Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன படைத்தரப்பின் உயர்மட்ட குழு சிறிலங்காவில்

Featured Replies

சீன படைத்தரப்பின் உயர்மட்ட குழு சிறிலங்கா படைத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுடன் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன படைத்தரப்பின் உயர்மட்டக் குழு சிறிலங்காவின் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

சிறிலங்காவின் படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சீன படைத்தரப்பின் அதிகாரிகளுக்கான பிரதித் தலைவர் ஜெனரல் Ma Xiaotian தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர்மட்டக் குழு கலந்து கொண்டுள்ளது. சிறிலங்காவின் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தனது இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள நிலையிலேயே சீனப் படைத்தரப்பின் உயர்மட்ட அதிகாரிகள் அவரைச் சந்தித்துள்ளனர்.

சிறிலங்கா படைத்தரப்புடன் போர் ஒத்திகைகள், பயிற்சிகள் மற்றும் படைத்தரப்பு உதவிகளை ஊக்குவிக்குடன் நோக்குடனேயே இக்குழுவினர் கொழும்புக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே, சிறிலங்காவின் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை இக்குழுவினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இச்சந்திப்பில் இவ்விரு நாடுகளின் படைத்தரப்புக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் சிறிலங்கா படைத்தரப்புக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், சீனாவின் படைத்தரப்பு பயிற்சிக் கல்லூரிகளில் சிறிலங்கா படைத்தரப்பின் இளம் அதிகாரிகளுக்கு பயற்சி அளிப்பதை அதிகரிக்குமாறு சீனாவால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. சீனாவின் படைத்தரப்பு பயிற்சிக் கல்லூரிகளில் தற்போது சிறிலங்கா படைத்தரப்பின் இரு மேஜர் ஜெனரல்கள் உட்பட 32 படையதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

அதேவேளை, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, விமான மற்றும் கடற்படைத் தளபதிகளையும் இக்குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களில் ஜெனரல் Ma Xiaotian இலங்கைக்கு இரண்டாவது தடவையாக விஜயம் செய்துள்ளார். இலங்கையில் நான்கு நாட்கள் தங்கியிருக்கவுள்ள இக்குழுவில் றியர் அட்மிரல் Guan Youfei, கேணல் Guo Hongwei, கேணல் Song Yanchao, கேணல் Zhao Meng,கேணல் Liu Bin,கப்டன் Jiang Bin ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சீனக் கடற்படையின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவுடன் சிறிது காலத்திற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது வருடம் தோறும் இடம்பெறும் 'ஒப்பரேசன் நீர்க்காகம்' போன்ற போர்ப்பயிற்சிகளுக்கு சீனக் கடற்படையின் பிரதிநிதிகளை அனுப்புவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தமை தெரிந்ததே.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=b2a905e9-623a-4e1b-8a59-6bae12097f4f

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.