Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

107 அகதிகளுடன் அவுஸ்திரேலியா சென்றடைந்த படகில் 95 இலங்கையர்களும் தஞ்சம் புகுந்துள்ளனர்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TamilRefugees_asi011211_150.jpg

அகதி அந்தஸ்த்து கோரி அவுஸ்திரேலியா சென்றடைந்தவாகளுள் 95 இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. படகு மூலம் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்துள்ள 107 பேரை ஏற்றிய படகு நேற்று 30ம் திகதி புதன்கிழமை கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வந்தவர்களில் 95 பேர் இலங்கையர்களும் இரண்டு இந்தோனேசிய படகோட்டிகள் உள்ளடங்களாக 8 ஈராக்கியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் வருகையால் அவுஸ்திரேலியா பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின் அதிகமான இலங்கையர்கள் அகதி அந்தஸ்த்து கோரி அவுஸ்திரேலியாவிற்கு படகுகள் மூலம் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து கோரி கடந்த மாதம் படகுகள் மூலம் 892 பேர் வந்ததாகவும் இவ்வருட்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3708 பேர் வந்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

இருநூறுக்கும் அதிகமான அகதிகளுடன் இரண்டு படகுகள் அவுஸ்ரேலியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்கு அவுஸ்ரேலியக் கடற்பரப்பில் கண்ணிப்பு விமானம் ஒன்றினால் புதன்கிழமை இரவு முதலாவது அகதிகள் படகு அடையாளம் காணப்பட்டது.

இதையடுத்து அவுஸ்ரேலிய கடற்படைக் கப்பல் அதனை இடைமறித்து கைப்பற்றியது. இந்தப் படகில் 110 அகதிகளும் 4 மாலுமிகளும் இருந்தனர்.

இரண்டாவது படகு கிறிஸ்மஸ் தீவுக்கு வடக்கே நேற்று அதிகாலை மற்றொரு கண்காணிப்பு விமானத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் படகில் இருந்த 103 அகதிகளும் இரண்டு மாலுமிகளும் கடற்படைத்தளம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அகதிகள் அனைவரும் கிறிஸ்மஸ்தீவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.

இந்தப் படகுகளில் பயணம் செய்த அகதிகளில் கணிசமானோர் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாவது படகில் மட்டும் சிறிலங்காவைச் சேர்ந்த 95 பேர் பயணம் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அகதிகளின் தடுப்பு நிலையங்கள் நிரம்பி வழியும் நிலையில், பெருமளவிலான அகதிகள் மீண்டும் வரத் தொடங்கியிருப்பதால் அவுஸ்ரேலியாவுக்கு அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார்

http://www.puthinappalakai.com/view.php?20111202105140

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.