Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்துக்குப் போடப்படும் முட்டுக்கட்டைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tcwanewlogo_150.jpg

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படுவதில் எதிர்பாராத பல சிக்கல்களை எதிர் கொள்வதாக தமிழகத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தமிழீழ விடுதலையின் தேவையினையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றதற்கான காரணிகளையும் அழுத்தம் திருத்தமாக வெள்ளித் திரையில் பதிவு செய்துள்ளது.

இந்தப் படத்தின் முக்கிய பாத்திரமான சிறுமி புனிதவதியின் துன்பம் நிறைந்த வாழ்வு நமது சொந்தங்கள் தமிழீழத்தில் இந்த வினாடிவரை அனுபவித்து வரும் அல்லல்களைப் பிரதிபலிக்கிறது. தமிழீழத்தில் சிங்கள வெறியர்கள் நடத்திய படுகொலைகள், பாலியல் வன்முறைகள், பாடசாலைகள் மீதான விமானத் bதாக்குதல்கள், தமிழ் இளைஞாகளின் கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி, நிருவாணமாக்கிப் பின்புறமாகச் சுடும் காட்சிகள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையில் 1,152 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் தமிழீழப் பெண்கள் ஆவர். இந்தத் தகவலை காவல்துறை அதிகாரியே தெரிவித்திருக்கிறார். கடந்த மூன்று மாதங்களில் 342 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரங்கே பண்டார சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாடடினார்.

தமிழின உணர்வாளர் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய 'இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ, இழிவாய்க் கிடக்க செருப்பா நீ' என்ற உணர்ச்சி கொப்பளிக்கும் பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. உரையாடலை தமிழருவி மணியன் ஊதியம் எதுவுமின்றி எழுதியுள்ளார்.

தேசியத் தலைவரின் அன்புத் தம்பி செந்தமிழன் சீமான் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். தமிழீழப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த இந்திய காங்கிரசுக்கு எதிராக புயல்வேகப் பரப்புரை செய்து அந்தக் கட்சியைத் தோற்கடித்ததில் பெரும்பங்கு சீமானைச் சேரும். சீமானோடு நடிகர் சத்யராஜ், நடிகர் நாசர் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.

இருந்தும் தமிழகத்தில் உள்ள பல தொலைக்காட்சி நிறுவனங்களும் அச்சு ஊடகங்களும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படச் செய்திகள் எதனையும் வெளியிடாது இருட்டடிப்புச் செய்வதோடு தயாரிப்பாளர்களது கட்டணம் செலுத்திய விளம்பரங்களையும் வெளியிட மறுத்து வருகின்றன. சன் ரிவி, ஜெயா ரிவி, விஜயா ரிவி இதில் அடங்கும் என்பதை புலம்பெயர் தமிழர்கள் குறித்துக் கொள்ள வேண்டும்.

சென்னை தவிர்ந்த பிற இடங்களில் திரையரங்குகளை எடுப்பதற்குக் கூட பல முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக அறிகிறோம். உணர்ச்சியுள்ள கிராமப்புற மக்களிடம் இந்தப் படம் சொல்லும் செய்தி சென்றடைவதைத் தடுக்கும் முயற்சியில் தமிழக அரசுக்கும் பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை புலம்பெயர் தமிழர்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று வெள்ளித்திரையில் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது தமிழ்த் தேசியத்துக்கு நாம் செய்யும் சிறிய தொண்டாக இருக்கும்.

http://www.seithy.co...&language=tamil

இப் படத்தில் சத்தியராஜ் சீமானிடம் கேட்பார்.இயல் இசை எல்லாம் நடந்துவிட்டது. நாடகம் எப்போது? அதற்கு சீமான் சொல்லும் பதில் வெளியே உள்ள அரசியல் வாதிகள் நடித்துகொண்டிருக்கிறார்கள்.அது தான் நான் ஒதுங்கிவிட்டேன் என்பார்.அதைத்தான் இவர்களும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.