Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் அமெரிக்க பிரயாணம்

கூட்டமைப்பின் அமெரிக்க பிரயாணம் 19 members have voted

  1. 1. அமெரிக்காவை சந்திக்கும் கூட்டமைப்பின் அதி முக்கிய முதன்மைகடமை என்ன?

    • தமிழரின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தல்
      16
    • தொடரும் குடியேற்றம், வாழ்வாதார மறுத்தலை வலியுறுத்தல்
      7
    • சிங்களம் மீதான போர்குற்றவிசாரணைகளை வலியுறுத்தல்
      10
  2. 2. கனடாவரும் கூட்டமைப்பினரை புலம்பெயர் தமிழர்கள் இராப்போசன விருந்து வைத்து சந்திப்பது:

    • தாயக மக்களுக்கு புலம்பெயர் மக்கள் ஆதரவாக உள்ளனர் என்பதை காட்டும்
      9
    • கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகளை கலந்துரையாடும் சந்தர்ப்பத்தை வழங்கும்
      9
    • புலி ஆதரவாளர்கள் கூட்டமைப்புக்கு ஆதரவாக உள்ளனர் என்ற சிங்கள பிரச்சாரத்திற்கு வழி சமைக்கும்
      1

Please sign in or register to vote in this poll.

Featured Replies

கூட்டமைப்பு அமெரிக்காவின் அழைப்பின் பேரில் போகிறது.

1. தமிழருக்கு ஒருவரும் ஆதரவு அளிக்க தயாரில்லாத நேரத்தில் அமெரிக்கா பேச்சு வார்த்தைக்கு அழைத்ததிற்கு ஒரு வார்த்தை நன்றி கூறவேண்டும்.

2. அழைத்த காரணத்தை அமெரிக்காவை கூறவிட்டு நீண்ட காதால் கவனமாக கேட்க வேண்டும்.

3. தமிழர்கள் ஜனநாயகம் விரும்பிகள் (அதாவது மாற்றுக்கருத்துகள் முதல் கருத்தை விட பலம் கூட). சிங்களவர்கள், சீன ரூசியா போன்று பொது உடமை விரும்பிகள்(அதாவது கடை உடைச்சு, வீடு உடைச்சு சாப்பாடு தேடுகிற கூட்டம்). ஆகவே அமெரிக்கா எங்கே தன் சிநேகிதத்தை வைக்க வேண்டும் என்பதை தெளிவாக விளங்கவைக்க வேண்டும்.

4. அமெரிக்காவின் இலங்கைகான ராசதந்திரங்களில் இருந்த பிழைகளால் சீனா இலங்கையில் பலமாக காலூன்றியதை விளங்கவைக்க வேண்டும். ராசதந்திரிகள் தமிழரை சிங்கள அரசின் ஆலோசனைகேற்ப தள்ளிவைத்ததால் அமெரிக்கா சிங்களவர்களின் வலையில் விழநேர்ந்ததை பவ்வியமாக விளங்க வைக்க வேண்டும்.

5. தமிழர்களின் நிலை இதுதான் என்று எதையும் கூறி முறிக்க முற்பட கூடாது (காலம் கடந்தாலும், சிங்களவர்களுடம் சமாதனம் செய்து கொள்வது என்று ஒன்று இல்லை என்பதை அமெரிக்கா கண்டிருக்கிறது. எனவெ) எதையும் அமெரிக்கா தரவேண்டும் என்று வற்புறுத்த கூடாது.

6. 2005-2008 போன்ற காலங்களில் அமெரிக்கா தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை அங்கீகரித்திருந்தது. அதை நினைவு படுத்தவேண்டும். ஆமி அடக்குமுறைகளை வைத்து அவைகள் சுவிகரிக்க படுவதை புள்ளி விபரங்களால் சுதந்திரத்திலிருந்து இன்றுவரை எடுத்து காட்ட வேண்டும்)

7. அமெரிக்க கனேடிய அரசியல் அமைப்புக்கள் இலங்கைக்கு உதவாது ஏன் எனில் அவையை சோல்பரி அரசியல் அமைப்பை பிரட்டியது போல் பிரட்டுவதற்கு சிங்களவரிடம் எப்போதுமே தேவையான பெரும்பானமை இருப்பதை விளக்க வேண்டும். 13ம் திருத்தம் போன்றவையில் இருக்கும் இடர்பாடு, இவைகளை அமூல்படுத்தவே சிங்கள அரசாங்கம் வேண்டும். எனவே அது தமிழருக்கு விடிவைத்தர மாட்டாது என்பதை புரிய வைக்க வேண்டும். இவற்றை கணக்கிலெடுக்கும் அரசியல் தீர்வே தமிழர்களுக்கு விடிவைத்தரும் என்பதை விளங்கவைக்க வேண்டும்.

