Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆபத்துடன் கூடிய நிதிக் கட்டமைப்பை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Army.jpg

ஆசியாவில் உயர் ஆபத்தை கூடிய நிதிக் கட்டமைப்பை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. நிதி நிலைமைகளை கணிப்பிடும் Fitch Ratings பிட்ச் தரப்படுத்தல் இதனைத் தெரிவித்துள்ளது.

பிட்ச் தரப்படுத்தலின் இந்த கருத்தை இலங்கையின் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். ஆனால் பொருளியலாளர்கள் மற்றும் பங்கு சந்தை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இந்த கருத்தை நிராகரித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் உயர் ஆபத்தை கொண்ட ஆசிய நாடுகளாக Fitch Ratings குறிப்பிட்டுள்ள இந்திய இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகள் உயர் உற்பத்திகளை வெளிப்படுத்தி வருவதாக கப்ரால் தமது வாதத்துக்கு ஆதரவாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவில் தொழில் வாய்ப்பின்மை பிரச்சினை உச்சக்கட்டத்துக்கு சென்றுள்ளது. இந்தநிலையில் அந்த நாடுகளைப்பற்றி பேசாது, Fitch Ratings ஏன் இலங்கை போன்ற நாடுகள் பற்றி பேசுகிறது என்று கப்ரால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அடுத்த வருடத்தில் 8 வீத பொருளாதார அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் பொருளியல் நிபுணர்கள் இலங்கை மத்திய வங்கியின் செயற்கை செயற்பாடு காரணமாக இலங்கையின் ஆபத்தான நிதிக்கட்டமைப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி, ரூபாவின் பெறுமதியை உயர்நிலையில் வைத்திருக்க முயற்சித்தது. பின்னர் ரூபாவின் பெறுமதியை குறைத்தது. வட்டிவீதங்களை செயற்கையாகவே குறைத்தது. இந்த செயற்பாடுகள் காரணமாகவே இலங்கையின் நிதிக்கட்டமைப்பின் மீது அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாக பொருளியல் நிபுணர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பொருளியல் நிபுணர், பேராசிரியர் சிறிமல் அபேரத்னவின் கருத்துப்படி, இலங்கையின் நடைமுறைக்கணக்கு மற்றும் நிதிக்கணக்குகள் மேம்படவில்லை என்றுக்குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதி வியாபாரத்தின் போது நடைமுறைக்கணக்கு கொடுப்பனவுகளே பெரிய பங்காற்றவேண்டும். எனினும் தற்போதைய நிலை அதற்கு சாதகமாக அமையவில்லை.

நிதிக்கணக்குள் மற்றும் அரசாங்க பெறுகைகள் பாரிய நிதிக்கட்டமைப்புகள் என்றபோதிலும் அவை இலங்கைப்போன்ற சிறிய நாடுகளின் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு உதவமாட்டாது என்று அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படை பொருளாதார கொள்கைக்கு முரண்பாடான செயற்பாடுகளால் இலங்கையின் ஏற்றுமதி கடந்த 5 ஆண்டுகளில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

இந்தநிலையில் எவ்வாறு உற்பத்தி பெருக்கமுடியும் என்று பேராசிரியர் அபேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.tamilthai.com/newsite/?p=

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.