Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவை சீற்றங்கொள்ள வைத்த Stephen Rapp- சம்பந்தன் சந்திப்பு

Featured Replies

சிறிலங்காவுக்கு சென்றுள்ள அமெரிக்க உயர்பிரதிநிதி Stephen Rapp, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பு, சிறிலங்கா அரசினை சீற்றம் கொள்ள வைத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்ற விவகாரங்களுக்கான, அமெரிக்கா அரசாங்கத்தின் சர்வதேச உயர்பிரதிநிதி Stephen Rapp அவர்கள் இருக்கின்றார்.

இந்தச் சந்திப்புக் குறித்து, Tamil News Circle செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ள இரா.சம்பந்தன் அவர்கள்….

90 நிமிடங்கள் வரை நீடித்த இந்தச் சந்திப்பில், பேசவேண்டிய விடயங்கள் சகலது பற்றியும் பேசினோம். இதுபற்றி மேலதிகமாக சொல்ல வேண்டியதில்லை. சுமூகமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது என தெரிவித்தார்.

இதேவேளை, ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பங்கெடுத்துக் கொள்வது தொடர்பில், இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்குற்றங்கள் குறித்தான அறிக்கையொன்றினை, அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு எதிர்வரும் மார்ச் 7ம் திகதிக்கு முன்னர், Stephen Rapp அவர்கள் சமர்பிக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், சிறிலங்கா மீதான போர்குற்றச்சாட்டுக்கள் குறித்து நேரடியாகவே, சிறிலங்கா அரசுடன் கலந்துரையாடி களஆய்வினை அறிக்கையாக சமர்பிக்கவுள்ளார்.

குறிப்பாக, ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி, சிறிலங்கா மீதான அமெரிக்காவின் அழுத்தங்களில் காத்திரமான பங்கினை , Stephen Rapp அறிக்கை வகிக்கும் என தமிழர் தரப்பு இராஜதந்திர செயற்பாட்டாளர்களால் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

http://naathamnews.com/2012/02/07/tna-3/

அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கைச்சாத்திடவில்லை. ஆனால், தன்னிடம் உள்ள பல ஆதாரங்களை, (சற்றலைட், வாக்கு மூலங்கள் ) பலவற்றை வேறு ஒரு நாட்டு ஊடாக ( உதாரணத்திற்கு கனடா) சமர்ப்பிக்கலாம்.

Stephen Rapp தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்தில்

[ உலகத் தமிழ் செய்திகள் ] - [ Feb 08, 2012 13:49:55 GMT ]

இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த குழுவினர் அரச அதிபர் இமெல்டா சுகுமாரை சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டனர். குடாநாட்டில் காணாமல் போயுள்ளவர்களது நிலைமை மற்றும் அவர்களுள் எவராவது திரும்பி வந்துள்ளனரா? என்பது பற்றி கேள்வி எழுப்பபட்டிருந்தது. குறிப்பாக அரச ஆதரவுடன் செயற்பட்டு வரும் துணை ஆயுதக்குழுக்களது செயற்பாடுகள் மற்றும் மீள்குடியமர்வு என்பவை பற்றி குழுவினர் கூடிய ஆர்வம் காட்டினர்.

இதன்பின்னர் குழுவினர் யாழ்.ஆயர் அதிவணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தர நாயகம் ஆண்டகையை சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டனர். வன்னி மற்றும் யாழ் குடாநாட்டில் காணாமல் போயுள்ளவர்கள் பற்றியும் வழி;பாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் பற்றியும் குழுவினர் விபரங்களை கேட்டறிந்து கொண்டனர். குழுவினர் வன்னிக்கும் விஜயம் செய்யவுள்ளதாக கூறப்பட்டபோதும் இத்தகவல் உறுதிப்படுத்தப் பட்டிருக்கவில்லை. குழுவினர் ஏற்கனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையை சந்தித்து பேச்சுக்களினில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும். குழுவினரது விஜயம் அரச தரப்பினரிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும.

