Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாரு நிவேதிதா என அறியப்பட்ட எழுத்தாளர் அண்மையில் இனிய உதயம் என்னும் சஞ்சிகைக்கு செவ்வியொன்றினை அளித்திருந்தார். அதிலிருந்து ஒரு கேள்வியும் சாருவின் பதிலும்

நீங்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அழைப்பை ஏற்று வெளிநாடு சென்று வந்தீர்கள். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஈழப்பிரச்சனை தீர்ந்த பிறகு மீண்டும் அவர்கள் தாயகம் திரும்பும் மனநிலையில் இருக்கிறார்களா?

திரும்பும் மனநிலையில் அவர்கள் இல்லை.ஐரோப்பிய கனேடிய வாழ்க்கை தரும் செளகரியங்கள் ஈழத்தில் கிடைக்காது. வாழ்க்கை செளகரியம் மட்டுமல்ல! அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பா மற்றும் கனடாவில் அரசியல் ஜனநாயகம் பெண்ணுரிமை போன்ற அருமையான சூழல் நிலவுகிறது. ஈழத்திலோ தமிழகத்திலோ அவையெல்லாம் இன்னும் ஏட்டளவில் கூட வரவில்லை. மட்டுமல்லாமல் Diaspora என்று கூறப்படும் புலம் பெயர்தல் நடந்த பல சமூகங்களிலும் தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்லுதல் என்ற நிகழ்வே நடைபெறவில்லை. பல நூற்றாண்டுகளாக துருக்கியில் வாழ்ந்து வந்த இரண்டு லட்சம் கிரேக்கர்கள் 1921ம் ஆண்டில் தாங்கள் பார்த்தேயிராத தாய் நாடான கிரேக்கத்திற்கு திரும்பிய போது அவர்களை கிரேக்க சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னமும் அவர்கள் தங்கள் தாயகத்தில் அகதிகளாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் பிள்ளைகள் தற்போது வேறு நாட்டில் பிறந்து வளர்கின்றார்கள். அவர்களால் தங்கள் நாட்டிற்கு சுற்றுலா சென்று வர முடியுமே தவிர நிரந்தரமாக அங்கே வாழ முடியாது. இது ஒரு மிகப்பெரிய வரலாற்றுச்சோகம். ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து உருக வேண்டிய வரலாற்றுச்சுமை

  • Replies 165
  • Views 14.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை.....ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும்.[/quote

நான் முதலிலேயே கூறியது மாதிரி நம்மால் இதுபோன்ற விசயங்க்ளை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அது உண்மை என்றே தோன்றுகிறது....

அதற்காக தாய்நாட்டுப்பற்று இல்லை என்று சொல்ல வரவில்லை.

ஆனால் யதார்த்தம் எப்போதும் கசப்பானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை.....ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும்.

:lol: அதென்னங்க? உண்மையென்கிறீங்க.. அப்புறம் ஏற்றுக்கொள்ள முடியலைங்கிறீங்க.. ஓ.. சில நேரங்களில உண்மைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாதாக்கும்..!

டார்வினின் இசைவாக்கம் படித்து விட்டு பார்க்கும் போது இதை முற்று முழுதாய் ஏற்றுக் கொள்ளலாம்...! அதோடு இப்போ இருக்கும் ஈழத்துக்கும் நிலைமைக்கும், சொகுசுவாழ்க்கை வாழ்பவர்கள் போக விரும்பவில்லை என்பது உண்மையும் கூட.

ஆனால் இந்தியா ஈழம் எண்று ஒப்பிடும் போது வெளிவராத உண்மை. சிங்கப்பூருடன் ஒப்பிட்டுப்பாருங்கள். திரும்பிப்போக மட்டும் அல்ல நாளுக்கு 8 மணிநேர வருமானத்தோடு சுகமாய் வாழும் இன்பம் கிடைக்கும் இடமாக ஒரு நாடு அமைந்தால் திரும்பிப்போக மட்டும் அல்ல அங்கு வாழவும் ஆசைப்படுவர்.

