Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை: ஐ.நா சபையிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள்!

Featured Replies

தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை:

ஐ.நா சபையிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள்!

ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளதாக நாதம் ஊடகசேவை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே இக்கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை, குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறம்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் - இவையெல்லாம் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையின் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை இத்தீர்மானம் கோரியுள்ளது.

மேலும், சிறிலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளை கிராம ரீதியாகக் கண்காணிப்பதற்காக உலகின் முக்கியமான நாடுகளில் கண்காணிப்புக் குழுக்களை அமைப்பது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை 2012 ஆம் ஆண்டை சிறிலங்கா அரசின் மீதான அனைத்துலக விசாரணைக்குரிய ஆண்டாகப் பிரகடனப்படுத்தும் தீர்மானம் ஒன்றையும் நா.த.அரசாங்கத்தின் பாராளுமன்ற கூட்டத் தொடர் நிறைவேற்றியுள்ளது.

டிசம்பர் 14ம் திகதி முதல் 17 திகதி வரை இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடர் அமர்வின் நிறைவுநாளில் இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழீழமே ஈழத் தமிழர் தேசத்தின் இலக்கு - அந்த இலக்கு நோக்கிய பயணத்தை நாம் உறுதியுடன் தொடருவோம் என்பதை எதிரிக்கும் உலகத்துக்கும் முரசறைந்து கூறக்கூடிய வகையில் நமது மூன்றாவது அமர்வு நிகழ்கள் நடைபெற்று நிறைவேறியிருக்கின்றன.

இந்தியாவிலிருந்தும் தென்னாபிரிக்காவிலிருந்தும் முதலாவது நியமன அரசவை உறுப்பினர்கள் இந்த அமர்வில் சத்தியப்பிரமாணம் செய்து அமர்வில் பங்கு கொண்டிருக்கிறார்கள். உலகளாவிய ரீதியில் தமிழர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பின் அணிவகுக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது வலுவினை அதிகரிக்கும் முயற்சியில் இது ஒரு முக்கியமான படிக்கட்டு.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பிரதிநிதிகள், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அறிஞர்கள் நேரடியாகப் பங்குபற்றி வழங்கிய கருத்துரைகள், பிரித்தானிய அரசியற் தலைவர்களின் வாழ்த்துக்கள் போன்றவையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னைத் ஈழத் தமிழர் தேசத்தின் வலுமையமாக ஆக்கிக் கொள்வதற்கு வலுச் சேர்க்கக் கூடியவை.

புதிதாய் அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனப்படுகொலை நிபுணர்குழு முதற்தடவையாகக் கூடித் தனது செயற்பாடுகளை ஆராய்ந்துள்ளது. சிறிலங்கா அரசின் ஈழத் தமிழ் தேசத்தின் மீதான இனப்படுகொலையினை அனைத்துலக அரங்கிலும் உள்நாடுகளிலும் காத்திரமாக வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு வகையிலான அணுகுமுறைகளை இந் நிபுணர்குழு ஆராய்ந்தது.

உள்நாடுகளில் கூடுதலான சட்டநடவடிக்கைககைளை மேற்கொள்வது குறித்தும் அனைத்துலக அரங்கில் மக்கள் நீதிமன்றங்களை அமைத்து சிறிலங்கா அரசின் இனப்படுகொலை குறித்த விசாரணைகளை மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டன.

2012 ஆம் ஆண்டு மனித உரிமை ஆணைக்குழுவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயற்படவேண்டிய முறை குறித்து ஆராய்வதற்காக ஒரு விசேட மூலோபாயச் சந்திப்பும் மேற்கொள்ளப்பட்டது.

நள்ளிரவுவரை நீடித்த இந்தச் சந்திப்பில் உறுப்பினர்கள் காட்டிய உற்சாகம் மிகுந்த நம்பிக்கையினைத் தந்தது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் போராட்டப்பாதை குறித்து சமர்பிக்கப்பட்ட ஆவணம் குறித்தும் நாம் விவாதித்தோம். இது குறித்த விவாதங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு நாம் பயணிக்க வேண்டிய திசையினை தெளிவாக வரையறுத்துக் கொள்வதற்கு இந்த அமர்வு வழிகோலியுள்ளது.

அறிஞர்களும் செயற்பாட்டார்களும் இந்த அமர்வில் முன்வைத்த கருத்துக்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணை செய்யக்கூடியவையாக அமைந்தன. புத்தாக்கச் சிந்தனைகளுக்கு களம் அமைப்பவையாகவும் அமைந்தன.

முஸ்லிம் சகோதரர்களுடனான அரசியல் உறவுகள் தொடர்பான உரையாடல் இங்கே ஆரம்பமானது. தமிழீழத் தாயகத்தில் சிங்களத்தின் இன அழிப்புக்கெதிராக அனைத்துலக பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது தொடர்பான ஆவணம் மீதும் சபை விவாதித்தது. சிறிலங்கா அரசு தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் குடியேற்றங்கள் தொடர்பாகவும் நாம் இச் சபையில் விவாதித்திருந்தோம்.

இப்படியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த மூன்றாவது அமர்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் முன்னேறுவதற்கு உதுணையாகப் பல்வேறு விடயங்களை விவாதித்திருந்தது.

ஈழத் தமிழர் தேசத்தின் அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்தில் 2012 ஆம் ஆண்டு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கப் போகிறது எனவும் - இவ் ஆண்டு சிறிலங்கா அரசுக்கும் ஈழத் தமிழர் தேசத்துக்கும் சவால் மிக்கதொரு ஆண்டாக அமையும் எனவும் இந்த ஆண்டில் எவர் முன்னோக்கி ஒடுகிறார்களோ அவர்களே அடுத்த கட்ட வெற்றியைத் தமதாக்கிக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன எனவும் நான் எனது மூன்றாவது அமர்வுக்கான ஆரம்ப உரையில் தெரிவித்திருந்தேன்.

நடைபெற்று முடிந்த மூன்றாம் அமர்வு நிகழ்வுகள் 2012 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் தேசத்தின் ஆண்டாகவே அமையப் போகிறது என்பதனை எமக்கு உள்ளுணர்த்தி நிற்கின்றன. 2012;ம் ஆண்டை நமது ஆண்டாக வென்றெடுக்க அனைவரும் திடசங்கற்பம் பூண்டு உழைப்போமாக என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனதுரையில் தெரிவித்தார்.

இவ்வாறு நாதம் ஊடகசேவை தெரிவித்துள்ளது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=ba8bbeb3-1601-4be5-bb2a-f9f182cd3c00

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.