Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்துலக பொறிமுறையை ஏற்படுத்துவதற்கான நேரம் பான் கீ மூனுக்கு வந்துவிட்டது!

Featured Replies

'அனைத்துலக பொறிமுறையை ஏற்படுத்துவதற்கான நேரம் பான் கீ மூனுக்கு வந்துவிட்டது! - இந்திய ஊடகம் கட்டுரை!!'

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறை மூலம் நீதி கிடைக்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளதாக The Weekend Leader.com எனும் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந் நிலையில், இப்போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான அனைத்துலக பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான நேரம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வந்துவிட்டதாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'சிறிலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கத் தவறியுள்ளது என்ற அமெரிக்க வௌpவகார அமைச்சின் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் அவர்களது குற்றச்சாட்டானது, மகிந்த ராஜபக்சவின் தலையில் 'அனைத்துலக அழுத்தக் கத்தி' தொடர்ந்தும் தொங்கிக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

ராஜபக்ச சார்ந்து ஒரு மென்போக்கு அமெரிக்காவிடம் இருந்திருப்பின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அடிப்படையில் அவருக்கு ஒரு நற்சான்று அமெரிக்காவினால் வழங்கப்பட்டிருக்கக்கூடும்.

மாறாக இவ் விவகாரத்தில் கடுமையான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இறுதிக் கட்டப் போரின் போதான மோசமான மீறல்கள் தொடர்பான இக்கேள்விகளே சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான புலம்பெயர் தமிழர்களின் பரப்புரையின் மையமாகவும் உள்ளது.

விடுதலைப் புலிகளை அழித்தொழித்த போர் ஒரு மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரது கருத்தினை கடந்த வெள்ளிக்கிழமை அன்று (16.12.11) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை முழுவதுமாக ஒப்புக்கொண்டுள்ளது.

அனைத்துலக போர் மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையின் அனுபவங்களை ஆராயுமிடத்து, இறுதிக் கட்டப் போரின் போது, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முதன்மை இடமளிக்கப்பட்டு மிகக் கவனத்துடன் பேணப்பட்ட இராணுவ மூலோபாயம் திருப்தியளிப்பதாக அறிக்கை கூறுகின்றது.

பொதுமக்களை இலக்கு வைத்து கனரக ஆட்லறித் தாக்குதல்கள் நடாத்தப்பட்டதை ஆராய்வதற்கு நல்லிணக்க ஆணைக்குழு தவறியுள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களில் ஒருவர்கூடக் கொல்லப்படவில்லை என்று கூறிவந்த சிறிலங்கா அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் மாதமளவில் முதன்முறையாக பொதுமக்கள் சிறிய எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்கலாம் எத் தெரிவித்தது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது, 'தாக்குதல் தவிர்ப்பு வலையத்தில்' திட்டமிட்ட முறையில் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமை அமைப்புகள் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்துள்ளன. ஆனால் சிறிலங்கா படைத்தரப்பினரின் நடவடிக்கைகளை நல்லிணக்க ஆணைக்குழு நியாயப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தொடர்பாக எந்தவொரு கரிசனையுமற்ற போர்முறைகளைப் பின்பற்றிய எதிரிக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதைக் கருத்தில் எடுப்பது அவசியமென்று இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைக் கொடியுடன் சரணடைவதற்கு வந்த போது விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதான குற்றச்சாட்டுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் ஆராயப்படவில்லை.

கைகளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் கைதிகள் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களாக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட ஒளிப்படங்களை இவ்வறிக்கை நிராகரித்துள்ளது.

பாலியல் வல்லுறவுகள் தொடர்பாக இவ்வறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருதரப்பு மீறல்கள் மீதும் விசாரணைகள் நடாத்துவதற்குரிய அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்துமாறு பரிந்துரைத்த ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு அறிக்கைக்கு முற்றிலும் எதிர்மாறான விடயங்கள் சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் முன்நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஐக்கிய நாடுகள் சபையும், அனைத்துலக சமூகமும் கடந்த 18 மாதங்களாக எதிர்பார்த்திருந்தன.

போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்காது விடின், விசாரணைகளுக்குரிய அனைத்துலக பொறிமுறையொன்றிற்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட்ட பல அரசாங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போரை நடத்திய முறையினை நியாயப்படுத்துவது தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கமெனில், அதனை கனகச்சிதமாக இந்த ஆணைக்குழு செய்துள்ளது.

போர் மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் இலங்கையின் தேசிய பொறிமுறைகளுக்கு ஊடாக நடைமுறைப்படுத்தப்பட முடியாது என்பது தெளிவாகியுள்ள புறநிலையில், சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறையினை ஏற்படுத்துவதற்குரிய நேரம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துக்கு வந்துவிட்டது என்பது இன்று தெட்டத் தெளிவாகியுள்ளது' என இக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=99a5f47f-2c0d-4223-82bc-3b0dadd8460f

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.