Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறு வயதில் யாழ் ஆசிரியரிடம் இலவசமாக கணித பாடம் கற்றவன் நான் -யரிழில் அப்துல் கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

aptul%20kalam2%20copy_CI.jpg

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் இன்று யாழ் மண்ணில் தடம்பதித்துள்ளார். இதன்போது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் அத்துல் காலமிற்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது அப்துல்கலாம் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டதுடன் யாழ். பல்கலைக்கழகம் சார்பில் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம், இந்தியஉயர்ஸ்தானிகர் அசோக கே. காந்தா, யாழ். இந்தியத் தூதுவ அதிகாரிஎஸ்.மகாலிங்கம், அமைச்சர் திஸ்ஸ விதாரன மற்றும் உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அப்துல்கலாம் அவர்கள் யாழ் மாணவர்கள் மத்தியில் தமிழில் உரையாற்றினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது.

யாழ்ப்பாண மக்களின் பிரச்சனைகளை நான் நன்கு அறிவேன. உங்களது நாட்டை வளமானதொரு நாடாக மாற்றுவதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். மாணவர்களின் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக மனநிலையில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்.

எனது கணிதபாடத்திற்கான ஆசிரியர் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த ஒருவர். 1941ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் கல்வி கற்றபோது கனகசுந்தரநாத் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவ் ஆசிரியர் எனக்கு இலவசமாக கணித பாடத்தை கற்பித்தார். அவரிடமிருந்து நான் நல்ல பழக்கவழங்களைக் கற்றுக்கொண்டேன்.

இளைய சமூகத்தினர்தங்கள் எதிர்காலத்தில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் தங்கள்கல்வியைக் கற்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பானது.

உங்களிடம் இந்தநாட்டின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொண்டு செயற்படுங்கள் என்று கூறினார்.

வடக்கிற்கு சென்ற கலாம் மாணவர்கள் மத்தியில் உரை – குடாநாட்டிலோ மாணவர்களைஎச்சரிக்கும் சுவரொட்டிகள்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும் புகழ்பெற்ற அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாம் இன்று வடக்கிற்குவிஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் குடாநாட்டு மாணவர்களை எச்சரிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

யாழ்ப்பாண்திற்குவிஜயம் செய்த அப்துல் கலாம் அங்கு மாணவர் சமூகத்தினர் மத்தியில் விசேடசொற் பொழிவொன்றையும் ஆற்றினார்.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் இன்று மதியம் முதல் மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகளும் துண்டுபிரசுரங்களும் குடாநாடு எங்கும் பரவலாக காணப்பட்டதாகவும், குறிப்பாக கஸ்தூரியார்வீதி, திருநெல்வேலி, கோப்பாய், கொக்குவில், போன்ற பல இடங்களில் இவற்றைக்காணக்கூடியதாக இருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தவல்கள் மூலம் அறியகூடியதாகவுள்ளது.

இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை மாணவர்கள் துணிவுடன் அகற்றுவதாகவும், இந்து கல்லூரியில் காணப்பட்ட பிரசுரங்கள் மாணவர்களால் தீ இட்டு கொளுத்தப்பட் டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னரும் இவ்வாறான துண்டுபிரசுரங்கள், சுவரொட்டிகளினால் மாணவர்கள் அச்சுறுத்தப் பட்டதாகவும்,சில மாணவர்கள் எச்சரிக்கப்பட்டதுடன், கடத்தப்பட்டதாகவும் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறானதொருநிலையில் சுவரொட்டி எச்சரிக்கை மீண்டும் தலை தூக்கி இருப்பது பெற்றோர் மத்தியில்பீதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண ஆளுநரின் மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அப்துல்கலாம்

யாழ்ப்பாணத்திற்குவிஜயம் செய்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும் புகழ்பெற்ற அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாம் இன்று வடமாகாண ஆளுநரின் மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளார்.

இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்டச்செயலர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். மாநகரசபை முதல்வர் மற்றும் இந்தியத்துணைத்தூதரக அதிகாரி மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்பில் வட பகுதி கடற்றொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கங்களினால் மனுஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்திய மீன்பிடி றோளர்களை தடுத்து நிறுத்த உதவ வேண்டும் - அப்துல் கலாமிடம் வேண்டுகோள்:-

வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து வரும் இந்திய மீன்பிடி றோளர்களை தடுத்து நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து உதவ வேண்டுமென யாழ்மாவட்ட மீனவர்கள் அப்துல் கலாமிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று வருகை தந்திருந்த அவரை யாழ்.மாவட்ட மீனவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியின் வாசஸ்தலத்தினில் சந்தித்து உரையாடினர். கடந்த முப்பது வருட கால யுத்தங்காரணமாக எமது மீனவர்கள் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.. அவர்கள் இப்போது தான் மீண்டெழுந்து வருகின்றனர்.

ஆனால் வடக்கில் கடந்த முப்பது வருடங்களாக அதிகரித்து வரும் இந்திய மீன்பிடி றோளர்களாலது அத்துமீறல்களால்; நாம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுளN;ளாம். அத்துமீறிப் பிரவேசித்து வரும் இந்திய மீன்பிடி றோளர்களை தடுத்து நிறுத்துவது தொடர்பில் நாம் பல தடவைகள் இந்திய மீனவர்களை சந்தித்து உரையாடிவி;ட்டோம். பல சுற்று பேச்சுக்கள் நடந்துள்ளன.ஆனால் எந்த விதமான பலாபலனும் இல்லை. எனவே முன்னாள் ஜனாதிபதி என்ற வகையிலும் தமிழகத்தை சேர்ந்தவரென்ற வகையிலும் இந்தவிடயத்தில் தாங்கள் கூடிய அக்கறை செலுத்தி தீர்வொன்றை பெற்றுத்தர பாடுபட வேண்டுமென யாழ்.மாவட்ட மீனவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்திய மீனவர்களது அத்துமீறலால் வடக்கு மீனவர்கள் எவ்வாறான பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்களென அப்துல் கலாம் அவ்வேளையில் கேட்டறிந்து கொண்டார்.

இலங்கை அரசின் விருந்தினராக வருகை தந்துள்ள அப்துல் கலாம் இன்று மதியம் யாழ் பல்கலைக்கழகத்திற்கும் விஜயம் செய்து அங்கும் உரையாற்றினார். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நிகழ்வு இடம்பெற்றிருந்த போதும் ஆயிரக்கணக்கில் குவிந்த பலரும் ஏமாற்றத்துடன் திருப்பப்பட்டனர்.பேராசிரியர்கள் விரிவுரையாளாகள் மாணவர்கள் மூதவை உறுப்பினர்கள் கூட வாசலில் வைத்து கழுத்தில் கை வைத்து வெளியே தள்ளப்பட்டனர்.அரச ஊடக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கூட இவ்வாறு வெளியேற்றப்பட்டனர் .இன்று மாலை யாழ்ப்பாணம் இந்த கல்லாரியினில் மாணவர்களிடையே அப்துல் கலாம் உரையாற்றவுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

தமிழர்களுக்கு மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை, இன்றும் புரையோடிப்போயுள்ள தராதரப்படுத்தலை இவர் அறிந்தும் வாய் திறக்க மறுக்கிறார். இது தான் எமது நாடுகளின் சனநாயக சாபக்கேடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/5J1vxk1PMZQ

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, இவரது வளர்ச்சியில் யாழ்ப்பாணக் கணித ஆசிரியர் ஒரு படிக்கல்! அதுவும் இலவசமாகக் கிடைத்த ஒரு படிக்கல்!

அதன் மேலே ஏறி, மேலே போனவர் , அதே ஆசிரியர்களையும், மாணவர்களையும் நசுக்குவதற்குப் பயன்படுத்தப் படுவது தான் கொடுமை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.