சிங்கப்பூருக்கு உள்ள எல்லா வசதியும் ஈழத்துக்கு இருக்கிறது.! அரசியல் சட்ட நிலைப்பாடுகள் கூட வளர்ச்சிய காட்டி நிற்பதை ஏற்க்க முடியாததா...???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் தலை! சாருவின் சொகுசு வாழ்க்கை தொடர்பான கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதெல்லாவற்றையும் விட முக்கியமானது புலத்தில் பிறந்து வளர்கின்ற தலைமுறைதான். அவர்கள் எந்த அளவிற்கு அங்கு சென்று வாழ முற்படுவார்கள்..? (இங்கே அவர்களினதோ பெற்றோர்களினதோ தவறு எதுவும் இல்லை. அதுதான் இயல்பு)

ஆனாலும் தலை! ஈழத்தில் பிரச்சனை ஒன்று இருக்கிறது. அதனாலே தொழ்ல் வாய்ப்புக்கள் இல்லை, பாதுகாப்புக்கள் இல்லை என்ற காரணங்களினால் புலத்தில் வாழ்கின்றவர்கள் உடனடித் தீர்வு ஒன்று கடைக்கும் பட்சத்தில் நாடு திரும்புவார்களா? அல்லது சிங்கப் பூர் மாதிரி வரும் வரைக்கும் பார்த்துக்கொண்டிருப்பார்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாருவிதா...உயர்தர குடிவைகைகும்...50 தாண்டிய வயதிலும் வெளிநாட்டு தமிழ் பெண்கள் தன்னுடன் டாவடிக்க காத்திருக்கிறார்களென்று கறபனை பண்ணும் இலக்கிய எழுத்தாள சாக்கடையின் பிதற்றல் இப்படித்தான் இருக்கும்..புலம் பெயர்ந்த நடுத்தர வயதினர் முதியவர் சொகுசுவாழ்க்கைக்காக மட்டும் ஒட்டிபிடிக்கவில்லை. புலத்திலுள்ளவர் தாயகம் சென்றால் ஒட்டமுடியாமால் விளங்கமுடியாத ஒன்று தடுக்க்கிறது..அத்துடன் அவர்கள் புலரும் பொழுது இருந்தமாதிரி தாயகத்தை தேடி தாயகம் சென்றபோது தாயகமும் வெகுவாக மாறிவிட்டது அதனால் அது கூட புதிய புலம் போல தோற்றப்பாடை அவர்களுக்கு உருவாக்கிவிட்டது...சாருநிவித

ஓம் தலை! சாருவின் சொகுசு வாழ்க்கை தொடர்பான கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதெல்லாவற்றையும் விட முக்கியமானது புலத்தில் பிறந்து வளர்கின்ற தலைமுறைதான். அவர்கள் எந்த அளவிற்கு அங்கு சென்று வாழ முற்படுவார்கள்..? (இங்கே அவர்களினதோ பெற்றோர்களினதோ தவறு எதுவும் இல்லை. அதுதான் இயல்பு)

ஆனாலும் தலை! ஈழத்தில் பிரச்சனை ஒன்று இருக்கிறது. அதனாலே தொழ்ல் வாய்ப்புக்கள் இல்லை, பாதுகாப்புக்கள் இல்லை என்ற காரணங்களினால் புலத்தில் வாழ்கின்றவர்கள் உடனடித் தீர்வு ஒன்று கடைக்கும் பட்சத்தில் நாடு திரும்புவார்களா? அல்லது சிங்கப் பூர் மாதிரி வரும் வரைக்கும் பார்த்துக்கொண்டிருப்பார்க

அடே தம்பிமார்களே அண்ணான் ஒன்று சொன்னா கேட்பிர்களா?

மதுரையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த நான் திரும்ப மதுரைக்கு இருப்பன ? உண்மையை சொன்னா இல்லை போக மாட்டன். எனேக்கே இப்படி இருக்கும் போது நீண்ட காலமாய் குடிபெயர்ந்து ஜரோப்பாவில் பிள்ளைகள் தொழில்கள் அப்படி நிலை எடுத்து விட்ட ஈழத்தமிழரை ஈழம் கிடைத்தால் திரும்பி போவிர்கள என்று கேட்டா? ஏன் ஈழத்துக்கு போய்தான் ஈழத்தை கட்டி எழுப்பனுமா? இப்ப செய்யுற மாதிரி தொடர்ந்து செய்யலாம் தானே?

