Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா நியாயமற்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது!-ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா நியாயமற்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது!-ஜனாதிபதி.

resize_20111220191034.jpg

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் அமெரிக்கா, நியாயமற்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையின் ஊடக முதன்மையாளர்களை நேற்று சந்தித்தபோது ஜனாதிபதி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக ஏ.எப்.பி. செய்திசேவை தெரிவித்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு, பரந்துப்பட்ட நிலையில் நல்லிணக்கம் தொடர்பான பரிந்துரைகளை செய்துள்ளது. எனினும் அமெரிக்கா மாத்திரம் போரின் இறுதிக்கட்ட நாட்கள் தொடர்பில் தமது கவனத்தை செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது பொதுமக்கள் மீது படையினர் திட்டமிட்டு தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்று நல்லிணக்க ஆணைக்குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது அது தொடர்பில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

http://www.thedipaar.com/news/news.php?id=38578

அமெரிக்காவின் உத்தியோக பூர்வ அறிக்கை இன்னும் வெளிவில்லையே. பீரிசும் இவரும் அவசரம் அவசரமா ஆயத்த படுத்தி வைத்தவை எல்லாவறையும் அவிழ்த்துவிடுகிறாரகள்.

"நாங்கள் முழு அறிக்கையையும் படித்து வருகிறோம். இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற உண்மையான மனித உரிமை மீறல் மற்றும் சம்பவங்கள் குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ள விதம் தொடர்பில் நாம் கவலையடைகிறோம்."

- விக்டோறியா நூலண்ட்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=95823

Edited by மல்லையூரான்

அமெரிக்கா நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தாக தனது முழுமையான அறிக்கையை வெளிவிட இன்னமும் சில நிபந்தனைகளை முன் வைக்கிறது.

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் புதிய அறிக்கை - இராஜதந்திர வழியில் அமெரிக்கா அழுத்தம் [ ஞாயிற்றுக்கிழமை, 25 டிசெம்பர் 2011, 03:32 GMT ] [ கார்வண்ணன் ]

State%20Department%20Spokesperson%20Ms.%20Victoria%20Nuland.jpgசிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக அமெரிக்கா அதிருப்தி கொண்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சிறிலங்காவுடன் இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு முழுமையாகப் பதிலளிக்கும் வகையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமையவில்லை என்று அமெரிக்கா கருதுகிறது.

கடந்தவாரம் நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் அம்மையார் இதனை உறுதி செய்திருந்தார்.

இந்தநிலையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த அறிக்கையின் குறைபாடுகள் பற்றி சிறிலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு இராஜதந்திர ரீதியான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு,மத்திய ஆசியப் பிராந்தியங்களுகான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் பலருடனும் தொலைபேசி மூலம் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

அத்துடன் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிசும் பல்வேறு மட்டங்களிலும் சிறிலங்கா அரசுடன் இதுதொடர்பாக பேச்சு நடத்தியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறைபாடுகளை கொண்டது- போதுமானதாக இல்லை என்ற தகவல், சிறிலங்கா அரசுக்கு அமெரிக்காவினால் இதன் மூலம் பரிமாறப்பட்டுள்ளது.

அத்துடன் மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு முழுமையாகப் பதிலளிக்கும் வகையிலான புதிய அறிக்கை ஒன்றை சிறிலங்காவிடம் இருந்து அமெரிக்கா எதிர்பார்ப்பதான தகவலும் பரிமாறப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் இந்த அழைப்பு சிறிலங்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ள போதும், இன்னமும் உரிய பதில் கொடுக்கப்படவில்லை.

சிறிலங்காவின் முறைப்படியான பதிலை இராஜத்தந்திர வழிமுறையில் அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும், அதன் பின்னரே, ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய அமெரிக்கா வெளிப்படையான கருத்தை முன்வைக்கும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா கோரியுள்ளது போன்று மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலான முழுமையான அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பிக்க இணங்கினால், அமெரிக்கா மென் போக்கில் அணுகும் என்றும், இல்லையேல் கடும் போக்கை வெளிப்படுத்தும் என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு சிறிலங்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், புதிய அறிக்கை ஒன்றை தயாரிக்க அது இணங்காது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.

http://www.puthinapp...?20111225105266

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.