Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயக்குநர் சேரன் - நம்மை ஏமாற்றிய பிரபலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குநர் சேரன் - நம்மை ஏமாற்றிய பிரபலம்

Share

மிழ்சினிமாவில் இயக்குநராக அறிமுகமாவோரில் பலரும் கமர்சியல் டைரக்டராக, பொழுதுபோக்குப் படங்களைத் தருபவராக ஆகவேண்டும் என்றே விரும்புவர். இன்னும் சிலர் டெக்னிகலாக தமிழ்சினிமாவின் தரத்தை உயர்த்தும் ஆர்வத்துடன் சினிமாவில் நுழைவர். இவர்களில் பெரும்பாலானோர் உலகத்திரைப்படங்களையும், இந்திய கமர்சியல் படங்களையும் கரைத்துக் குடித்தவர்கள். அந்தப் படங்களின் நேரடி/மறைமுகப் பாதிப்புடன் தனது சினிமாவை உருவாக்குவர்.

ஆனால் தமிழனின் வாழ்வைப் பற்றிப் பேச, மறந்துவிட்ட மனிதம் பற்றிப் பேச யாரும் துணிவதில்லை. அத்தகைய துணிச்சலுடன் களமிறங்கியவர் சேரன். தமிழ்சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்றால் காதல் கதையோடு நுழைவதே எளிய வழி. அந்தவகையில் பாரதி கண்ணம்மா என்ற அதிரடிக் காதல்கதையுடன் தன் திரைவாழ்வை ஆரம்பித்தார் சேரன்.

Cheran9.jpg

ஜாதீய அடக்குமுறை நிறைந்த சமூகத்தில் கலகக்குரலாக பாரதி கண்ணம்மா கவனிக்கப்பட்டது. தென்மாவட்டங்களில் படமே ஓட முடியாத நிலையும் ஏற்பட்டது. ஆனால் கருத்தியல்ரீதியாகவும், தொழில்நுட்பரீதியாகவும் அது ஒரு சராசரி சினிமா தான். சேரன் தன்னை வித்தியாசமான இயக்குநராக பொற்காலம் படத்திலேயே நிலைநிறுத்தினார்.

பாரதிராஜாவிற்குப் பின் கிராமங்களை இயல்பு கெடாமல் காட்டும் திறமை சேரனுக்கு இருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான குரலாகவும் அந்தப் படம் ஒலித்தது. ஹீரோ துதி, பஞ்ச் டயலாக் போன்ற கார்மாந்திரங்கள் ஏதும் இல்லாமல் யதார்த்தமான காட்சிகளால் அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஆனால் அதையடுத்து வந்த தேசிய கீதம், உயர்ந்த கனவுகளுடனும் அரைவேக்காட்டுத்தனமான புரட்சிக்கோட்பாடுகளுடனும் சேரன் எடுத்த படம். அது பெரும் தோல்வியைத் தழுவியது. உலகைத் திருத்தும் அவசரக் குடுக்கைத் தனமாக சேரன் செய்த வேலை அது. அந்தப் படம் கொடுத்த தோல்வி, சேரனை மீண்டும் சமூக யதார்த்தக் கதையின் பக்கம் திருப்பியது. அடுத்து எடுத்த வெற்றிக்கொடிகட்டு படத்தின் மூலம் வெளிநாட்டு வேலையில் சேர முயன்று ஏமாறும் கிராமத்து மனிதர்களின் அவலங்களைச் சொன்னார்.

ஆனால் சேரனை நாம் நினைவில் கொள்ளும் அளவிற்கு இந்த முதல் மூன்று படங்களுமே முக்கியமானவை அல்ல. இந்தக் கட்டுரையை எழுத வைத்தது பாண்டவர் பூமி என்ற அற்புதமான படம் தான். தன் சொந்த நிலத்தில் இருந்து இடம்பெயர்ந்துவிட்ட, மீண்டும் அங்கே குடிபெயர ஆசையுள்ள பலரின் மனதுடன் நெருக்கமாகப் பேசியது அந்தப் படம். பல இடங்களில் நம்மைக் கலங்க வைத்த படம் அது. அதே நேரத்தில் ஒரு ஃபீல்-குட் வகைப் படமும்கூட. நட்புக்கும் காதலுக்குமான மெல்லிய இடைவெளியை அந்தப் படம் அளவிற்கு வேறெந்தப் படமும் பேசியதில்லை.

autograph-85.jpg

நட்பு காதலாக மலரும் தருணம், பூ மலர்வதைப் போன்றது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே, சட்டென்று நம்மையறியாமல் நிகழ்ந்துவிடுவது. மனதின் நுண்ணிய உணர்ச்சிகளை திரையில் வடிக்க முடியும் என்று நிரூபித்த படம் அது. ’அவரவர் வாழ்க்கையில்’ பாடலை மறக்க முடியுமா? யதார்த்தமான மனிதர்களின் உணர்ச்சிகளும், அவர்கள் சமூகத்துடன் கொள்ளும் உறவுகளுமே சேரன் படங்களின் அடிநாதம். ஆனாலும் பாண்டவர் பூமி படம் கமர்சியல் ரீதியில் பெரும் தோல்வியைச் சந்தித்தது. இடையில் அவர் கதையின் நாயகனாக சொல்ல மறந்த கதையில் நடிகர் அவதாரம் எடுத்தார். அந்தக் கதைக்கு அவர் பொருத்தமாகவே இருந்தார்.

