Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்தில் இலங்கையர் கொலை செய்யப்பட்டமை இனரீதியான தாக்குலாக இருக்கலாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Dec

02

இங்கிலாந்தில் இலங்கையர் கொலை செய்யப்பட்டமை இனரீதியான தாக்குலாக இருக்கலாம்!

resize_20111201185644.gif

இங்கிலாந்தில் இலங்கையர் கொலை செய்யப்பட்டமை இனரீதியான தாக்குலாக இருக்கலாம் என்று கொலை செய்யப்பட்டவர் பணியாற்றிய வியாபாரத்தளத்தின் உரிமையாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து Huyton இல் கடந்த செவ்வாய்கிழமை இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வியாபார தள உரிமையாளரான இலங்கையை சேர்ந்த குணபால வெல்கம இந்த சந்தேகத்தை இங்கிலாந்தின் செய்திதாள் ஒன்றிடம் வெளியிட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட இலங்கையர் 30 வயதானவர் என்றும் அவருக்கு 3 மற்றும் 6 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றும் அவர்களை காப்பாற்றுவதற்காகவே குறித்த இலங்கையர் தமது வியாபாரத்தளத்தில் பணியாற்றி வந்ததாகவும் குணபால குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொல்லப்பட்டவரின் பெயர் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய்கிழமை இரவு 9 மணியளவில் முகமூடியணித்த ஒருவரால் கொலை செய்யப்பட்டமையை அங்கிருந்த கண்காணிப்பு கருவியின் மூலம் அறியமுடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thedipaar.com...ws.php?id=37661

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் இலங்கையர் கொலை தொடர்பில் 19 வயது இளைஞன் கைது!

arrest002.jpg

பிரித்தானிய மேர்செசைட் பகுதியில் இலங்கையர் ஒருவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 19 வயதுடைய இளைஞன் நேற்று(07.12.2011) இரவு கைது செய்யப்பட்டு லிவர்பூல் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையரான 30 வயதுடைய மகேஸ் விக்ரமசிங்க என்பவர் கடந்த 29ம் திகதி நியூஸ் இன் கிங்ஸ்வே வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது முகமுடி அணிந்த நபரால் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பல வழிகளிலும் கொலைச் சந்தேக நபரைத்தேடும் பணியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கையிலுள்ள தனது குடும்பத்தை மேம்படுத்தவென கடந்த ஒரு வருட காலமாக பிரித்தானியாவில் குணபால வெல்ஹெனகமகே என்பவரது வர்த்தக நிலையத்தில் மகேஸ் விக்ரமசிங்க பணிபுரிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilthai.com/newsite/?p=1198

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.