8. தமிழர்கள் படிப்பு, பொருளாதார துறைகளில் மேலைநாடுகளை பின்பற்றுபவர்கள் என்பதை எடுத்துரைக்க வேண்டும். அதனால்த்தான் அவர்கள் பிரிடிஷ் ஆட்சியில் முன்னனியில் இருந்தார்கள் என்பதை காரணம் காட்ட வேண்டும். நியுயோர்கில் கூட(இலங்கையில் பாரிய வளர்ச்சியடைவது மட்டுமல்ல) சிங்களவர்களின் இதுவரை பெரிய தொழில் செக்ஸ்கடை வியாபாரம் என்பதை சொல்லாமல் சொல்ல வேண்டும். எனவே தமிழர்கள் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க தயார் என்பது வார்த்தையல்ல, இயல்பான வழிநடப்பு என்று நிறுவவேண்டும். தமிழர்கள் ஜனநாயக விருப்பிகள் என்பதால் அமெரிக்கா இலங்கைகையில் முதலிடுவதைத்தான் விரும்புவார்கள், சீனா அல்ல என்று கூற வேண்டும். அதன் பின் கடைசியாக அமெரிக்க நலங்களை தமிழீழத்தில் முன்னெடுக்க நிச்சயம் இடங்கொடுக்கபடும் என்ற வாக்குறிதியை வழங்க வேண்டும்.

9. அமெரிக்கா இலங்கையில் தலையிட ஊக்கிவிற்கவேண்டுமேயல்லது இப்பொழுது ஒரு தீர்மானத்தை எடுத்து இலங்கையை பிரித்து விடும் படி நாண்டு கொண்டு நிற்க முடியாது. இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு கொடுத்து இலங்கையை தன் பக்கம் அணைக்க முயன்று தோற்றவுடன் இலங்கையை அடிப்பது தான் சரி என்று முடிவெடுத்தவ. ஆனால் காங்கிரசின் அரசியல் குழந்தைகள் தமிழர்களை அழித்து, தங்களையும் கெடுத்திருக்கிறார்கள். அமெரிக்காவும் தன் பிழையை உணர்ந்து விட்டது. என்வே எமக்கு நீதிபதியாக வா என்றழைக்காமல் எம்மோடு நணபனாக இரு என்றழைக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

என்வே எமக்கு நீதிபதியாக வா என்றழைக்காமல் எம்மோடு நணபனாக இரு என்றழைக்க வேண்டும்.

இஸ்ரேலை யாரும் அசைக்க முடியாமல் இருப்பதற்கு அமெரிக்கா மூல காரணம்.எண்ணிலடங்கா வீற்றோக்கள் இஸ்ரேலுக்காக அமெரிக்கா பாவித்தது.இஸ்ரேலின் நத்தினியாகு கடைசியாக நடந்த (அமெரிக்காவில்) கூட்டத்தில் கூட தனது ஒரே நண்பன் அமெரிக்கா தான் எனக்குறிப்பிட்டது நினைவு கூரத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ராஜாங்கத் திøணக்களத்தின் அழைப்பையேற்று ரீஎன்ஏ உறுப்பினர்கள் அமரிக்கா பயணமாகினர்:-

26 அக்டோபர் 2011

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பையேற்று தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதி ராஜா, எம். ஏ. சுமந்திரன், சுரேஷ் பிரேமச்ந்திரன் ஆகியோர் நேற்று அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்கள் இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் இன்றும் நாளையும் நாளை மறுதினம் பேச்வார்த்தை நடத்தவுள்ளனர். நியூயோர்க்கிலுள்ள தமிழ் அமைப்புக்களின் ஆண்டு விழாக்களிலும் இவர்கள் பங்குபற்றவுள்ளனர்.

இந்தச் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்நதிரன் தவிர்ந்த ஏனைய 3 நாடாளுமன்ற உறுப்பினர்;களும் எதிர்வரும் 29ஆம் திகதி மாலை விமான மூலம் கனடாவுக்கு செல்லவுள்ளனர்.

எதிர்வரும் 30ஆம் திகதி காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை கனடாவிலுள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திக்கவுள்ளனர்.

அன்று மாலை 6.30 மணிக்கு இரவு விருந்துபசாரம் இடம்பெறவுள்ளது. 31ஆம் திகதி கனேடிய வெளியுறவு திணைக்கள அதிகாரிகளையும் கனடாவின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சந்திக்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கனேடிய வெளியுறவு அமைச்சு செய்துள்ளது.

இந்தச் சந்திப்புக்களையடுத்து எதிர்வரும் முதலாம் திகதி கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளனர். அனறைய தினம் இவர்களிருவரும் ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்திக்க ஏற்பாடாகியுள்ளதாக தெ விக்கப்படுகின்றது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எதிர்வரும் 3ஆம் திகதி வரை கனடாவில் தங்கியிருந்து பல சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர்களுக்கான கனேடிய விஜயம் குறித்த ஏற்பாடுகளை கனடாவிலுள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப் பினர்கள் கனடா செல்கின்றமை இதுவே முதற்றடவையாகும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/69201/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.