அந்த படத்தின் வெற்றி தந்த நம்பிக்கையில், ஆட்டோகிராஃப் படத்தில் தானே நடித்தார். தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படம் அது. ஆனால் அந்தக் கதை பல முண்ணனி இளம் நடிகர்களாலும் புறக்கணிக்கப்பட்ட ஒன்று. பிரபுதேவா தவிர யாருமே அதில் நடிக்க முன்வரவில்லை. பிரபுதேவாவை வைத்து ஆரம்பித்தும் பணப்பிரச்சினையால், படம் நின்று போனது. பல போராட்டங்களுக்குப் பின் வெளியான ஆட்டோகிராஃப் அடைந்த வெற்றி யாருமே எதிர்பாராதது. காதல் கதைகளை பலரும் பலவிதங்களில் சினிமாவில் சொல்லிவிட்டனர். ஆனாலும் அதிலும் யதார்த்தத்தை, மாறுகின்ற மனதின் ஆட்டத்தை காட்டினார் சேரன். முடிவில் ‘இதுவும் கடந்து போகும்’ என்று படம் சொன்ன செய்தியே சேரனின் தனி முத்திரை.

பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப் என இரு அட்டகாசமான படங்களைக் கொடுத்த பின்னர், சேரன் கொடுத்த படம் ‘தவமாய் தவமிருந்து’. தமிழ்சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக இதைச் சொல்வேன். நமது சினிமாக்களில் தாய்ப்பாசம் அளவிற்கு தந்தை பாசம் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் துணிந்து மனதை நெகிழ வைக்கும் ஒரு தந்தையை படைத்துக் காட்டினார். ராஜ்கிரண் என்ற அருமையான நடிகரின் அற்புதமான நடிப்பில் அந்தப் படம் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தது.

தவமாய் தவமிருந்து படம் பற்றிப் பேசும்போது ராஜ்கிரணே அந்தப் படத்தின் ஹீரோ என்று சொன்னார் சேரன். அது நமக்கு ஆச்சரியம் தந்தது. ஏனென்றால் அவரே அப்படத்தில் நடித்திருந்தும், ஆட்டோகிராஃப் என்ற வெற்றிப்படத்தின் ஹீரோ என்ற இமேஜ் இருந்தும் சேரன் ராஜ்கிரணையே ஹீரோ என்றார். ஆனால் அந்த ஆச்சரியம் நமக்கு அந்தப் படத்துடன் முடிந்து போனது தான் சோகம்!

அதன்பிறகு ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்த முற்பட்டார் சேரன். ஆட்டோகிராஃப் வெற்றிப் படம் தான் என்றாலும், தவமாய் தவமிருந்து சிறந்த படம் தான் என்றாலும் சேரன் சிறந்த நடிகர் அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஏரியாவில் தான் திறமை இருக்கும். பாக்கியராஜ் போன்ற வெகுசிலரே பல திறமைகளுடன் வெற்றி கண்டது. சேரன் என்ற மாபெரும் கதை-வசனகர்த்தா, ஒரு நடிகராக தன்னை நினைத்துக்கொண்டது தான் அதன்பிறகான அவரது தோல்விக்கு வித்திட்டது.

yutham-3.jpg

அதன்பின் அவர் இயக்கிய மாயக்கண்ணாடி படத்தினை சேரன் படம் என்றே ஒப்புக்கொள்ள முடியாது. பொக்கிஷத்தில் ஆட்டோகிராஃப் வாசனை இருந்ததாலேயே அதை ஓரளவு ஒப்புக்கொள்ளலாம். ஆனாலும் பொற்காலத்திலும், பாண்டவர் பூமியிலும் நிழலாடிய இயல்பான மனிதர்களை சேரன் என்ற நடிகர் தொலைத்துவிட்டார். நடிகராக மட்டுமே சேரன் நடித்த படங்கள் மூலமாகக் கூட அவர் நம் மனதோடு ஒட்டவில்லை.

சேரனின் திரைக்கதைகளில் நுண்ணிய வேலைப்பாடுகள் இருந்ததில்லை. தட்டையான, நேர்க்கோட்டில் செல்லும் பாணியே அவருடையது. ஆனாலும் நமது வாழ்க்கையை, உறவுச் சிக்கலை, உணர்ச்சிப்பூர்வமாக திரையில் கொண்டுவந்தது தான் சேரனை தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய இயக்குநர்களில் ஒருவராக மதிப்பிட வைக்கிறது.

மக்களிடம் இருந்து அந்நியப் பட்டுப்போன சேரன், நடிகர் கனவை மூட்டை கட்டிவிட்டு ’கோடம்பாக்கத்தில்’ இருந்து மீண்டும் ’செம்மண் பூமி’க்குத் திரும்பினால் நிச்சயம் வெல்வார். செய்வாரா?

http://sengovi.blogs...og-post_10.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.