Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரவு எட்டணா??!! செலவு பத்தணா??!!

Featured Replies

tnrf-new.jpg

லண்டனில் மாவீரர் தினத்தை 21 வருடங்களாக நடத்திவரும் கட்டமைப்பு காசுக் கணக்கை சரியாகக் காட்டவில்லை எனத் தெரிவித்து திடீரென உள் நுளைந்த தலைமைச் செயலகத்தினர் தாமே இனி மாவீர் தினத்தை நடத்துவோம் என மார்தட்டி நின்றனர். அவர்களுக்கு முதலில் நேசக்கரங்களை நீட்டியது நாடுகடந்த அரசாங்கமே ஆகும். நாடு கடந்த அரசில் தம்மைத் தாமே அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்வோர் பகிரங்கமாகவே தலைமைச் செயலகத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர். இந்தச் சிக்கல் போதாது என்று GTV வேறு இவர்களுடன் இணைந்து தமது ஆதரவைத் தெரிவித்தனர். ஆடான ஆடெல்லாம் இப்படி அலைய தான் மட்டும் சும்மா இருப்பதா என்று வெறும் 100 பேர் மட்டுமே கேட்க்கு ஐ.பி.சி என்ற வானொலியும் இவர்கள் வாலைப் பிடித்து ஆடியது. மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத சத்தியர் என்னும் தனி மனிதரிடம் சிக்கி ஐ.பி.சி சின்னாபின்னப்பட்டு போன பின்னர் இவர்கள் கொடுத்த ஆதரவும் தற்போது மண்கவ்வியுள்ளது.

expences-tnrf.jpg

தற்போது TNRF எனப்படும் நினைவேந்தல் அகவம்(அதாவது தலைமைச் செயலகக் குழுவின்) இணையம் வரவு செலவுக் கணக்கை வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் வரவு 86,225 பவுண்டுகள் என்றும் செலவு: 1,08574.63 என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது 22,349 பவுண்டுகள் நஷ்ட்டம் என்கிறது தலைமைச் செயலகம். அது சரி இவ்வளவு காலமாக மாவீரர் தினத்தை நடத்திய குழுவினர் பெரும் லாபத்தை சம்பாதித்ததாகவும் அதனை அவர்கள் சுருட்டிவிட்டதாகவும் GTVல் தோன்றி பலர் கூறியிருந்தனர். அதன் காரணமாகவே தாம் இம்முறை மாவீரர் தினத்தை நடத்துவதாக தலைமைச் செயலகம் என்னும் கோஷ்டி அறிவித்தது. அவர்கள் நடத்திய மாவீரர் தினம் நஷ்டத்தில் முடிவடைந்துள்ளதாக அவர்கள் கணக்கை முடித்துள்ளனர். அப்படி என்றால் இவ்வளவு காலமாக (தமிழர் ஒருங்கிணைப்புக் குழு) நடத்திவரும் மாவீரர் தினத்தில் மட்டும் இவர்கள் சொல்வதைப் போல பெரும் லாபம் எப்படி வந்திருக்கும் ? யோசிக்கவேண்டிய விடையம் அல்லவா ?

ibc-tamil-logo.jpg

மாவீரர் தின நிகழ்வுகள் அதற்கான மண்டபச் செலவுகள் கதிரைகள் இதரச் செலவுகள் எனப் பல செலவுகள் இருக்கும்போது லாபத்தில் தான் எல்லாம் நடக்கிறது அதனால் தான் கணக்கை காட்ட மாட்டேன் என்கிறது தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என அவர்கள் மேல் தலைமைச் செய்லகம் வீண் பழியைப் போட்டது. இம் முறை மாவீரர் தினம் 2டாகப் பிரிந்து நடக்க தலைமைச் செயலகமே முழுக் காரணமாகும். ஆனால் இவர்கள் தற்போது வந்து வரவு இவ்வளவு செலவு இவ்வளவு என மொட்டையாக தமது கணக்கை முடித்துள்ளனர். அதிலும் காசு கொடுத்து ரிக்கெட்டை வாங்கிவர்களுக்கு மட்டும் முழுக் கணக்கையும் காட்டுவோம் என்கிறார்கள். இது எந்த வகையில் நியாயமாகும் ? பொதுமக்கள் அனைவருக்கும் கணக்கை காட்டவேண்டியது தானே முறையாகும் ! தமது வரவு 86,225 என்று தலைமைச் செயலகம் குறிப்பிடுகிறதே அது எவ்வாறு வந்தது என்று சற்றுச் சொல்லமுடியுமா ?

ரிக்கெட் விற்று வந்ததா ? இல்லை நன்கொடையா இல்லை மாவீரர் தின நிகழ்வுகளில் சேர்க்கப்பட்டதா என்பது போன்ற விபரங்களை இவர்கள் வெளியிட ஏன் தயங்குகிறார்கள் ? அதுவும் படிப்பறிவு இல்லாத நபர்களால் நடத்தப்படும் ஐ.பி.சி வானொலி முருகதாஸ் திடலில் நடந்த மாவீரர் தினத்துக்கு 40,000 பொதுமக்கள் வந்ததாகச் சொல்லித் திரிகிறது. அறிக்கை என்ற பெயரில் பொயான செய்திகளை வாசிக்கிறது. முருகதாஸ் தீவுத் திடலில் 40,000 பேர் கூட வாய்ப்பே இல்லை என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில் ஐ.பி.சி யின் பித்தலாட்டமும் சத்தியர் என்னும் தனி மனுதரின் கேவலமான போக்கையும் பிரதிபலிக்கும் ஒரு கேடு கெட்ட வானொலியாக ஐ.பி.சி மாறியுள்ளது என்பதனை மக்கள் நன்கு அறிவார்கள். ஞானசூனியங்கள் நடத்திவரும் இந்த வானொலி கூறுவதுபோல அப்படியே 40,000 ஆயிரம் பேர் வந்ததாக எடுத்துக் கொண்டால் கூடா ஒருவர் தலா 5 பவுன்களைச் செலவு செய்தால் கூட 200,000 பவுண்கள் வந்திருக்குமே. இந்த ஞானசூனியங்கள் சொல்வதைக் கேட்டால் ஐ.பி.சி சேம் சைட் கோல் போடும் போல இருக்கே ஐயா!