மூலம்: உலகத் தமிழ் செய்திகள்

பிரசுரித்த நாள்: Feb 08, 2012 13:49:55 GMT

சர்வதேச சுயாதீன விசாரணை இலங்கைக்கு எதிராக அவசியம்; அமெரிக்காவிடம் வலியுறுத்தினார் சம்பந்தன்

வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசினால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை அவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதி விசாரணைகளைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்ரீபன் ராப்பை நேற்றுக் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் என்று நம்பகரமாக அறிய வந்துள்ளது.

அமெரிக்க சிறப்புத் தூதுவருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையிலான இந்த விசேட சந்திப்பு கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்றுப் பிற்பகலில் சுமார் ஒன்றரை மணி நேரம் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நெருங்கும் வேளையில் இலங்கை வந்துள்ள சிறப்புத் தூதுவருடன் கூட்டமைப்பினர் இலங்கையின் போர்க் குற்ற விவகாரம், ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர், அதில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டுவரவுள்ள பிரேரணை ஆகியன குறித்தே அதிக நேரம் பேசியதாகத் தெரியவருகிறது. அத்துடன் இலங்கை அரசின் பொறுப்புக்கூறும் கடப்பாடு, மனித உரிமைகள் விவகாரம் உட்படச் சமகால விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இறுதியுத்தத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல் விவகாரம் தொடர்பில் அமெரிக்கா எவ்வாறானதொரு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது எனச் சிறப்புத் தூதுவர் ஸ்ரீபன் ராப் தலைமையிலான குழு, கூட்டமைப்புக்குத் தெளிவுபடுத்தியுள்ளது என அறியமுடிகின்றது.

அதேவேளை, இலங்கை அரசின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டு பொறிமுறை சிறந்ததொரு உபாயமாக அமையவில்லை என அமெரிக்க அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறை குறித்து தனது நிலைப்பாட்டை அமெரிக்க அதிகாரியிடம் தெளிவுபடுத்தியுள்ளது எனத் தெரியவருகிறது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பக்கச்சார்பற்ற சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று அவசியம் என அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜெனிவாத் தொடர் நெருங்கும் நிலையில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவரை அமெரிக்கா அவசரமாக இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=55503813008810380

'சர்வதேச தலையீட்டில் தப்பில்லை': சம்பந்தன்

இலங்கைக்கு நான்கு நாள் பயணமாக சென்றுள்ள, அமெரிக்க இராஜங்கத் துறையில் உலக குற்றவியல் நீதி விவகாரங்களுக்கான அலுவலகத்தைச் சேர்ந்த சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் ராப் செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

இதன்போது, இலங்கையில் தற்போது நிலவுகின்ற சகல அரசியல் நிலைமைகள் குறித்தும் பேச்சு நடத்தப்பட்டதாக சம்பந்தன் தமிழோசையிடம் கூறினார்.

இலங்கைப் போரின்போது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களும் மனித உரிமைச் சட்டங்களும் மீறப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றி சர்வதேசத்தின் கேள்விகள் சிலவற்றுக்கு தாம் இதன்போது ராப் அவர்களிடம் பதிலளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் கூறினார்.

ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம்

இம்மாத இறுதியில் நடைபெற இருக்கின்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை விவகாரம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டுக்குள்ளேயே இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஆட்சியாளர்கள் அக்கறை காட்டாத பட்சத்தில் சர்வதேச சமூகத்தின் அக்கறை தேவைப்படுவதாகவும் அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தாம் இந்த சந்திப்பில் கருத்துக்களை விளக்கியதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இனப்பிரச்சனைக்கான தீர்வு உள்நாட்டிலேயே எட்டப்பட வேண்டும், வெளிநாட்டு சக்திகள் தலையிடக்கூடாது என்று இலங்கை அரசு கூறவதை ஏற்கமுடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

பிரச்சனை உள்நாட்டில் தீர்க்கப்படவில்லை என்பதாலேயே இலங்கை அரசு சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகின்றது என்றும் சம்பந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதனாலேயே பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் சர்வதேச சமூகத்துடன் பேசி தமது பிரதிநிதிகள் பேசிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/02/120208_sambanthanrapp.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.