Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா குறித்த அச்சுறுத்தலும், ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும்! -

Featured Replies

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் சில பக்கங்களை ஈழத் தமிழர்கள் நிச்சயம் படிக்க வேண்டும். இந்திய விடுதலைக்காக ஒரு தேசிய இராணுவத்தை அமைத்து, அதனை வழிநடாத்திய சுபாஸ் சந்திரபோஸ் அவர்களது வரலாறு தேசியத் தலைவர் அவர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது.

6625-21046-bose-and-nazis.jpg

ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தித் தம்மை அர்ப்பணித்த உயர்வான இந்தியர்களது வரலாறுகள் சில எமக்கும் படிப்பினையாக உள்ளன.

அந்த வகையில், நாம் படிக்க வேண்டிய வரலாற்று மனிதராக உதம் சிங் அவர்களைக் கற்றுக்கொள்ளலாம். அவரது கோபமும், அதன்மீதான நியாயமும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட பாதையும், பழிவாங்கலும், அவரது மரணமும் அவரைக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையை எமக்கு ஏற்படுத்துகின்றது.

Netaji_Germany2.jpg

மேஸர் டயர் மீது உதம் சிங்கிற்கு ஏற்பட்ட கோபமும், ராஜிவ் காந்திமீது தானுவுக்கு ஏற்பட்ட கோபமும் ஒரே வகையானது. பல்வேறு வகைகளில் அவை சமாந்தரமான வரலாற்றுப் பதிவுகளாகவே உள்ளன.

udhams.jpgஇந்தியாவை ஆக்கிரமித்த பிரித்தானியப் படைகளால் 1919 இல் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வுக்கும், ஈழத்தை ஆக்கிரமித்த இந்தியப் படைகள் அங்கு நடாத்திய படுகொலைகளுக்கும் அதிகம் வேறுபாடுகளைக் காண முடியாது. அன்று, பலமான நிலையிலிருந்த பிரித்தானியப் படைகளால் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை வெறியாட்டத்தின் சூத்திரதாரியாக மேஜர் டயரும், பின்னர், வலிமையான இந்தியப் படைகள் தமிழீழத்தில் நடாத்திய படுகொலை வெறியாட்டத்தின் சூத்திரதாரியாக ராஜிவ் காந்தியும் ஒரே பாத்திரத்தில் ஒன்றிச் செல்கின்றார்கள்.

தனது மண்ணில் நிகழ்த்தப்பட்ட படுகொலையின் சூத்திரதாரியான மேஜர் டயரைப் பழிவாங்க 21 ஆண்டுகள் தேடித் திரிந்து, 13 மார்ச் 1940 அன்று இங்கிலாந்து மண்ணில் வைத்துச் சுட்டுக் கொன்றார். அதே போலவே, தனது மண்ணில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் சூத்திரதாரியான ராஜிவ் காந்தியைப் பழிவாங்க தானுவுக்கு அதிக காலம் தேவைப்படவில்லை. 1991 மே 21 அன்று மனித வெடிகுண்டாக மாறி அவள் தன் கோபத்தைத் தீர்த்துக்கொண்டாள்.

dyer.jpgதனது நாட்டில் வைத்தே, தனது படை உயர் அதிகாரியைச் சுட்டுக் கொன்ற உதம் சிக்கை தீவிரவாதி என்று அறிவித்த பிரித்தானிய அரசாங்கம் அவருக்கு மரண தண்டனை வழங்கி, 31 ஜுலை 1940 அன்று தூக்கில் இட்டது. அதே பாணியில், தனது நாட்டிலேயே வைத்து, தனது உயர் மனிதரைப் பழிவாங்கிய தானுவைக் கைது செய்யவோ, தூக்கிலிடவோ முடியாத இந்தியா, திசை எங்கும் தேடிச் பலரைக் கைது செய்தது. சிலரைத் தூக்கு மேடைவரை கொண்டு சென்றது.

மேஜர் டயரைக் கொன்ற உதம் சிங் ஒரு இந்தியன் என்பதற்காக, இங்கிலாந்து தேசம் இந்திய மக்களைத் தண்டிக்க எண்ணவில்லை. உதம் சிங்கின் கோபத்தின் நியாயங்களை அது புரிந்துகொண்டது. ஆனால், இந்தியாவோ தானு ஒரு ஈழப் பெண் என்பதனால், தமிழீழத்தைச் சுடுகாடாக்கித், தமிழீழ மக்களை அழித்து முடித்தது. ஆம், இந்தியாவின் பழிவாங்கல் திட்டத்தை, சிங்கள தேசம் கொடூரமாக நிறைவேற்றி முடித்தது.

இதில் வேடிக்கையான நிகழ்வு என்னவென்றால், 1940 இல் தூக்கிலிடப்பட்டுப் புதைக்கப்பட்டிருந்த உதம் சிங்கின் எச்சம், 1974 இல் இந்தியா கொண்டுவரப்பட்டு, பூரண இராணுவ மரியாதை வழங்கப்பட்டு, தேச பக்தராகக் கௌhரவிக்கப்பட்டு, அவரது சொந்த மாநிலமான பஞ்சாப்பில் தகனம் செய்யப்பட்டு, அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டது.

jal4.jpg

இங்கேதான் காந்தி தேசத்தின் போலி முகத்திரையை கழன்று வீழ்கின்றது. ஒரே நிகழ்ச்சி, இரு வேறு காலங்களில், இரு வேறு மனிதர்களால் நடாத்தி முடிக்கப்படுகின்றது. ஒருவர் பஞ்சாபியர் என்பதால் தேச பக்தராகக் கௌரவிக்கப்படுகின்றார். மற்றவர் தமிழர் என்பதால், அவரது இனமே கருவறுக்கப்படுகின்றது. இன்னமும், தமிழீழ மக்கள் பழிவாங்கப்படுகின்றார்கள். அவர்களுக்கான நீதிகூட இந்தியாவால் நிராகரிக்கப்படுகின்றது.

இதனை யதார்த்தம் என்பதா? இன வன்மம் என்பதா? தமிழர்கள் யாருக்கும் இதன் அர்த்தம் புரியவில்லை. ஆனால், அவர்களுக்கு ஒன்று மட்டும் புரிகின்றது, இந்தியா என்ற மாயையிலிருந்து வெளியே வராதவரை ஈழத் தமிழர்களுக்கு வாழ்வே இல்லை என்பது.

- சிவகுரு பாலச்சந்திரன்

மக்கள் பிரதிநிதி - பாரிஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.