Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவும் இந்தியாவும் ஒன்றா? - புதுடெல்லி நீதிமன்றிடம் கூகுள் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

google-chrome-home-17-0112-150.jpg

ஆட்சேபகரமான தகவல்களை வலைத் தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என கூறுவது, இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு பொருந்தாது. இந்தியா என்பது சீனா போன்ற கட்டுப்பாடுகள் மிக்க ஜனநாயகமற்ற நாடு அல்ல என கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில சமூக வலைத் தளங்களில் ஆட்சேபகரமான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும், இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் புகார் எழுந்தது.

21 சமூக வலைத் தளங்கள் மீது இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. தடை விதிக்கப்படும்இந்த விவகாரம் டில்லி ஐகோர்ட்டுக்குச் சென்றது.

இந்த வழக்கு தொடர்பான கடந்த விசாரணையின்போது ஐகோர்ட் நீதிபதி சுரேஷ் கய்த் கூறுகையில், "ஆட்சேபகரமான தகவல்களை வெளியிடுவதை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை சமூக வலைத் தளங்கள் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், சீனாவைப் போல், இந்தியாவிலும் சமூக வலைத் தளங்களுக்கு தடை விதிக்கப்படும்' என்றார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூகுள் இந்தியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், என்.கே.கவுல் இந்த விவகாரம் பேச்சுரிமை மற்றும் கருத்துக்களை வெளியிடும் உரிமை குறித்த அரசியல் சட்ட விதிமுறைகள் தொடர்புடையது.இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு பேச்சுரிமை உள்ளது. சீனா போன்ற கட்டுப்பாடுமிக்க ஜனநாயகமற்ற நாடல்ல இந்தியா. எனவே, தகவல்களை வெளியிடுவதைத் தடை செய்ய முடியாது.

இணையம் என்பது சர்வதேச அளவிலான ஒரு தொழில்நுட்பம். உலகம் முழுவதும் உள்ள பல கோடி மக்கள் இவற்றை பயன்படுத்துகின்றனர். நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள், அரசுகள், அரசில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்துகின்றனர்.

சில நொடிகளிலேயே பல கோடி பேர் இணையதளங்களில் பல்வேறு தகவல்களை தேடுகின்றனர். இந்நிலையில் இவற்றுக்கு தடை விதிப்பதால் இணையதளங்களை பயன்படுத்துவோருக்கு தேவையான தகவல்களை பெற முடியாத சூழல் ஏற்படும்.

கூகுள் இந்தியா என்பது ஒரு தேடு பொறியோ (சர்ச் இன்ஜின்) அல்லது இணையதளங்களை உருவாக்கும் தளமோ அல்ல. இது அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனத்தின் இந்திய பிரிவு. சட்டப்பூர்வமாக செயல்படக் கூடியது.

எனவே, கூகுள் இந்தியாவுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகள் எடுக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக கூகுள் இந்தியா நிர்வாகிக்கு கீழ் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும். என்று என்.கே. கவுல் தன் வாதத்தின்போது தெரிவித்தார்.

வலைத் தளங்களுக்கு எதிராக கோர்ட்டில் மனு தாக்கல் செய்த வினய் ராய் கூறுகையில், கூகுள் இந்தியா என்பது தேடு பொறி அல்ல என கூறியதை கடுமையாக ஆட்சேபித்தார்.

http://www.seithy.co...&language=tamil

சீனாவும் இந்தியாவும் ஒன்றா?

சீனா வல்லரசு

இந்தியா குள்ளரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனா வல்லரசு

இந்தியா குள்ளரசு

இரண்டு வல்லரசுகளும் சனத்தொகை பெருக்கத்தில் முதலாவதும் இரண்டாவதுமாகவுள்ளது :rolleyes: :icon_idea:

இந்தியர் காட்டுமிராண்டிகள் என்பதை கூகிள் சொல்லாமல் சொல்லியுள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.