சரி அது எல்லாம் போகட்டும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடத்தப்பட்ட மாவீரர் தினக் கணக்குகள் இன்னும் வரவில்லை என்பது மக்கள் மத்தில் நிலவும் ஒரு குறையாக இருக்கிறது. இதனை அவர்கள் விரைவில் நிவர்த்திசெய்வார்கள் என நான் நம்புகிறேன்.

வல்லிபுரத்தான்

சரி அது எல்லாம் போகட்டும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடத்தப்பட்ட மாவீரர் தினக் கணக்குகள் இன்னும் வரவில்லை என்பது மக்கள் மத்தில் நிலவும் ஒரு குறையாக இருக்கிறது. இதனை அவர்கள் விரைவில் நிவர்த்திசெய்வார்கள் என நான் நம்புகிறேன்.

... புலத்து காஸ்ரோக்கள் ... கடந்த காலங்களில் விட்ட தவறை நிவர்த்தி செய்யப் போகிறார்களா??? இல்லை மீண்டும் விக்கிரமாதித்தன் கதை போல் வேதாளம் முருக்கை மரம் ஏறப்போகிறதா????

மழைவிட்டும் தூவானம் போகவில்லை என்ற மாதிரி இருக்கு...

அதுசரி! ஏதோ கணக்குக் காட்டியிருக்கினம் ... வக்கலாத்து வேண்டும் நீங்கள் மற்றவர்களின் கணக்கைக் காட்டிப்போட்டு, இதைக் கேட்டால் நல்லாயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி அது எல்லாம் போகட்டும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடத்தப்பட்ட மாவீரர் தினக் கணக்குகள் இன்னும் வரவில்லை என்பது மக்கள் மத்தில் நிலவும் ஒரு குறையாக இருக்கிறது. இதனை அவர்கள் விரைவில் நிவர்த்திசெய்வார்கள் என நான் நம்புகிறேன்.

ஏன் கணக்கு காட்ட வேண்டும்?? ஒரு பத்திரிக்கை விற்க போனால் ஆயிரம் புலனாய்வு கேள்வி. பிறகு பத்திரிகையும் வாங்க மாட்டார்கள்.ஏதோ ஒரு நொண்டி சாட்டு சொல்லி தப்பி விடுவார்கள்.மாவீரர் நாளுக்கு போனீர்களா என்றால் உவங்கள் கள்ளர் அல்லது எனக்கு வேலை அல்லது உவங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்ற நொண்டி சாட்டுகள் தான் சொல்லுவார்கள்.முன்பு இயக்கம் காசுக்கு போனால் பலர் வீட்டையே திறக்க மாட்டார்கள். இப்படியானவர்களுக்கு கணக்கு காட்ட வேண்டும் என்று என்ன அவசரம்???

சில தினங்களுக்கு முன்னர் பார்க்கும் போது நஷ்டம் 4,000 பவுண்களுக்கு சற்று குறைவாக இருந்தது.

இன்று 24/12/11 இரவு வரவு 86,375 ஆகவும் செலவு 111,432.01 நஷ்டம் 25,057.01 இருக்கிறது.

http://www.tnrf.co.uk/finance/

  • தொடங்கியவர்

மேலே எழுதப்பட்டவைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியவைகள் அல்ல, ... ஐபிசி உரிமையாளரை பற்றிய எழுத்துக்கள் குறிப்பாக, படிக்காதவன்/கொள்ளாதவன் என்பதஎல்லாம் உண்மைக்கு அப்பாற்பட்டவை! இதை எழுதியவருக்கு சத்தியின் பின்னணி தெரியவில்லை போல??? அதற்கு மேல் இந்த சத்திக்கு ஐபிசியை விற்றவர்கள்/கையளித்தவர்கள் இந்த காஸ்ரோக்கள் தான்!! ... ஆனால் இதே ஐபிசி, இந்த புதிய மாவீரர்நாள் கும்பலை சில வாரங்களாக பலமாக விமர்சித்தது, திடீரென குத்திக்கரணம் அடித்ததுதான் ஆச்சரியப்பட வைத்தது!!!!

அதற்கு மேல் நுணா கேட்டதற்கு ... புதிய கும்பல் ... தலைமைச்செயலகம் என்று ... இதே கணக்கு/வழக்கு என்று தான் இங்கு புலமெங்கும் நுளைந்தார்கள் ... அதில் தான் இந்த நா.க.த.அ, ஐபிசி, GTV, BTF என்று பலர் சுருண்டு விழுந்தார்கள்!!! என்ன ... கணக்கு/வழக்குகள் காட்டாவிடின் இந்த மாவீரர்நாள் விளையாட்டு அடுத்த வருடமும் தொடரத்தான் செய்யும்???

  • தொடங்கியவர்

... இன்னும் காஸ்ரோக்களின் வரவு செலவுகள் ... இலாபமோ/நஸ்டமோ வெளியிடப்படவில்லை??????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.