Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய மண்ணில் பெருமொடுப்பில் தீபாவளிப் பண்டிகையும் சிறிலங்கா அரசின் சூழ்ச்சி வலையும்! நிகழ்வினை புறக்கணிக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைதிவழி போராட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Toronto_deepavali_lankaTGTE150.jpg

கனடாவில் உள்ள சிறிலங்காவின் தூதரக ஆணையம் தீபாவளிப் பண்டிகை நிகழ்வொன்றை எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி பெருமெடுப்பில் ஏற்பாடு செய்துள்ளது. இலங்கைத்தீவின் பல்லின மக்களின் ஒன்றுபட்ட நிகழ்வென பிரச்சாரப்படுத்தியவாறு கனடிய ஆளுங்கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கனடிய அரசியல் மட்டங்கள் ஏற்பட்டு வரும் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் இந்த நிகழ்வினை சிறிலங்காவின் தூதரகம் ஆராரவத்துடன் ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவே கருதப்படுகின்றது.

இந்நிலையில் சிறிலங்கா அரசின் இந்த சூழ்சியைக் முடியடிக்கும் நோக்கில் அமைதிவழியிலான போராட்டம் ஒன்றுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கனடிய தமிழ் சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து 27-10-2011 அன்று நா.த.அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் அறிக்கையயொன்றை வெளியிட்டுள்ளது.

அறிக்கையின் முழுவிபரம் :

சர்வதேச நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சிறீலங்கா அரசு, தமிழ் மக்களுடன் நல்லிணக்க உறவுடன் இருப்பதான ஒர் தோற்றத்தை சர்வதேசத்திற்கும், கனடாவிற்கும் எடுத்துக் காட்டும் நோக்கில் சிறீலங்காத் தூதுதரக ஆணையத்தினால் தீபாவளிப் பண்டிகை நிகழ்வொன்று பெருமொடுப்பில் முன்னெடுக்கப்படுகின்றது.

எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி ரொரன்ரோவில் உள்ள கொரியன் கலாச்சார மண்டபத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழர்கள் மீதான தொடர்சியான இனவழிப்பை மூடிமறைத்தவாறு, கனடாவில் உள்ள தமிழர்களையும், கனடிய அரசியல் பிரதிநிதிகளையும் இந்த தீபாவளி கொண்டாட்டத்துக்கு அழைத்துள்ள சிறிலங்கா அரசு, தமிழர்களை மட்டுல்ல உலகத்தினையும் ஏமாற்றும் ஒரு வித்தையே இதுவாகும்.

தமிழர்களை ஒன்றிணைத்ததான தோற்றப்பாடடிக் கொண்ட இத்தகைய நிகழ்வுகள் மூலம் தமிழர்களின் இரத்தக்கறை படிந்த தனது பேரினவாத முகத்தை மறைக்க முனைவதோடு தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை சிறிலங்கா அரசு நிராகரிக்கின்றது.

இச்சூழலில், கனடிய மண்ணில் சிறிலங்கா அரசு அரங்கேற்றும் தீபாவளிப் பண்டிகை நிகழ்வினை புறக்கணிக்க வேண்டுவதோடு, தமிழர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பினைக் வெளிக்காட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தி நிற்கின்றது.

இந்நிகழ்வுக்கு ஒன்றுபட்ட எதிர்ப்பினை தெரிவிப்பதோடு, சிறிலங்கா தொடர்பிலான விழிப்பையும் ஏற்படுத்தும் நோக்கில் அமைதிவழி போராட்டம் ஒன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையுடன் சர்வதேச மனித நேய அமைப்புகளும், கனடிய தமிழ் அமைப்புகளும் தோழமையுடன் நடாத்தவுள்ளனர்.

இது குறித்ததான மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தருவதோடு, இந்த அமைதி வழி போராட்டத்தில் அனைத்து கனடியத் தமிழ் மக்களையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம் இவ்வாறு நா.த.அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

http://www.seithy.com/breifNews.php?newsID=51381&category=TamilNews&language=tamil

அன்று கனேடிய தமிழ் ஊறவுகள் முன்னால் நின்று அமைதி போராட்டம் செய்யுங்கள். போவோர் எல்லோரும் ஒரு வீடியோ கமேராவுடன் போங்கள், புல்லுருவிகள் ஒரு கிண்ண மதுவுக்காக போய் தமிழர் சுதந்திரத்தை அடைவு வைக்காமலிருக்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.