Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில் 2 ஆம் உலக யுத்த குண்டு மீட்பு: 45,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

Featured Replies

ஜேர்மனியில் 2 ஆம் உலக யுத்த குண்டு மீட்பு: 45,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

1.8 தொன் எடையுள்ள இந்த குண்டு பிரிட்டனில் தயாரிக்கப்பட்டதாகும். ரைன் நதியில் வீசப்பட்டு வெடிக்காத நிலையில் கடந்தவாரம் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மழைவீழ்ச்சியின்மையால் அந்நதியின் நீர்மட்டம் குறைவடைந்தத்தை தொடர்ந்து இக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை இந்த குண்டை செயலிழக்கச் செய்வதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் குண்டு 2 கிலோமீற்றர் சுற்றுளவிற்குள் வசிக்கும் மக்களை அனைவரையும் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர். இரு வைத்தியசாலைகள், 7 மருத்துவ சிகிச்சை நிலையங்கள், ஒரு சிறைச்சாலை ஆகியவற்றிலுள்ளவர்களும் வெளியேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிராங்பர்ட் நகரிலிருந்து வடமேற்கே 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இந்நகரில் ரயில் மற்றும் வீதிப் போக்குவரத்துகளும் நிறுத்தப்படவுள்ளன.

http://rt.com/news/wwii-bomb-germany-evacuation-953/

http://www.tamilmirr...--2-45000-.html

  • தொடங்கியவர்

ஜேர்மனியில் ஒரு நகரமே மனிதரற்ற வெற்றிடமானது

ஜேர்மனியின் கோப்பிளன்ஸ் நகரத்தில் வாழ்ந்த 45.000 மக்களும் இன்று ஞாயிறு அதிகாலை அந்த நகரத்தை விட்டே வெளியேறியுள்ளார்கள். முழு நகரமும் மனித நடமாட்டமே இல்லாது வெறிச்சோடிக் கிடக்கிறது. இரண்டாம் உலக யுத்த காலத்தைச் சேர்ந்த பாரிய வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டனர்.

சுமார் 1.8 தொன் எடையுள்ள இந்தக் குண்டு பிரிட்டன் படைகளால் யுத்தத்தின்போது வீசப்பட்டுள்ளது. இதைச் சுற்றவர மேலும் பல சிறிய குண்டுகளும் இருந்துள்ளன. இந்தக் குண்டை செயல் இழக்க வைக்கும் பணிகள் இப்போது நடைபெறுகின்றன. மக்கள் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் ரயில் நிலையமும் வெறிச்சோடிக் கிடக்கிறது. விடயம் கேள்விப்பட்டவர்கள் நேற்று சனிக்கிழமையே தலைதெறிக்க ஓடிவிட்டார்கள். இன்று பி.ப15.00 மணியளவிலேயே குண்டை செயலிழக்க வைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்.

உலக யுத்த காலத்தில் பல மில்லியன் குண்டுகள் ஜேர்மனி மீது வீசப்பட்டுள்ளன. இவற்றில் வெடிக்காத குண்டுகள் அவ்வப்போது வெடித்து மனிதப்பலி எடுப்பதும், பல குண்டுகள் கண்டெடுக்கப்பட மக்கள் தலை தெறிக்க ஓடுவதும் வழமையான நிகழ்வுகளாகும். இதுபோன்ற நிகழ்வுகள் இலங்கையிலும் வரும் ஐம்பது ஆண்டுகளுக்கு தொடரும்.

kobl2.jpg

kobl1.jpg

http://www.alaikal.com/news/?p=89870

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவி மக்களை இலக்கு வைத்து குண்டு வீசிய பிரிட்டனை ஜெர்மானியர்கள் காரசாரமாக கண்டித்து ஒரு அறிக்கை விடவேண்டும்.

இந்த பிரதேசம் மக்கள் செறிந்து வாழும் இடமாகவே அப்போதும் இருந்துள்ளது. அங்கே ஒன்றரை டன் எடையுள்ள குண்டைவீசிய பேய்கள்தான் ஜெனநாயகம் பேசுகிறார்கள்.

இதில் ஜெனநாயகம் எங்கு இருக்கும்?

Edited by Maruthankerny

எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தது.எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.