிழ் வாக்காளர்களின் பாரிய பெரும்பான்மை வாக்குகளை பெறும் அளவிற்கு எமது கட்சி வளர்ந்துள்ளது. எமது கட்சியை ஸ்தாபித்த போது நான் கண்ட கனவு இதுதான். கடந்த தேர்தலின்போது எனக்கு எதிராக தனிப்பட்ட முறையிலே அனைத்து பெரும்பான்மை கட்சிகளின் முகவர்களும் அவதூறுகளை கிளப்பினார்கள். என்னையும் எமது கட்சியையும் தோற்கடிப்பதற்கு கீழ்தரமான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள். இப்பின்னணியிலேயே எங்களுக்கு இந்த மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. இந்த ஜனநாயக தேர்தல் தீர்ப்புகள் கொழும்பு மாவட்ட தமிழர்கள் மத்தியில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தை தெளிவான முறையிலே படம் பிடித்து காட்டுகின்றது. இந்த தமிழ் மக்களின் அங்கீகாரத்திற்கும் ஆணைக்கும் உரித்தான எங்களது பயணம் வெற்றிகரமாக தொடரும்.

http://www.tamilthai.com/?p=28564

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கூட்டமைப்பு மனோ கணேசனுக்கு தமது ஆதரவை செயளவில் காட்ட வேண்டும்.

மனோ கணேசன் வாய்ச் சவடால் அரசியலை கைவிட்டு பொருத்தமான அரசியல் நடவடிக்கைகளை ஆரவாரம் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும். அதுபோல் குடும்ப அரசியல் செய்து பிரபா கணேசன் சிங்களப் பயங்கரவாதிகளிடம் விலை போனதுபோல், ஏனைய உறுப்பினர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும்.

இல்லையெனில் அடுத்த தேர்தலில் கூட்டமைப்பு நேரடியாக களம் இறங்கும்.

ஏற்கனவே இன்னொரு கட்சியைச் சேர்ந்த ராம் என்பவன் விலைபோகக் கூடியவன் என்று நிரூபித்துள்ளான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.