Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜபக்சவை பணியவைக்க அமெரிக்கா. இந்தியா அழுத்தம்!

Featured Replies

போர்க்குற்றம் மற்றும் நல்லிணக்க விவகாரம்: மகிந்த ராஜபக்சவை பணியவைக்க அமெரிக்கா. இந்தியா அழுத்தம்!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள், அவர்கள் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தாலும், அனைவரையும் கொல்வது என்பது தொடர்பில் சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும், களமுனை படைத் தளபதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடலின் ஒலிப்பதிவு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான பிரிவுக்கு கிடைத்துள்ளதாக தெரிய வருகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சர்வதேச மனிதவுரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான வகையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரவுள்ள நிலையில், இத்தகவல் வெளிவந்துள்ளது.

இப்போரின் போது விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் வெள்ளைக் கொடியுடன் சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைவது தொடர்பில் பசில் ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதி பாலித்த ஹொகன்ன மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு இடையில் பரிமாறப்பட்ட கைத்தொலைபேசி குறுந்தகவல்கள் ஏற்கெனவே வெளிவந்திருந்தன.

அத்துடன், இவ்விகாரம் தொடர்பில் பசில் ராஜபக்ச முக்கிய பங்காற்றியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஹான் சந்திரநேரு ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவுக்கு வாக்குமூலம் அளித்திருந்தார்.

அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக சிறிலங்கா மீது அழுத்தங்களை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

ஆயினும், பொறுக்கூறுவது தொடர்பான சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல் விருப்புக் கொண்டுள்ளரா என்பதை அறிவதற்காக சிறிலங்கா அரசாங்கத்திற்கு இறுதியாக ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு இந்தியா அமெரிக்காவிடம் கோரியதாக தெரிய வருகின்றது.

இவ்விடயம் தொடர்பில் அமெரிக்கா கொண்டுள்ள கவலை குறித்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா தெளிவாக எடுத்துக் கூறியதாகவும் அறியக் கிடைக்கின்றது.

அத்துடன், இவ்விகாரம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா உறுதிபடக் கூறியுள்ளார்.

இத்தகையதொரு பின்னணியிலேயே அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் ஸ்டீபன் ரப் மற்றும் அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதவுரிமைகள் தொடர்பான இரண்டாம் நிலைச் செயலாளர் மரியா ஒட்டேரோ ஆகியோரின் இலங்கை விஜயங்கள் அமைந்துள்ளது.

இவர்கள் தமது பயண நிகழ்ச்சி நிரலில் மாற்றங்களை ஏற்படுத்தி இலங்கைக்கான விஜயத்தை அவசரமாக மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவர்களின் இவ்விஜயத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் தெளிவானதொரு செய்தி தெரியப்படுத்தப்படவுள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனிடையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான இரகசிய சந்திப்பு ஒன்று சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் அமைச்சர்களான ஜி.எல.பீரிஸ், நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் வீதி வரைபு ஒன்றை உருவாக்கி, அதன்படி விடயதானங்களை நடைமுறைப்படுத்தும் படி இந்தியா வலியுறுத்தியிருந்த போதிலும், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதனை நிராகரித்துள்ளார்.

அத்துடன் தனது சகோதரரும், படைத்துறைச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது காணப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் எந்தவொரு உடன்பாட்டிலும் தான் கையெழுத்திட மாட்டேன் எனவும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை வொஷிங்டனுக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டன் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என இக்கடிதத்தில் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேவேளை, அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது சிறிலங்காவின் முக்கிய அமைச்சர்கள் அவர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படியும் ஹில்லரி கிளின்டன் இக்கடிதத்தில் பீரிஸூக்கு அறிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்துக்கு நிகரான எதிர்க்கட்சி ஒன்று இல்லாத நிலையில், சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அத்துடன், சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டாம் எனவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அவரை விடுதலை செய்வது தொடர்பில் அழுத்தங்களைஏற்படுத்துவதாக அமெரிக்கத் தரப்பால் அனோமா பொன்சேகாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனாலேயே சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்திடம் மன்னிப்புக் கோரப்பட மாட்டாது என அனோமா பொன்சேகாவும் அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது சகோதரர்களுடன் பல இரவுகள் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஒரு கால அட்டவணையின் படி நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.

இந்நிலையில், ஜெனிவாவில் எதிர்வரும் 27ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வுரையில், முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பிலும் அவர் குறிப்பிடலாம் எனவும் தெரிய வருகின்றது.

சிறிலங்காவின் மீது அழுத்தங்களை ஏற்படுத்தும் சர்வதேச நாடுகளுக்கு பதில் கூறும் வகையிலும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளை திருப்திப்படுத்தும் வகையிலும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இவ்வுரை அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=1586679a-308d-480b-9264-4bf968eb8c82

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டூ லேட்.  கரு நாகம் கை மீறி சீனா பத்தைக்க புகுந்துவிட்டது. 

இந்த செய்தி தமிழ்மக்களைத்திருப்தி படுத்தி ஆறுதலடைய வைத்து ராசபக்சாவுக்கு நேரம் பெற்றுக்கொள்ள வைக்கும் முயற்சி.

கிருஸ்ணா இலங்கை வந்தது இலங்கை மீது இருக்கும் மேலைநாட்டு அழுத்தங்களை இலகுவாக்க என்றுதான் தமிழ் மக்கள் கூறினார்கள். ஆனால் ஊடகங்கள் தமிழருக்கான தீர்வுக்கென்று மாரடித்தன. வெக்கம் கெட்ட மந்திரி கிருஸ்ணா போயும் போயும் போதை வெறியன், பெண்பித்துக்காரன், போர்குற்றவாளி மகிந்தாவை கூச்ச நாச்சமின்றி பண்பின் சிகரமாகத்தான் வானளாவப் புகழ்ந்தார். தமிழர் எதை செய்தாலும் குற்றம் கண்டு பிடிக்கும் காஞ்சன, காம, கேளிக்கைகளின் அடிமைகளில் ஒருவரான இந்த கன்னட மந்திரி (நாடாளு மன்றங்களில் இருந்து ஆபசப்டங்கள் பார்க்கும் கூட்டம்) தான் வந்திருப்பது ராஜதந்திர முயற்சிகளின் ஒருபாகம் என்பதை மறந்து கிட்டியில் போட்டு ஆட்டி எடுத்த இரத்தப் பணத்தில் வைத்த கேளிக்கையைப் பாராடி விட்டுப்போயிருக்கிறார். தைரியமடைந்த மகிந்த அதுவரையில் நடந்த போலிப்பேச்சு வார்த்தைகளையே ரத்து செய்தார். இப்போது எதையோ அளவாக வெளிவிட்டு மிகுதியை சாதிக்க பார்க்கிறார்கள்.

உண்மையில் அப்துல் கலாம், கிருஸ்ணாவின் விஜய நாடகங்கள் ஏன் நடத்த பட்டது என்று அவர்களே கூறி முடிக்கிறார்கள்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக சிறிலங்கா மீது அழுத்தங்களை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

........ சிறிலங்கா அரசாங்கத்திற்கு இறுதியாக ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு இந்தியா அமெரிக்காவிடம் கோரியதாக தெரிய வருகின்றது

Edited by மல்லையூரான்

இரண்டு மகா நடிகர்களையும் மிஞ்சும் ராஜபக்ஷ என்ற மகா நடிகன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.