நம்ம நாட்டுகாரன் என்ன செய்யகிறன் இங்கு கஷ்டப் பட்டு உழைத்த காசை வெளிநாட்டி கொண்டு போய் போடுகிறான்கள், ஆனால் ஈழத்தமிழன் ஜரோப்பாவில் கஷ்டப்பட்டு ஊழைத்த காசை ஈழத்தில் போடுகிறான் அப்படி பட்டவர்களை யாரோ ஒருத்தி இலவச காசில் ஜரோப்பாவை சுற்றி விட்டு ஈழத்தமிழரின் மனநிலை பற்றி சொல்லி இருக்கிறாள் என்றால் அவளை பேட்டி கண்ட செய்திட்தாள் பற்றி சொல்லதேவைஇல்லை............

எப்படி இஸ்ரேல் உருவாக உலகத்தில் உள்ள யூதர் பாடுபட்டார்களோ அப்படி தான் இந்த ஈழத்தமிழ் இனமும்

இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் ஜரோப்பிய நாடுகளில்

ஒரு நாட்டில் ஒரு தமிழ் எம்.பி.யாவது இல்லாட்டி பாரும்

அண்ணான் சும்மா சொல்லவில்லை நடக்கபோறதை தான் சொன்னேன்

சும்மா யாரோ ஒருத்தி சொன்னாளாம் அதுக்கு சிலர் வால்பிடி வேர சின்னபிள்ளையாட்டம்

சொந்த ஊரில் இருந்து சென்னைக்கே வந்துட்டு திரும்பா ஊருக்கு போற வழியைகானோம் இதுக்குள்ள ஜரோப்பாவில் பிறந்த பிள்ளை குட்டிகளை கொண்டு போ என்று அட்வயஸ் வேற...........

சாருவிதா இவா யார் என்னோடு எந்த படத்தில் நடித்தவா?

இல்லை அன்னைதெரசாவின் தூதுவரா?

எங்யோ 4 போரை சந்தோசபடுத்த கண்டைதயும் எழுதி வயத்து பிழைப்பு நடதும் ஒரு கோமாளி............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேலு.......சாருநிவிதா பெண்ணில்லை...ஆம்பிளைங்கிறான் :lol:

சாரு நிவேதிதா எனக்கு கொஞ்சமும் பிடிக்காத எழுத்தாளர்.... ஆனால் அவர் இந்த விஷயத்தில் சொன்ன கருத்து யதார்த்தத்தை உணர்ந்து சொல்லப்பட்ட கருத்தாகவே தெரிகிறது......

வடிவேலு.......சாருநிவிதா பெண்ணில்லை...ஆம்பிளைங்கிறான் :lol:

சுட்டி காட்டியதுக்கு நன்றி

நீங்கள் எந்து ரசிகர்ரா? :P :P

சாரு நிவேதிதா எனக்கு கொஞ்சமும் பிடிக்காத எழுத்தாளர்.... ஆனால் அவர் இந்த விஷயத்தில் சொன்ன கருத்து யதார்த்தத்தை உணர்ந்து சொல்லப்பட்ட கருத்தாகவே தெரிகிறது......

தம்பி அண்ணானை எதிர்த்து பேச்கூடாது

உலகத்தில் முன்றாவது பணக்காரர் என்று சொல்லப்படும் லட்சிமி மிட்டேல் இந்தியாவில் வந்து வாழ விரும்புகிறாரா?

இல்லை இந்தியாவில் சொழில் செய்ய தான் அவர் வருவார்

ஆனால் நான் பாத்தவரை ஈழத்தமிழர் ஜரோப்பாவில் இருந்தாலும் தமிழனாய்தான் இருக்கிறார்கள் அதுவும் ஈழத்தமிழனாய்...............

