Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனவாதம், பக்கச்சார்பு, பழிவாங்கல் மூன்றினுள்ளும் சிக்கித் தவிக்கும் நாட்டில் - கிரிக்கெட்டும் "சடுகுடு விளையாட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது: அரியநேத்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ariyaneththiran_mp_seithy.jpg

அறியாமை, வறுமை மற்றும் இயலாமை இவை மூன்றும் இந்த நாட்டுக்கு உரித்துடையதாகும் என்பதுடன் இனவாதம் பக்கச்சார்பு மற்றும் பழிவாங்கல் எனும் மூன்று நெருக்கடிக்குள்ளும் நாடு சிக்கித் தவிக்கின்றது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. யான அரியநேத்திரன் தெரிவித்தார்.

கிரிக்கெட் மற்றும் "சடுகுடு' விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு முன்னர் 41 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர் அன்றேல் கொலை செய்யப்பட்டுள்ளனர். காணாமல் போயுள்ளனர். இங்கு ஊடக தர்மம் இல்லை. ஊடக சுதந்திரமும் இல்லை. யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகை நிறுவனத்தின் மீதும் அதன் ஆசிரியர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.ஜே.வி.பி. யின் மாற்றுக் குழு ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக இருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது.

நாட்டில் இயங்கும் அரச ஊடகங்கள் ஜனாதிபதிக்கு பக்கச் சார்பாக இயங்குவதாக நாமல் ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டார். அவரை ஊடக அமைச்சராக நியமித்தால் பிரச்சினை இருக்காது என்றே நான் எண்ணுகின்றேன். 2004 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் இதனைக்கூறி வருகின்றதை நாமல் ராஜபக்ஷ ஏற்றுக் கொள்கின்றார். "தமிழ்த்தேசியம்' தொடர்பில் செய்திகள் வெளிவரக் கூடாது என்று அச்சுறுத்தப்படுகின்றன.

சிலர் அன்புக் கட்டளையிட்டு எச்சரிக்கப்படுகின்றனர். ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், ஆசிரியர்கள் அழைக்கப்பட்டே அன்புக் கட்டளை விடுக்கப்பட் டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் வடக்கில் கலாசார சீர்கேடுகள் அதிகரித்துள்ளன என்பதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கலாசார சீர்கேடு முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் ஏன் ஏற்படவில்லை?

ஊடகவியலாளர் 25 வருடங்கள் சேவையாற்றியிருந்தால் அவர்களுக்கு வாகன வரிச் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தை 10 வருடங்களாக குறைக்க வேண்டும். கொழும்பிலிருந்து செயற்படும் ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் பகுதி நேர ஊடகவியலாளர்களும் பிராந்திய ஊடகவியலாளர்களும் இருக்கின்றனர். அவர்களையும் இந்த சலுகைக்குள் இணைத்துக் கொள்ளும் வரப்பிரசாதம் கிட்ட வேண்டும்.

அறியாமை, வறுமை, இயலாமை இவை நாட்டுக்கு உரித்துடையது. அதேபோல இனவாதம், பக்கச் சார்பு, பழிவாங்கல் இவை மூன்றின் நெருக்கடிக்குள்ளும் நாடு சிக்கியுள்ளது "சடு குடு' கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

http://www.seithy.co...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.