Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேகுவேரா இருந்த வீடு: வெளிவர இருக்கும் யோ.கர்ணனின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு

Featured Replies

wrappercheguvera675x102.jpg

‘தேவதைகளின் தீட்டுத்துணி’ என்ற எனது முதலாவது சிறுகதைத்தொகுப்பு வெளியாகி பதின்னான்கு மாதங்களின் பின் இப்பொழுது ‘சேகுவேரா இருந்த வீடு’ என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளியாகிறது. இடைப்பட்ட காலத்தில் எழதி பிரசுரமான சில கதைகள், பிரசுரமாகாத கதைகளென பதின்மூன்று கதைகள் இதிலிருக்கின்றன. ஈழ நூல்களைத் தொடர்ந்து பதிப்பித்து வரும் வடலிதான் இதனையும் வெளியிடுகிறது.

முன்னர் ஒரு காலத்தில் கதைகள் எழுதுவதிலும், புத்தகங்கள் வெளியிட வேண்டுமென்பதிலும் அலாதி பிரியமிருந்தது. அப்பொழுதெல்லாம் நிறையக்கதைகள் எழுதித்தள்ளினேன். ஆயினும் அப்பொழுது எந்தப்புத்தகமும் வெளியாகியிருக்கவில்லை. ஒரு புத்தகத்திற்கு முயற்சி செய்து இறுதி வரை வந்து கைவிட வேண்டியதாயிற்று. அப்பொழுது அது பெரிய கவலையான விடயம்தான். இப்பொழுது அந்த ஆர்வங்களெல்லாம் குறைந்துவிட்டது. எழுதுவதிலெல்லாம் முன்னர் இருந்தளவு ஆர்வமோ பிடிப்போ கிடையாது. ஆனாலும் எதேச்சையான சம்பவத்தை போல இரண்டாவது புத்தகம் கூட இப்பொழுது வருகிறது. இதெல்லாம் சூழ்நிலைகளினாலும் சில நண்பர்களினாலும் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது என நினைக்கிறேன்.

தீவிரமாக கதைகள் எழுதி, பின்னர் இதெல்லாம் வேலை மினக்கெட்ட சிலர் செய்வது போன்ற உணர்வு தோன்றி 2006 இன் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட பிடிவாதமாகவே எழுதுவதை நிறுத்திவிட்டிருந்தேன்.

பின்னர் மீண்டும் எழுத வைத்தவர் என்றால் முதலில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவைதான் குறிப்பிட வேண்டும். வுவுனியா மெனிக்பாம் அகதிகள் முகாமில் ‘ஒளிந்திருந்த’ எங்களை, ‘முன்னாள் புலிகளே சரணடையுங்கள். ஓளித்தருரந்து நாங்கள் கைது செய்தால் இருபது வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை கிடைக்கும்’ என வெருட்டி சரணடைய வைத்து, தடுப்பு முகாம்களிற்குக் கொண்டு சென்று சும்மா வைத்திருந்த நாட்களில் பொழுது போகாமல் சிங்களம் படிக்க தொடங்கிய அனேகரில் நானுமொருவன். பின்னர், குறையாகப் படித்த சிங்களத்தை பரீட்சித்துப்பார்ப்பதற்காகவே ஆமிக்காரரினால் நடத்தப்பட்ட உணவு தொடக்கம் சவர்க்காரம் வரை விற்கும் சிறு கடையில் அரைகுறை சிங்களத்துடன் கொஞ்சம் சைகையும் சேர்த்து ஓரு நூறுதாளக்; கொப்பி வாங்கினேன். கொப்பியை சும்மா வைத்திருக்காமல்; எதையாவது எழுதுவதென முடிவு செய்து, ஒரு கதையெழுத முயன்றேன். தலைப்புதான் கிடைத்தது. கதை கிடைக்கவில்லை. அந்த தலைப்பை அப்பொழுதே அதில் எழுதி வைத்திருந்தேன்- தேவதைகளின் தீட்டுத்துணி என. ஆறுமாதமாக அங்கு முயன்று அந்த கதையின் முதல் இரண்டு பந்திகளை மட்டுமே எழுத முடிந்தது. பின்னர் ‘சமூகத்துடன் இணைந்த’ பின் அந்த கதையையும் இன்னும் சிலவற்றையும் எழுதி முடித்தேன். அப்பொழுது அந்த கதைகளை பாராமலேயே அகிலன் அவற்றை புத்தகமாக வெளியிட்டார். அதுதான் முதலாவது தொகுதி.