ராமேஸ்வரத்தில் இருந்து டெல்லி போனவன் சென்னைக்கு கூட வாரான் இல்லை :P :P :P :P

பார்த்தப்பா வடிவேலு நீர் குண்டக்க மண்டக்கவா ஏதாவது எழுத பிறகு பார்த்திபன் வந்திடுவார் உம்மை உறுட்டி எடுக்க :lol::lol:

பார்த்தப்பா வடிவேலு நீர் குண்டக்க மண்டக்கவா ஏதாவது எழுத பிறகு பார்த்திபன் வந்திடுவார் உம்மை உறுட்டி எடுக்க :lol::lol:

அதுக்கு பயந்து தான் இதுக்குள்ள ஒடிவந்து நிண்ட இங்கும் ஒரே வெட்டு குத்துதான் போல :P

தம்பி அண்ணானை எதிர்த்து பேச்கூடாது

உலகத்தில் முன்றாவது பணக்காரர் என்று சொல்லப்படும் லட்சிமி மிட்டேல் இந்தியாவில் வந்து வாழ விரும்புகிறாரா?

இல்லை இந்தியாவில் சொழில் செய்ய தான் அவர் வருவார்

ஆனால் நான் பாத்தவரை ஈழத்தமிழர் ஜரோப்பாவில் இருந்தாலும் தமிழனாய்தான் இருக்கிறார்கள் அதுவும் ஈழத்தமிழனாய்...............

ராமேஸ்வரத்தில் இருந்து டெல்லி போனவன் சென்னைக்கு கூட வாரான் இல்லை :P :P :P :P

யோவ்... அதுதானே நானும் சொன்னேன்... யதார்த்தத்தை உணர்ந்து சாரு கருத்து தெரிவித்திருக்கிறார் என்று.....

யோவ்... அதுதானே நானும் சொன்னேன்... யதார்த்தத்தை உணர்ந்து சாரு கருத்து தெரிவித்திருக்கிறார் என்று.....

மிஸ்டர் Luckyluke.

சாரு நிவேதிதா எழுதியதி என்னால் ஏற்று கொள்ள் முடியாது அவரின் பார்வையில் ஈழத்தமிழர் எல்லோரும்

சுகபோகவாழ்வில் மயங்கி கிடக்கிறர்கள் என்பதை சொல்லி இருக்கிறார், ஆனால் அது அல்ல உண்மை அவர் அப்படி எழுதியதுக்கு காரணம் அவரின் சில நன்பர்கள் இவர்கள் யார் என்று பார்திர்கள் என்றால் ஈழத்தில் ஏதோ ஒரு விதமாக அங்கு உள்ள அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றி விட்டு தான் இங்கு வந்து இருக்கினம் அப்படி பட்ட ஒரு சில தமிழரின் மனநிலையை வைத்து 8 லட்சத்துக்கு மேல் உள்ள மற்ற ஈழத்தவரி எடை போடுவது ஒரு எழுத்தாளருக்கு அழகல்ல .............

நான் ஒரு இந்தியன்னாய் இருந்து சொல்வதால் உம்மால் இதை ஏற்று கொள்ள முடியுமா என்று தெரியவில்லை

நான் திருச்சியில் ஆயிரகனக்கான ஈழதமிழரை பார்த்து இருக்கேன் அவர்களின் உறவினர்கள் ஜரோப்பாவில் இருந்து வந்து இருந்தார்கள், அவர்களின் மனநிலைப்படி பிரச்சனை இல்லாட்டி யாழ்ப்பாணம் மாதிரி தங்களுக்கு வாரது என்று கூறும் போது அவர்களின் ஈழப்பற்றையும் ஊர் பற்றையும் புரிந்து கொள்ள கூடியதாக இருந்தது...

ராமேஸ்வரத்தில் இருந்து டெல்லி போனவன் சென்னைக்கு கூட வாரான் இல்லை :P :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட்டி காட்டியதுக்கு நன்றி

நீங்கள் எந்து ரசிகர்ரா? :P :P

நான் உங்கள் ரசிகரா என்று கேட்கிறீர்களா...அப்படித்தானே..

....இருக்காதா பின்னை..உங்கள் ரசிகர் தான்..எனக்கு நடிகர் நாகேஷை பிடிக்கும்...கறுப்பு நாகேசல்லவா நீங்கள்... :lol:

நான் உங்கள் ரசிகரா என்று கேட்கிறீர்களா...அப்படித்தானே..

