Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுகொலைகளை உலகறியச் செய்த ஊடகவியலாளர் மேரி கொல்வின் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல் தெரிவிப்பு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Marie-Colvin-TGTE150Erangal.jpg

இலங்கைத் தீவில் நடைபெற்ற போரின் போது மிகவும் துணிச்சலுடன் செயல்பட்டு, தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை உலகறியச் செய்த ஊடகவியலாளர் மேரி கொல்வின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியா நாட்டில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மேரி கொல்வின் அவர்களின் உயிரிழப்பையிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்....

ஈழத்தமிழ் மக்களுக்கும் அம்மையார் மேரி அவர்களுக்குமிடையில் நல்ல உறவு இருந்து வந்துள்ளது. பல்வேறு ஆபத்துக்கள் மத்தியிலும் அவர் இலங்கைத் தீவில் நடைபெற்ற போரின் போது மிகவும் துணிச்சலுடன் செயல் பட்டு, தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்ட கொலைகளை உலகறியச் செய்தவர்.

இவ்வாறு உண்மையை உலகறியச் செய்யும் தனது முயற்சியின் போது, சிறிலங்கா படைகளின் சூட்டுக்கு இலக்காகி அவர் தனது இடது கண்ணின் பார்வையையும் இழந்தவர் என்பதும் இங்கு நினைவு கூறத் தக்கதாகும்.

அது மட்டுமன்றி, மே 2009; உக்கிரயுத்த காலத்தில் தமிழ் மக்களைப் பாதுகாப்பாக போர்ப் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றுவதற்காக ஐநா. அதிகாரிகளுடனும் மற்றவர்களுடனும் தொடர்பு கொண்டு செயல் பட்டவர் என்பதும் இங்கு நினைவுகூரக்தக்கது.

ஆனால், மக்கள் போர்ப் பகுதிகளைக் கடந்து வெளியே வந்த போது சிறிலங்காப் படையினர் அவர்களை சுட்டுக் கொலை செய்ததனால் இவரது முயற்சி வெற்றிபெறவில்லை.

மேரி கொல்வின் அவர்கள் யுத்தம் முடிவுக்கு வந்த பின்பும், அங்கு 140,000 மேற்பட்ட மக்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையிலும் நீதியை நிலைநாட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

மக்களின் படுகொலைகள் குறித்து அனைத்துலக விசாரணை ஒன்றினை நிறுவுவதற்கான ஆதாரங்களை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தவர்.

சிறிலங்கா அரச படைகளினால் குண்டுத் தாக்குதல்களுக்கும் எறிகணைக் தாக்குதல்களுக்கும் உள்ளான அப்பாவி மக்களுக்கு மேரி அம்மையார் போன்ற ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகள் தான் ஓரளவு நப்பிக்கையை ஏற்படுத்தி வந்துள்ளன.

மேரி கொல்வின் அவர்கள் உண்மையை வெளிக்கொணரும் பணியில் ஆற்றிய அரிய சேவைக்காக என்றும் மக்கள் மனதில் நிறைந்து நிற்பார்.

உன்னத ஊடகவியலாளன் எனும் பெருமை அவருக்கே உரியதாகுகின்றது.

அவர் உண்மையை என்றும் உரத்துக் கூறியவர். அவர் உயிராபத்து உள்ள நிலையிலும் உண்மையை வெளிக் கொணரத் தவறவில்லை.

ஊடகத்துறை அவரால் பெருமை அடைகின்றது. அரச படைகள் நிகழ்த்தும் அநியாயங்களை உலகம் அறியச் செய்ய முயலும் ஊடகவியலாளர்களுக்கு மேரி அவர்கள் சிறந்ததோர் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், கனத்த இதயத்தோடு அன்னாருக்கு தனது மரியாதையைச் செலுத்தி நிற்கின்றது.

சிறிலங்காப் படைகளினால் நிகழ்த்தப்பட்ட பாரிய தமிழினப் படுகொலைகள் பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததற்காகவும், போர்க்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இன அழிப்பு என்பவற்றை புரிந்தவர்களை இனம் கண்டறிவதற்காகவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை நாம் பாராட்டி நிற்கின்றோம்.

அநியாயமான முறையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர் நெஞ்சங்களில் அவர் என்றும் நிலைத்து நிற்பார்.

நீதியின்பால் அவர் கொண்ட தணியாத தாகத்தினால், தனது உயிரைக் கூடத் துச்சமென கருதி செயற்பட்ட உன்னத பண்பினால் அவர் என்றும் எம்உள்ளங்களில் உயர்ந்து நிற்பார்.

அவரின் இழப்பு எமக்கு, தமிழர்களுக்குப் பேரிழப்பு என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.seithy.co...&language=tamil

ஊடகவியலாளர் மேரி கொல்வின் அவர்களுக்கு பிரித்தானிய தமிழர் ஒன்றியம் இரங்கல்!

22.02.2012 அன்று சிரியாவில் படுகொலை செய்யப்பட்ட துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையார் அவர்களுக்கு எமது இரங்கலைத் தெரிவிக்கின்றோம். இதே போன்று இறுதிக்கட்ட யுத்தமாகக் கூறப்படும் 2009 மே காலப்பகுதியில் நிகழ்ந்த வெள்ளைக்கொடிப் படுகொலையிலும் இத் துணிகர ஊடகவியலாளரான மேரி கொல்வின் அம்மையார் முக்கிய சாட்சியாக இருந்தார். எம்மைப் போன்று ஒடுக்கப்படும் இனத்தின் உண்மைச்செய்திகளை வெளிக்கொண்டுவர பாடுபட்டு தனது வாழ்நாளை அதற்காக அர்ப்பணித்த இந்த துணிகர ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் இழப்பு உண்மையும் நீதியும் மறுதலிக்கப்பட்ட எம்போன்ற அடக்கப்படும் இனங்களுக்கு ஈடுசெய்ய முடியததாகும்.

இவரின் பிரிவிற்கு தமிழ் மக்களாகிய நாம் ஒருகணம் தலைசாய்க்கின்றோம். இவரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அம்மையாரின் குடும்பத்திற்கும் அவர் சார்ந்த ஊடக நிறுவனத்திற்கும் உலக ஊடகவியலாளருக்கும் தமிழீழ மக்கள் சார்பிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் சார்பிலும் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் இவர்களின் கரங்களை உண்மை உணர்வுடன் பற்றிக் கொள்கின்றோம்.

இவ்வாறு பிரித்தானிய தமிழர் ஒன்றியம் விடுத்துள்ள இரங்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.pongutham...26-c0db226daffe

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.