Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொன்சேகா

Featured Replies

பொன்சேகா உண்ணாவிரதம்?

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தனக்கு தெரியவந்துள்ளதாக ஐனநாயகத் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவர் பின்கதவு வழியாக நேரே வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இன்று அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நாளாகும். சிறை அதிகாரிகள் அவரை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுவிட்டனர். நான் அறிந்த வரையில் பொன்சேகா ஒரு உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். ஆனால் இதற்கு மேல் இப்போது நான் எதுவும் சொல்ல முடியாது எனவும் அவர் கூறினார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்தில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வெலிக்கடை சிறைச்சாலையை நோக்கி நகருகின்றனர். சிறைச்சாலை வளாகத்தை நோக்கி நகருவதாக ஐனநாயகத் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருபகுதியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/35640-2012-02-08-07-19-46.html

பொன்சேகா உண்ணாவிரதத்தை கைவிட்டார்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேற்கொண்டிருந்த உண்ணாவிரததத்தை கைவிட்டுள்ளதாக ஜ.தே.முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார். சரத் பொன்சேகா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தன்னை அதிகாரிகள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லத் தவறியதால் சரத் பொன்சேகா உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். பின்னர் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல தீர்மானித்ததையடுத்து அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

அனோமா பொன்சேகா தலைமையில் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் முன்னால் காலை 10.30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது. பல அரசியல் கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றின. ஐ.தே.க.வும் பின்னர்இதில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/35645-2012-02-08-07-58-56.html

  • தொடங்கியவர்

பொன்சேகாவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! நீதிமன்ற ஆணை கையளிப்பு!!

இன்று கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் சரத் பொன்சேகா விடுதலை தொடர்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்கும்படி பொலிசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மேல் மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றிற்கு சமர்பித்த அறிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும், நீதிமான்கள்-சட்டத்தரணிகள்-பொதுமக்கள் ஆகியோரது நடமாட்டங்களுக்கும் இடையூறு செய்யும் எந்த ஒரு பொதுக்கூட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் நடத்துவோருக்கு, இத்தகைய நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்பதை அறிவித்து மேல்நடவடிக்கை எடுக்கும்படி பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி இன்று, திஸ்ஸ அத்தநாயக, அனோமா பொன்சேகா, மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரத்ன, சிறிதுங்க ஜெயசூரிய, டிரான் அலஸ், அர்ஜுன ரணதுங்க ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்ற ஆணையை கொழும்பு வலய பிரதி போலிஸ் மாஅதிபர் அனுரா சேனநாயகவின் சார்பாக பொலிசார் நேரடியாக கையளித்தனர்.

இன்று கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் சரத் பொன்சேகா விடுதலை தொடர்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், பேரணியிலும் மேற்கண்ட அரசியல் தலைவர்கள் பங்குபற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.pongutham...1d-66a0fe87fb03

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நொந்து புண்சோகா ஆகிவிட்டது சிங்கம்! 

ஸ்ரீ லங்கா காரருக்கு கூஜா தூக்குவோருக்கு ஒரு உதாரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகா எவ்வளவு காலம் உள்ளே இருக்கின்றாரொ இருந்து அநுபவிக்கட்டும்

மகிந்தவின் வெறியாட்சி வெளியே வர இவரே காரணமாகட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.