Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரதமர் யூலியாவிற்கு மஹிந்த மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்?

Featured Replies

அவுஸ்ரேலிய பிரதமர் ஜூலியா அம்மையாருக்கு ஒரு பிரச்சினை. என்னவென்றால் சிறிலங்காவில் இருந்துவரும் தமிழ் அகதிகளை தடுத்து நிறுத்தவேண்டும். அதற்காக சிறிலங்கா அரசுடனும் அரச கடற்படை மற்றும் இராணுவத்திற்கு உதவி ஒத்தாசைகளை கொடுத்து தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

.

ஆனால் இதே சிறிலங்கா அரசாங்கமும், அரச படைகளும்தான் போரின் இறுதிப்பகுதியில் 40,000 மக்களை கொன்று குவித்துள்ளார்கள். இப்போதும் மெல்ல மெல்ல கொல்கின்ரார்கள்.போர்முடிந்துவிட்டதாக கூறினாலும் கடந்த இரண்டுவருடங்களாக அங்கு சிறிலங்காப்படைகள் தமிழ் மக்களை ஓர் போர்ச்சூழலிலேயே வைத்திருக்கின்றார்கள். நேற்று முந்தினம் வெளியான ஆசிய மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கையில் ஒரு செய்தி கூறபப்ட்டுள்ளது.

.

அதாவது சிறிலங்காவில் பொலிசாரின் பாதுகாப்பில் இருந்த 90 பேர்வரை கடந்த 9 மாதத்தில் மட்டும் கொல்லப்பட்டுள்ளார்கள். சராசரி 10 பேர் மாதாந்தம் கொல்லப்படுகின்ரார்கள் எனலாம். ஏன் நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் 32 வயதான தமிழ் கைதி ஒருவர் உயிர்ழந்துள்ளார். மிகவும் வேதனையான விடயம் இந்த வாலிபர் அவுஸ்ரேலியா செல்ல சென்றபோது சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிரையில் அடைக்கப்பட்டவராவார்.

.

ஆகவே அவுஸ்ரேலிய பிரதமரின் அகதிகளைத்தடுக்கும் தந்திரோபாயம் எப்படி வேலை செய்கின்றது என்பதனை பாருங்கள். இது கிட்டத்தட்ட சிறிலங்காவில் கூலிப்படைகளை வைத்து அடி உதை போட்டு அல்லது முடிந்தால் கொலையாவது செய்து அகதிகளை தடுங்கள் என்பதற்கு ஒப்பானதாகும்.

.

ஆகவே இந்த நிலைப்பாட்டில் உள்ள அவுஸ்ரேலிய பிரதமர் ஜூலியா மஹிந்த இராஜபக்‌ஷமீது நடவடிக்கை எடுக்க விடுவாரா?

.

இன்னும் ஒன்றையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சிறிலங்காவில் இருந்து அகதிகள் வருவதனை தடுக்கவும், வருகின்ற அகதிகளை திருப்பி அனுப்பவும் ஒரு காரணம் வேண்டும் அதுதான் சிறிலங்காவில் பிரச்சினை தீர்ந்துவிட்டது என காட்டுவது. இதற்கும் அவுஸ்ரெலிய அரசாங்கம் பல வேலைகளை செய்கின்றது. பல்வேறு அபிவிருத்திப்பணிகளை செய்கின்றது. அபிவிருத்திப்பணிகள் 100 வீதம் நடந்தால் அங்கு பிரச்சினை தீர்ந்துவிட்டது என்றுதான் அர்த்தம் இது அவுஸ்ரேலியா மட்டும் அல்ல பல நாடுகளின் ஓர் சுட்டியாக இருக்கின்றது.

.

ஆனால் அண்மையில் மலேசியாவில் இருந்து சென்றுவந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மலேசிய பாராளுமன்றில் தமது அறிக்கையினை தாக்கல் செய்துள்ளார்கள். அந்த அறிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் இப்போதும் தமிழ் மக்களை புறக்கணிப்பதாகவும் அங்கு படைகளின் பிரசன்னம் தொடர்ந்து இருப்பதால் மக்களின் அன்றாட அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.

.

ஆகவே அவுஸ்ரேலிய அரசங்கத்தின் அகதிகள் வரவினை மையமாக வைத்து எடுக்கும் நடவடிக்கையானது எந்தளவு மாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டுக்கொடுக்கும், அல்லது உரிமை மீறல்களுக்கு நியாயத்தினை தேடிக்கொடுக்கும் என்பது ஒரு கேள்வியே. கூடவே இந்த நடவடிக்கையானது அவுஸ்ரேலியாவின் கனவான பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக வரவேண்டும் என்ற கரிசனையினைக்கு வலுச்சேர்க்குமா என்பதனையும் பார்க்கவேண்டும்.

அரசியல் பத்தியாளர் புரூஸ் ஹைவ் இன் கட்டுரையினை தழுவி எழுதப்பட்டது.

மூலம்

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசாங்கத்தின் அனுமதியின்றி இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது – ஜூலியா:

25 அக்டோபர் 2011

மத்திய அரசாங்கத்தின் அனுமதியின்றி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்தின் அனுமதியின்றி இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல் வழக்கு விசாரணைகள் நடத்தப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்திரேலிய பிரஜையான அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்பவரினால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளாது இவ்வாறான வழக்குகளை தொடர முடியாது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்குத் தொடர்பில் சட்ட மா அதிபர் எந்தவிதமான தகவல்களையும் இதுவரையில் பெற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த வழக்குத் தொடர்பில் சட்ட மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜெகதீஸ்வரனின் சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.

சர்வதேச பிரகடனங்களின் அடிப்படையில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வரப்பிரசாதங்களை வழங்க வேண்டிய கடப்பாடு அவுஸ்திரேலியாவிற்கு காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 29ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜதந்திர வரப்பிரசாதம் காணப்படுவதனால் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என சட்ட நிபுணர் டொனால்ட் ரொத்வெல்ட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கில் ராஜதந்திர வரப்பிரசாதங்களை ஒரு பொருட்டாக கருத முடியாது என ஜெகதீஸ்வரனின் சட்டத்தரணி, லுசியன் ரிச்டர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.