....இருக்காதா பின்னை..உங்கள் ரசிகர் தான்..எனக்கு நடிகர் நாகேஷை பிடிக்கும்...கறுப்பு நாகேசல்லவா நீங்கள்... :lol:

என்னொருக்க சொல்லுகோ

எனக்கு என் சொந்த ஊர் பற்று உண்டு... ஆனால் என் பணி நிமித்தம் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் காரணத்தால் நான் அங்கு திரும்ப முடியாது... இதைத்தான் நான் யதார்த்தம் என்று குறிப்பிட்டேன்...

சாரு நிவேதிதா எனக்கு தெரிந்து மிகத்தீவிரமான ஈழத்தமிழர் ஆதரவாளர்.... அவர் தவறான பொருளில் கூறியிருப்பதாக எனக்கு தெரியவில்லை......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னய்யா இங்கை இன்பம் ...சொகுசு வாழ்க்கை...

அதிகமானோரது புலத்து வாழ்க்கை.. எதையோ தொலைத்துவிட்டு தொலைத்தது என்னதென்று தெரியாமால் எங்கையோ தேடுவது போல் தான் இருக்கிறது

இதைத்தான் நானும் கேட்கிறேன்.. என்ன தான் இருக்கிறது.. சொர்க்கமாய் இங்கு.. இக்கரைக்கு அக்கரை பச்சை போல.. நம்ம ஊர்களும் மாறிக்கொண்டு வருகிறது. எடுக்கவேண்டியதை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகத்தான் பார்ப்பார்கள். (இந்த காலநிலையில காய வேறை வேலையில்லையா) :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என் சொந்த ஊர் பற்று உண்டு... ஆனால் என் பணி நிமித்தம் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் காரணத்தால் நான் அங்கு திரும்ப முடியாது... இதைத்தான் நான் யதார்த்தம் என்று குறிப்பிட்டேன்...

சாரு நிவேதிதா எனக்கு தெரிந்து மிகத்தீவிரமான ஈழத்தமிழர் ஆதரவாளர்.... அவர் தவறான பொருளில் கூறியிருப்பதாக எனக்கு தெரியவில்லை......

எனக்கும் உங்கள் கருத்து சரி என்றே படுகிறது....

சாருநிவேதிதாவை விடுங்க அவருக்கு ஷோபா சக்தி சொல்வதுமட்டுமே இலங்கை தமிழரின் கருத்தா தெரியுமோ என்னவோ

என்னை பொறுத்தவரை கூடுதலாக எனது பெற்றேரின் தலைமுறையினர் ஊருக்கு போய் வாழ்வதையே விரும்புகினம் எனது நண்பர்கள் பலர் என்னை மாதிரி சிறு வயதில இங்க வந்தவைக்கு ஊருக்கு போக விருப்பம் ஆனால் ஈழம் கிடைத்தா பிறகு போவதை விரும்புகினம்

ஆனால் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் பலருக்கு அப்படி போக பெரிய விருப்பம் இல்லை விடுமுறைக்கு போய் வர மட்டுமே விரும்புகினம் இது பெற்றோரது பிழைதானே

..

சாருநிவேதிதாவை விடுங்க அவருக்கு ஷோபா சக்தி சொல்வதுமட்டுமே இலங்கை தமிழரின் கருத்தா தெரியுமோ என்னவோ

என்னை பொறுத்தவரை கூடுதலாக எனது பெற்றேரின் தலைமுறையினர் ஊருக்கு போய் வாழ்வதையே விரும்புகினம் எனது நண்பர்கள் பலர் என்னை மாதிரி சிறு வயதில இங்க வந்தவைக்கு ஊருக்கு போக விருப்பம் ஆனால் ஈழம் கிடைத்தா பிறகு போவதை விரும்புகினம்

ஆனால் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் பலருக்கு அப்படி போக பெரிய விருப்பம் இல்லை விடுமுறைக்கு போய் வர மட்டுமே விரும்புகினம் இது பெற்றோரது பிழைதானே

ஓம்

இளைய தலைமுறை வர விரும்பாது எண்டுதான் நானும் நினைக்கிறன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.