Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எடுக்கவா?கோர்க்கவா? துரியோதனன் கேட்டது எதற்காக-சிறீ லங்காவின் இன்றைய நிலை

Featured Replies

எடுக்கவா?கோர்க்கவா? துரியோதனன் கேட்டது எதற்காக-சிறீ லங்காவின் இன்றைய நிலை

குந்திக்கும் சூரியனுக்கும் பிறந்தவன் கர்ணன். திருமணத்திற்கு முன் ஏற்பட்ட காதல் வயத்தால் நடந்த விபத்து அது.நடக்கக்கூடாதது நடந்துவிட்டது.இருந்தும் பெற்றதன் குழந் தையை வளர்ப்பேன் என்று குந்தி சபதம் செய்திருந்தால் அது ஒரு புதுமையாக இருந்திருக்கும்.

எனினும் பழிக்கு அஞ்சி தான்பெற்ற குழந்தையை பேழையில் வைத்து ஆற்றிலே விடுகிறாள் குந்தி என்று பாரத இதிகாசம் சொல்கிறது. கதையில் துயரம் இருந்தாலும் கர்ணன் துரியோதன னுடன் நட்புக் கொள்வதும் கர்ணனை அங்க தேசத்தின் அதிதியாக்கும் துரியோதனனின் செயலும் குந்தியுடன் ஒப்பிடும் இடத்து உயர்ந்து நிற்பதை உணரமுடியும்.அதிலும் இன்னுமோர் சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை கர்ணனும் துரியோதனனின் மனைவியும் சொக்கட்டான் (தாயம்) விளையாடிக் கொண்டு இருக்கின்றனர்.அந்த நேரத்தில் துரி யோதனன் வருகின்றான். அதனைக் கண்ட அவனின் மனைவி எழுந்து ஓட முற்பட, துரியோதனின் வரவை அறியாத கர்ணன் அவளைத் தடுத்து நிறுத்தும் வகையில் அவள் ஆடையைப் பற்றி இழுக்கின்றான். ஆடையை இழுக்க அதிலிருந்த முத்துமணிகள் சிதறுகின்றன. இதனைத் துரியோதனன் அவதானிக்கின்றான். அந்த அவதானிப்பை கர்ணனும் கண்ணுற்றான்.

நிலைமை இப்போது மோசமாகிறது. இந்த இடத்தில்தான், துரியோ தனன் நிலைமையை சுமுகப்படுத்துகின்றான்.கர்ணா! சிதறிய மணிகளை எடுக்கவா? கோர்க்கவா? என்று கேட்கின்றான். எடுத்தல் என்பதற்கும் கோர்த்தல் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஆடையில் இருந்து நிலத்தில் சிந்திய மணிகளை எடுக்கும்போது துரியோதனனின் மனதில் இருக்கக்கூடிய சலனத்தை அறிவது கடினம்.

ஆனால், எடுத்த மணிகளை ஊசியால் நூலில் கோர்ப்பதென்பது நிதானத்துடன் சம்பந்தப்பட்டது. தன் மனைவியின் ஆடையை கர்ணன் பற்றி இழுத்ததால் துரியோதனன் மனம் குழம்பி இருப்பானாயின், அவனால் மணிகளை நிதான மாகக் கோர்க்க முடியாது. ஆக, கர்ணா! நீ கலங்காதே! உன் செயலால் நான் இம்மியும் சலனப்படவில்லை என்பதை எடுத்தியம்பவே, எடுக்கவா? கோர்க்கவா? என்று கர்ணன் கேட்டான்.

அட! தன் மனைவியின் ஆடையை, கர்ணன் இழுத்தான் என்ற வடுவை நிவர்த்திப்பதை உள் நோக்கமாகக் கொண்டு பாஞ்சாலியின் துகிலை துரியோதனன் உரிதல் செய்தானோ! என்று நம் சிற்றறிவு சிந்தித்தாலும், துரியோதனனின் சலனமற்ற மனத்திடத்தையும், இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசு முன்வைக்கின்ற தீர்வுத் திட்டங்களுக்கான செயல் முறைகள் பற்றியும் நினைக்கும் போது, இலங்கை அரசின் சலனம் தாராளமாகத் தெரிகிறது. அதனால்தான் பேச்சுவார்த்தை, தெரிவுக்குழு, செனட்சபை என்ற பிதட்டல் தொடர்கிறது.

சலனத்துடன் இருக்கும் எவராலும் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பதும், அந்த மனநிலை பிரச்சினையை மேலும் மோசப்படுத்தும் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

http://www.valampuri...ws.php?ID=26884

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சாலியை பெண்பார்க்கும் இடத்தில் எலியாக வந்து கண்ணன்(கிந்தியா) வில்லின் வாரை அறுத்து போட்டார்.. சோ அந்த மையல் இன்னும் துரியோதனுக்கு விட்டு அகலவில்லை... ஆகவே துகிலுரிந்தான் ... இதே போல நண்பனின் மனைவியை கரெக்ட் செய்வதிலும் முன்பாக வண்டாக மாறி அதற்கு முன்பே கர்ணணுக்கு(கிந்தியா) உள்குத்து இறக்கினர் ... ஆக இவர்கள் அந்த பக்கமும் இல்லை இந்த பக்கமும் இல்லை ... கிருஸ்ணன் பூமிக்கு வந்த நோக்கம் மனிதர்களை கொன்று பூமி பாரத்தினை குறைக்க வேண்டும் என்பதாகும்.. (அதாவது அங்கிட்டு சண்டை நடந்து கொண்டே இருக்க வேண்டும்) இப்போ அதானே நடத்தி காட்டி இருக்கான்..?

டிஸ்கி:

லாஜிக்கு ஈசி... முதலையும் மூர்க்கணும் கொண்டது விடா என்ற பழமொழிக்கேறப சில சித்து விளையாட்டுக்களை தங்கள் நலத்திற்காக மூர்க்கண்களை(சிங்களவன்) வைத்து ஆடுகின்றனர்.. அதற்கும் ஒரு படி மேலே இருந்து அருமையான சகுனி போல ஆடினால்தான் சரியாக வரும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=73541

மகாபாரதம் மற்றும் ராமாயணம் இன்னும் பல இதிசாகங்களில் ஜோதிட விளக்கங்களுக்கு அணுகவேண்டிய முகவரி..

புரட்சி...

சும்மா போங்கப்பா வலம்புரியார் எப்பவும் பகிடி விடுறவர்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.