Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காரைநகர் கடற்பரப்பினில் இந்திய மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்குமிடையே கைகலப்பு :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்குமிடையே இன்று காரைநகர் கடற்பரப்பினில் இடம் பெற்ற கைகலப்பினில் உள்ளுர் மீனவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.இதே வேளை இச்சம்பவத்தையடுத்து உள்ளூர் மீனவர்கள் முப்பத்திமூன்று பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடைய படகுகள் பன்னிரண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.மாவட்ட மீனவ சமாசங்களின் சம்மேளனத்தலைவர் சி.தவரட்ணம் தெரிவித்தார்.எனினும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் இன்றிரவு விடுவிக்கப்பட்டுவிட்டதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் அத்தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

வடமராட்சியின் பருத்தித்துறை முனைப்பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களுக்குமிடையேயே கைகலப்புகள் இடம்பெற்றுள்ளது. உள்ளூர் மீனவர்களால் விரிக்கப்பட்டிருந்த வலைகளை இந்திய மீனவர்களுடைய இழுவைப்படகுகள் வெட்டி சேதமாக்கியதாக கூறப்படுகின்றது. இதனால் உள்ளுர் மீனவர்கள் சீற்றங்கொண்டு கைகலப்பினில் ஈடுப்பட்டுள்ளனர்.சம்பவத்தையடுத்து அங்கு விரைந்து வந்த கடற்படையினர் இந்திய மீனவர்ளை விரட்டியடித்ததுடன் உள்ளுர் மீனவர்களை சிறைப்பிடித்துமுள்ளனர்.

எனினும் கடற்படையினரின் இத்தகைய செயல் இந்திய மீனவர்களுக்கு ஊக்கத்தை வழங்கும் அதே வேளை உள்ளூர் மீனவர்களுக்கிடையே கடும் சீற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.ஏற்கனவே இந்திய மீனவர்களை சிறைப்பிடித்த சம்பவம் தொடர்பினில் பழிவாங்கும் நோக்கினில் இத்தாக்குதல்கள் இடம் பெற்றிருக்கலாமென்ற சந்தேகமும் மீனவ அமைப்புகளிடையெ உள்ளது.இதனிடையே நாளை செவ்வாய்கிழமை பருத்தித்துறை முனை பகுதியில் கடற்படையின் வடபிராந்திய கட்டளை அதிகாரி தலைமையில் மீனவர்களுக்கான கூட்டமொன்றிற்கு கடற்படை அழைப்பு விடுத்துள்ளது.

http://globaltamilnews.net.sage.arvixe.com/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/69467/language/ta-IN/article.aspx

இதன் பின்னணியில் டக்கிளசின் சதி வேலைகள் எதுவும் இருக்குமோ ?

எனக்கென்னவோ அடி சரியாக விழாததால்தான் இப்படி மீன் கொள்ளை அடிக்கிறாங்கள் என்று படுது. தொப்பிள் கொடி உறவு உண்டுதான். அது ஏழை மீனவனுக்கும் ஏழை மீனவனுக்கும் இடையில். இந்த trawler கொள்ளைக்காரர்களுக்கு என்ன தொப்பிள் கொடி உறவு? சும்மா சிங்கள ஆமி அடிக்கிறான் என்று குய்யோ முறையோ என்று கத்தாதீர்கள். வேணுமெண்டால் சேர்ந்து அடியுங்கோ.

http://www.yarl.com/...showtopic=93703 ??????

அடித்தாலும் பிழை சொல்லுறியள் , அடிக்காட்டியும் பிழை சொல்லுறியள் ;

Edited by கறுவல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதன் பின்னணியில் டக்கிளசின் சதி வேலைகள் எதுவும் இருக்குமோ ?

நான் நினைச்சத நீங்கள் சொல்லி போட்டீங்கள். அண்ணனை தமிழ் நாட்டில சிறை பிடிக்க போறாங்கள் எண்ட செய்தி வந்த காலந்தொட்டு இந்த செயல்கள் நடக்கின்றன.

பங்கருக்க இருக்கிறதெல்லாம் எங்களை பிரிக்க எப்படியெல்லாம் யோசிச்சு அலுவல் குடுக்குதுகள் பார்த்தீங்களே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.