எழுதி எழுதி பெட்டிக்குள் வைத்திருந்தவற்றை புத்தகங்களாக்கி அகிலன் இங்கே என்னை அழைத்து வந்திருக்கிறார். சில வேளை அவரது ஆதரவும், நட்பும்; இருந்திருக்காவிட்டால் இந்த புத்தகம் வரையான கதைகள் சாத்தியமாகியிருக்காது. அவர் பதிப்பாளராக மட்டுமிருக்கவில்லை. நண்பர்களிடமெல்லாம் சம்பிராதாயம் பார்ப்பதில்லை என்பதால் அவருக்கு நன்றி எதுவும் சொல்லப்போவதில்லை.

அதுபோலத்தான் பாரதிதம்பியும். இரண்டு புத்தகங்களின் உருவாக்கத்திலும் அவர் பெரிதும் பங்களித்திருக்கிறார்.

இப்பொழுது இலங்கை இராணுவத்தின் முகாமிருக்கும் உழவனூரில்- தர்மபுரம்- பத்து வருடங்களின் முன் புலிப்போராளிகளின் முகாமாகயிருந்ததைவிடவும், அதிகமாக ஒரு இலக்கிய முகாமாகவேயிருந்தது. அப்பொழுது நாங்கள் அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்தோம். இரண்டு தமிழ் வாத்தியார்கள். ஓருவர் ஆறுமுகம் மாஸ்ரர். அவர்தான் முதல்முதல் சிறுகதையென்றால் என்ன என்று ஆரம்பித்தார். சிறுகதைகளின் மீது அவருக்கிருக்கும் பிரியம் அளவற்றது. மற்றையது மூக்குத்தி ரீச்சர் என்ற யசோ ரீச்சர். அவருக்கு கிட்டத்தட்ட எங்கள் வயது. அதனாலேயே தமிழ் வகுப்பை ஒரு நாளும் தவறவிடவில்லை. இருவருக்கும் வாரம் தலா ஒவ்வொரு கதை எழுதிக்காட்ட வேண்டியிருந்தது. கட்டாயம் சண்டைக்கதைகள்தான் எழுதித் தர வேண்டும் என்ற எந்தக்கட்டுப்பாடுமிருக்கவில்லை. ரீச்சருக்கு காதல்கதைகளாக எழுதிக்காட்டினோம்.

இது போதாதென்று வாரத்தின் ஒவ்வொரு செவ்வாயும் எழுத்தாளர் ஆதிலட்சுமி சிவகுமார் சிறுகதை பற்றிய அறிமுகம் செய்து வைப்பார். அவருக்கு வாரம் இரண்டு கதை காட்ட வேண்டும். ஆக மொத்தம் வாரத்தில் நான்கு கதை.(ஆண்களும் பெண்களுமிருந்த அந்த இடத்தில் வாரத்தில் நான்கு கதைகளும் எழுதி, காதல்கடிதமும் எழுதியவர்களும் இருக்கிறார்கள்!)

அந்த நாட்களில் புலிகளின்குரல் வானொலி கலை இலக்கிய போட்டியொன்றை ஒவ்வொரு வருடமும் ஆரம்பித்தது. ஆதி அக்காவும் தனது மாணவர்களுடன் களம் இறங்கினார். ஓவ்வொருவரும் இரண்டு கதைகளை அந்தப்போட்டிக்காக எழுதிக் கொடுக்க வேண்டியிருந்தது. துரதிஸ்டவசமாக நானெழுதிய அந்த இரண்டு மொக்கைக் கதைகளும் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்றிருந்தன. இதன் மூலம் நானும் இலக்கியக் கடலில் குதித்தேன். இவர்கள் அனைவருக்கும் எந்நாளும் நன்றியுடையவனாயிருப்பேன்.

பின்னாட்களில் நிறையப்பேர் என்னை வளப்படுத்த முயன்றார்கள். குறிப்பாக இளந்திரையன் (இராணுவப் பேச்சாளராவதற்கு முந்தைய இளந்திரையன்), ராதேயன், கருணாகரன், முல்லைக்கமல் போன்றவர்கள் விசேடமாக நன்றிக்குரியவர்கள்.

http://yokarnan.com/?p=163

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.