Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வாதிகார அரசு ம‌த்‌திய அரசு- ஜெய‌ல‌லிதா

Featured Replies

சர்வாதிகார அரசு ம‌த்‌திய அரசு- ஜெய‌ல‌லிதா

காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளிடம் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்று கு‌ற்ற‌ம்சாட்டியு‌ள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய அரசு ஜனநாயக விரோதமாக நடக்கிறது எ‌ன்று‌ம் இது ஒரு சர்வாதிகார அரசு என்று‌ம் கூ‌றினா‌ர்.

டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய அபிவிருத்தி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா‌வி‌ன் உரையை வாசித்தார்.

அதில், 12வது ஐந்தாண்டு திட்டத்தை விவாதித்து ஒப்புதல் அளிப்பதற்காக இந்த 56வது தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெறுவதாக நான் அறிகிறேன். இந்த தேசிய அபிவிருத்தி கவுன்சில் கூட்டம் ஒரு சடங்குக்காக கூட்ட படுகிறதேயன்றி இதனால் எந்த பலனும் ஏற்படுவதில்லை என்ற எனது கருத்தை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளை பழிவாங்குவதற்கு மத்திய அரசு தீர்மானித்திருக்கிறதோ என்று கருத வேண்டியிருக்கிறது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் உள்ளவர்களைப்போல காங்கிரஸ் அல்லாத மாநில அரசு ஆளும் மாநிலங்களில் உள்ள மக்களும் இந்திய குடிமக்கள்தான் என்பதை மத்திய அரசு உணர்ந்ததாக தெரியவில்லை. மாநிலத்தின் உண்மையான தேவைகளை கூட மத்திய அரசு நிறைவேற்றுவதில்லை. சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று பலமுறை தமிழக அரசு கேட்டுக்கொண்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஆளும் மேற்குவங்கத்துக்கு சிறப்பு சலுகை திட்டமே அளிக்கப்பட்டுள்ளது.

இது காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகள் மீது மத்திய அரசு கொண்டுள்ள மாற்றாந்தாய் மனப்பான்மையை எடுத்துக்காட்டுகிறது. வகுப்பு கலவரம் தடுப்பு என்ற போர்வையில் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள திட்டம் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. எந்த நேரத்திலும் மாநில அரசை பதவி நீக்கம் செய்யலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது.

மாநில அரசுகளின் முக்கிய நிதி ஆதாரமாக உள்ள வாட் வரி விதிப்பை மத்திய அரசு எடுத்துக்கொள்ள இருக்கிறது. இதனால் மாநில அரசுக்கு பெரும் வரி இழப்பு ஏற்படும். இதனால் மாநிலத்தின் நிதி நிலைமை பாதிக்கும்.எனவே தான் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொழில் கல்விக்கான நுழைவு தேர்வு விஷயத்தில் மாநிலங்களில் நிலவும் நிலைமையையோ, மாநில அரசுகளின் கருத்துக்களையோ மத்திய அரசு பொருட்படுத்துவதில்லை. கல்வித்துறையில் அடிக்கடி மத்திய அரசு தலையிடுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படும் சம்பவத்தை நமது நாட்டுக்கு எதிரான தாக்குதலாக மத்திய அரசு கருதவில்லை. இது தமிழகத்தை மட்டும் பாதிக்கும் பிரச்சனை என்பது போல மத்திய அரசு கருதுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் உயிர்கள் மத்திய அரசுக்கு மதிப்பற்றவையாக தோன்றுகின்றன. அவர்களை பாதுகாக்க எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் தேசிய அபிவிருத்தி கவுன்சில் கூட்டத்தை நடத்துவதில் எந்தவித பயனும் ஏற்படாது என்று நான் கருதுகிறேன்.

http://www.alaikal.com/news/?p=85851

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.