Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதி (வி)வேகப் பாதை - ‘அந்தி ரட்டிக்கு எலும்பு கிடையாது’

Featured Replies

அதி (வி)வேகப் பாதை

இந்த நாட்டில் அதிவேகப் பாதையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ நேற் றைய தினம் திறந்து வைத்தார்.அதிவேகப் பாதையின் ஆரம்ப நிகழ் வில் உரையாற்றிய ஜனாதிபதி, நீண்டகாலக் கனவு நனவாகியுள்ள தாக குறிப்பிட்டுள்ளார். அதிவேகப் பாதையால் ஏற்படக்கூடிய நன் மைகள் யாவை என்று ஒரு ஆய்வு செய்தால், வேகமாகச் செல்வதன் மூலம் குறைந்த நேரத்தில் குறித்த இடத்தை அடைய முடியும். இதன் காரணமாக பயணத்திற்காக நீண்ட நேரத்தை செலவழிக்கும் நிலைமை மாறி, நேரத்தை மீதப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.

இதன்மூலம் மீதப்படும் நேரம் மனித உழைப்பை அதிகரிக்க உதவும் என்று கூறிக்கொள்ளலாம். இவ்வாறான பொருளாதார சிந்தனை என் பது எங்கள் நாட்டு மக்களுக்குப் பொருந்துமா என்பதை முதலில் சிந் தித்தாக வேண்டும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் நேரம் தாழ் த்தி புறப்பட்டு சாதாரண வீதிகளில் வாகனங்களை வேகமாக ஓட்டிச் செல்லும் பழக்கத்திற்கு உட்பட்டவர்கள்.

எனவே இப்போது அதிவேகப் பாதையிலும் இந்தப் பழக்கம் தொட ரும். அதாவது அதிவேகத்தால் கிடைக்கக்கூடிய நேரம் தேவையற்ற வீணடிப்பிற்குப் பயன்படுத்தப்படும். இது ஒருபுறமிருக்க இலங்கை மக்களில் 75 வீதமானவர்கள் வீதி ஒழுங்குமுறைகளை கடைப்பிடிப் பதில் பின்னடைவை அல்லது பூரணத்துவமான தெளிவை கொண்டி ருக்கவில்லை.நிலைமை இதுவாக இருக்கையில், நாட்டில் நடந்த வீதி விபத்துக்களில் பெரும்பாலனவை அதி வேகத்தால் ஏற்பட்டவை என்பதை சான்றுபடுத்துவதாக விபத்து சார்ந்த புள்ளி விபரங்கள் உள்ளன.

எனவே அதிவேகப் பாதையை அமைத்து அதை ஆரம்பித்து விட்டு நீண்ட காலக்கனவு நிறைவேறியுள்ளது எனக் கூறுவதென்பது வீதி அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் போதே சாத்தியமாகும். மாறாக அதிவேகப் பாதையிலும் விபத்து நடக்குமென்றால் ‘அந்தி ரட்டிக்கு எலும்பு கிடையாது’ என்ற ஊர்ப் பழமொழியைத்தான் கூற வேண்டும். அதிவேகப் பாதையை அமைத்து பணத்தை அறவிட்டு ‘நீ வேகமாச் செல்’ என்று அனுமதியும் கொடுத்துவிட்டால் வாகனம் செலுத்துவதில் இருக்கக்கூடிய அவதானம் தளர்வுறும் என்ற அனு மான முடிபுக்கு நாம் வரலாம். எதுவாயினும் அதிவேகப் பாதையை இலங்கையில் அமைக்க முன், மக்கள் மத்தியில் அதி விவேகத்தை ஏற்படுத்த வேண்டும்.

மலகூடப் பயன்பாட்டிற்கு இன்னமும் பழக்கப்படாதவர்கள் பல திணைக்களங்களில் இன்னமும் தாராளமாக இருக்கையில், அதி வேகப் பாதையை எப்படித்தான் பயன்படுத்தப் போகின்றார்களோ நாம் அறியோம் பராபரமே.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=25642

  • தொடங்கியவர்

வன்னி மக்கள் நடுத்தெருவில்; தெற்கில் பாதை திறந்து சாதனை!

ஆசியாவின் ஆச்சரியம் வடக்கு, கிழக்குக்கு இல்லையோ? கேட்கிறார் விக்கிரமபாகு

61a86c00511ebfc35ac1780c5ea66f71.jpg

நாணய மதிப்பிறக்கம் என்ற போர்வையில் உழைக்கும் வர்க்கத்தின் ஊதியத்தை 3 சதவீதத்தால் குறைத்துள்ளது மஹிந்த அரசு என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

ஏழைகளை எட்டி உதைத்து படு பாதாளத்தில் தள்ளிவிட்டு செல்வந்தர்களை மேன்மேலும் தட்டியெழுப்பும் திட்டத்தையே இந்த அரசு வரவு செலவுத்திட்டமாக முன்வைத்துள்ளது எனறு அவர் குற்றம் சாட்டினார்.

வன்னி மக்கள் நடுவீதியில் அல்லோலகல்லோலப்படும் நிலையில் தெற்கில் அதிவேகப்பாதையைத் திறந்து சாதனை படைக்கின்றது அரசு. ஆசியாவின் ஆச்சரியத்தில் வடக்கு, கிழக்கு உள்வாங்கப்படவில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரூபாவின் பெறுமதியை அரசு அண்மையில் மூன்று சதவீதத்தால் மதிப்பிறக்கம் செய்தது. இந்நிலையில் அது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். நாணய மதிப்பிறக்கம், சமகால அரசியல் விவகாரம் என்பன தொடர்பில் "உதயனு"க்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

அரசு தனது இருப்பைத் தக்கவைப்பதற்குப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்டத்தில் தனியார் துறையினர் அடியோடு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் எதுவும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், நாணய மதிப்பிறக்கம் என்ற போர்வையில் அவர்களின் ஊதியத்தில் 3 சதவீதத்தை மறைமுகமாகக் குறைத்துள்ளது மஹிந்த அரசு. ரூபாவின் பெறுமதி 3 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளமையானது 3 சதவீதத்தால் செலவினங்களை அதிகரிக்கச் செய்யும். என்றார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=12046671728298645

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணைக்கு ஒரு பச்சை. நல்ல செய்தி.

இண்டைக்கு காலமை ஒன்று கால் கையை விபத்தில் உடைச்சு போட்டுதாம்.

இன்னமும் தென்னாசியாவில் ஒரு பாதையை மூன்று பாதைகளாக பாவிக்கும் பழக்கம் விட்டுபோகவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.