Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரான்ஸில் குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர் யாழில் இருந்தால் பிரான்ஸுக்கு அழைக்க வாய்ப்பு'

Featured Replies

பிரான்ஸில் குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர் யாழில் இருந்தால் பிரான்ஸுக்கு அழைக்க வாய்ப்பு'

பிரான்ஸில் சட்ட ரீதியாக புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தால் அவர்கள் பிரான்ஸில் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதறகான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டினா ரொபின்சன் தெரிவித்ததாக யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் தன்னை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக யாழ். மாவட்ட செயலாளர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சமகால அரசியல் தமிழ் மக்களுக்கு விரும்பத்தக்க ஒன்றாக இருக்கிறதா எனவும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் அரசியல் வாதிகளினால் நிறைவேற்றக் கூடியதாக இருக்கிறதா என்பது தொடர்பாகவும் பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டினா வினவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வுக்கு பின்னர் அவர்களின் வாழ்வியல் எவ்விதம் இருக்கிறது என்பது தொடர்பாகவும் பிரான்ஸ் தூதுவர் கேள்வி எழுப்பினார்.

அத்தோடு இனங்களுக்கிடையில் எவ்விதமாக புரிந்துணர்வு காணப்படுகிறது எனவும் சமூகங்களுக்கிடையில் ஒன்றிணைவு தொடர்பிலும் தன்னிடம் கேட்டதாக அவர் தெரிவித்தார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/32504-2011-12-12-17-26-36.html

இது நல்ல பகிடியாய் இருக்கு,

  • கருத்துக்கள உறவுகள்

பிரெஞ்சரசு ஒருபோதும் இப்படி சொல்லியதில்லை. சொல்லாது

  • தொடங்கியவர்

சில செய்திகளில் தலையங்கம் 'கவர்ச்சிகரமாக' இருக்கும் உள்ளுக்குள் விஷயம் இருக்காது. சிலவற்றில் விசயங்கள் தாண்டு போய் இருக்கும்.

இங்கே, பிரெஞ்சு நாட்டு தூதர்கள் உட்பட பலரும் வடக்கு - கிழக்கு சென்று பல முக்கிய கேள்விகளுக்கு பதில் தேடுகின்றனர். அதன் மூலம் ஒரு கொள்கை மாற்றத்தை அவர்கள் ஏற்படுத்தலாம்.

- சமகால அரசியல் தமிழ் மக்களுக்கு விரும்பத்தக்க ஒன்றாக இருக்கிறதா?

-மிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் அரசியல் வாதிகளினால் நிறைவேற்றக் கூடியதாக இருக்கிறதா ?

- முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வுக்கு பின்னர் அவர்களின் வாழ்வியல் எவ்விதம் இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

gtv யிலும் இதுபற்றி கூறப்பட்டது.

நல்ல சந்தர்ப்பம்.

  • தொடங்கியவர்

யாழ்ப்பாண கள நிலைமைகளை துருவித்துருவி ஆராயும் தூதுவர்கள் - யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் யாழ்ப்பாணகள நிலைமை, யாழ்ப்பா ணத்தில் இராணுவத்தின் செயற்பாடு, மக்களின் வாழ்வாதாரம் என்பன தொடர்பில் துருவித் துருவி ஆராய்வதாக யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கூறியதாவது, பிரான்ஸ் மற்றும் கனடா நாட்டுப் பிரதிநிதிகள் குழு நேற்று யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை மாவட்ட செயலகத்தில் சந் தித்து கலந்துரையாடியது. இதன் போதே அவர்கள் தன்னிடம் மேற்கண்டவாறு கேள்விகளை கேட்டிருந்தனர் என அரச அதிபர் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பிரான்ஸ் நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் கிறி ஸ்ரின் ரொபின்சன், அந்நாட்டுப் பிரதிநிதி அனோமா ராஜ புருனா மற்றும் கனடா நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீ வுக்கான தெற்காசிய தொடர்பு அதிகாரி கேற் பின்டர், அரசியல் மற்றும் பொருளாதார உயரதிகாரி மேகன் பூஸ்ரர் ஆகி யோர் என்னை சந்தித்து தற்கால நிலைவரம் தொடர்பாக கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடலின் போது பிரா ன்ஸ் நாட்டுத் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சன் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் எவ்வாறு செயற்படுகின் றனர். தற்கால அரசியல் தமிழ் மக்களுக்கு விரும்பத்தக்கதாக உள்ளதா? நடந்து முடிந்த தேர்தல் முடிபு சரியானது என மக்கள் கருதுகின்றனரா எனவும் கேள்விகளை எழுப்பியிருந்தார். இது தவிர கனடா நாட்டு பிரதிநிதிகள் இராணுவ செய ற்பாடுகள் மக்களின் சுதந்திர மான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துகின்றதா? அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படு கிறதா? வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் திரும்பிவருகின்றனரா? பொலிஸ், இராணுவம் மக்களுக்கு ஒத்துழைப்பு வழ ங்குகின்றனரா எனவும், மீள்குடியேற்றம், பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தனர்.

இதேவேளை நேற்று முன்தினம் என்னைச் சந்தித்த அமெரிக்கப் பிரதிநிதிகளும் இவ்வாறான கேள்விகளையே என்னி டம் கேட்டிருந்தனர். அரச நிர்வாகி என்ற ரீதியில் அவர்கள் கேட்ட கேள்விக்கு உரிய பதில்களை நான் அளித்திருந் தேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=25874

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.