Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிறுக்கல் சித்திரமாகிவிட்ட யாழ்ப்பாணப் பொருளாதாரம்

Featured Replies

கிறுக்கல் சித்திரமாகிவிட்ட யாழ்ப்பாணப் பொருளாதாரம்

சித்திரத்தில் பல வகைச் சித்திரங்கள் உண்டு. எனினும் எல்லோருக்கும் சித்திரம் கைவந்த கலையல்ல. சித்திரம் வரை யத் தெரியாத மாணவர்கள் சங்கீதப் பாடத்தை படிப்பதுண்டு. சாரீரம் இல்லாவிட்டாலும் சங்கீதம் பாடலாம் என்ற தற் துணிவுதான் அதற்குக் காரணம். நம் போன்றவர்கள் சித்திரம் வரையத் தெரியாத காரணத்தினால் சங்கீதம் படித்து தாளம் போடக் கற்றுக்கொண்டதுண்டு. அன்று தாளம் போடக் கற்றுக் கொண்டதால் தான் இன்று எல்லோருக்கும் தாளம் போட முடிகின்றது.

இருந்தும் சித்திரம் தெரியாமல் போய்விட்டதே என்ற கவலைக்கு ஓர் அறிஞர் மருந்து கூறினார். அதுதான் கிறுக்கல் சித்திரம். கண்டபாட்டில் கிறுக்கி அதில் ஏதேனும் வடிவங்களை உருவாக்குவது கிறுக்கல் சித்திரத்தின் சிறப்பு. இங்கு வடிவங்கள் வருவது, அதனை இனங்காண்பது என எல்லாமும் ஒரு அதிர்ஷ்டம் போன்றது. சிலர் கிறுக்கல் சித்திரத்தில் விண்ணர்கள். இன்னும் சிலர் கிறுக்கலில் சித்திரமே இல்லை என்பர்.

இப்படியான நிலையில்தான் எங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் எதிர்கால பொருளாதார முயற்சிகள் இருப்பதைக் காண முடிகிறது. எங்கு பார்த்தாலும் கடை கட்டும் முய ற்சி. கட்டப்படும் கடையில் கூட எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரியாக அமைக்கப்படும் பரிதாபம். கடை களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, வீட்டிற்கொரு கடை கட்டுவோம் என்று மக்கள் முடிபெடுத்து விட்டார்கள் என எண்ணத் தோன்றுகிறது.

எல்லோரும் கடை கட்டி வியாபாரம் செய்தால், நுகர்வோர் யார்? அவர்கள் எங்கிருந்து வருவார்கள்? இது பற்றி எவ ருமே சிந்திப்பதாக இல்லை.

தொழில் தேவை என்பதற்காக கடைதான் கட்ட வேண்டுமா? இப்போது கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் வர்த்தக முயற்சிகள் மும்முரமாக இருக்கலாம். ஆனால், எதிர்வரும் காலத்தில், தென் பகுதியில் இருக்கும் சுப்பமார்க்கற் உள்ளிட்ட அமைப்புக்கள் யாழ்.குடாநாட்டை ஆக்கிரமித்துக் கொண்டால், இங்குள்ள வர்த் தக நிலையங்களின் கதி யாது?

முதல் முடக்கம், நட்டம் என்பவற்றின் முடிபு விரக்தியாகவே இருக்கும். எனவே வர்த் தக முயற்சி மட்டுமே என்று இராமல் வேளாண்மை, தென்னைச் செய்கை, மர முந்திரிகை, மாட்டுப் பண்ணை, கோழி ப்பண்ணை, இறால் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, கடல் உணவை கொள்வனவு செய்து இங்கேயே பதப்படுத்தல், கண்ணா டித் தொழிற்சாலை, இரும்பு உருக்கு உற்பத்தி, ரயர் உற்பத்தி இப்படியான தொழிற்சாலைகளை அமைப்பதுடன்; யாழ்.குடாநாட்டின் வர்த்தக முயற்சியாளர்கள் தென்பகுதியில் உள்ள சுப்பமார்க்கற் அமைப்புகளுக்கு ஈடாக இங்கும் வர்த்தக அமைப்புகளை மக்களின் பங்கு மூலதனத்துடன் ஆரம்பித்து எங்கள் பொருளாதாரத்தை பலமானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.இதனைச் செய்யத்தவறினால் கட்டிய கடைகளுக்கு முன்னால் ஊர் ஆடுகளே உறங்கிக் கொள்ளும்.

http://www.valampuri...ws.php?ID=25692

தொடர்புபட்ட செய்திகள் :

எமது தாயகத்தின் பொருளாதார நிலமை: http://www.yarl.com/forum3/index.php?showtopic=80651

தாயகத்தில் எவ்வாறு பொருளாதார பலத்தை வளர்க்கலாம்? இன்றைய சூழலில் இது ஒரு சவாலே. ஆனாலும் அந்த மக்களுக்கு எதோ ஒரு வழியில் உதவ வேண்டும். அதேவேளை அந்த உதவியால் அவர்களுக்கு பாதிப்பும் வராமல் இருக்க வேண்டும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=91501&pid=709965&st=120&#entry709965

  • தொடங்கியவர்

உலக நாடுகள் (மக்கள்) அனைவரும் தம்மகத்தே குறைந்தது மூன்று முக்கிய அம்சங்களை கொண்டுள்ளனர். அவையாவன: அரசியல், பாதுகாப்பு (இராணுவம்), பொருளாதாரம். இந்த மூன்றிலும் எது அதி முக்கியமானது? பொருளாதாரம்.

ஒரு நாடு, இனம் தனது பொருளாதார வலுவை தக்க வைக்கவே அரசியலையும், பாதுகாப்பையும் முன்னெடுக்கின்றன. இந்த இரண்டும் மேம்பட பொருளாதாரம் முக்கியம், பொருளாதாரம் மேம்பட மற்றைய இரண்டும் முக்கியம். இந்த மூன்றையும் செழிப்பாக வைத்திரக்கும் பொழுது தான் மற்றைய அம்சங்கள் பேணப்படும்: மொழி, கலாச்சாரம், பண்பாடு, மதம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.