Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு, கிழக்கை மீட்டதன் பின்னர் மட்டக்களப்பில் 85 மதுபானச்சாலைகள் திறப்பு

Featured Replies

2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்தவொரு பட்டதாரிக்கும் அரசாங்கம் வேலை வாய்ப்பு வழங்கவில்லை வடக்கு, கிழக்கு மீட்கப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 85 மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுவா அபிவிருத்தி என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான பா. அரியநேத்திரன் கேள்வி எழுப்பினார்.

2011 ஆம் ஆண்டளவில் நாடளாவிய ரீதியில் 45 ஆயிரம் பட்டதாரிகள் இருக்கின்றனர். அதில் 6,000 பட்டதாகள் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் 45 வயதினையும் தாண்டிய வயது முதிர்ந்த பட்டதாகளாவர் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உøரயாற்றுகையில், வடக்கு, கிழக்கைப் பொறுத்தமட்டில் போர், சுனாமி மற்றும் வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் நாசமடைந்துள்ளன.

2007 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இடம் பெற்ற இடம்பெயர்வுக்கு பின்னர் 20 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான ஓர் நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்னெடுக்கப்படவில்லை.

மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து 600 வீடுகளை கட்டுவதற்காக தலா ஒரு இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்படவில்லை. அதிகாரிகளின் ஊடாகவே பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த முறையினை மாற்ற வேண்டும்.

வடக்கு கிழக்கில் மட்டும் 6000 பட்டதாரிகள் இருக்கின்றனர். 2004 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரை பட்டம் பெற்ற பட்டதாகளில் பலர் 45 வயதை தாண்டிவிட்டனர். வேலையற்று இருக்கின்ற பட்டதாரிகள் வயது முதிர்ந்த பட்டதாரிகளாகவே இருக்கின்றனர்.

2005 ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதனை நாம் வரவேற்கின்றோம். இவ்வாறான நிலையில் அமைச்சரின் செல்வாக்கடிப்படையில் கோட்டா முறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அறிகின்றோம். இது அசாதாரணமானதாகும்.

கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 6000 பட்டதாரிகள் வேலையற்ற பட்டதாரிகளாக இருக்கின்றனர். வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் மீண்டு மொரு போராட்டமாக வெடிக்கும்.

வடக்கு, கிழக்கு மீட்கப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பில் 85 மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறிக்கொண்டு மதுபானசாலைகளே திறக்கப்படுகின்றன. இதுவா அபிவிருத்தி என்றும் வினவினார்.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.