Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு தொலைகாட்சிப்பாடலும் உறைபனிக்குள்ளாக நடைபயணமும் - ச.ச.முத்து

Featured Replies

எல்லோருடைய கனவுகளையும் அந்த சின்னஞ்சிறுமி கண்ணீர் ததும்பிநிற்கும் கண்களுடன் சொன்னதை கேட்ட அனைவரும் நிச்சயமாக உடைந்துபோய் இருப்பார்கள். ஒரு தேசம் எப்படி இவர்களிடம் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு, எப்படி இவர்கள் உலகின் திக்கெல்லாம் வீசி எறியப்பட்டு இருக்கிறார்கள் என்பதை விஜய் தொலைக்காட்சியின் ஒரு பாட்டுப்போட்டி ஒன்றின் அங்கம் ஒன்றில் சரிகா நவநாதன் மிகஆழமாக புரியவைத்திருந்தார்.

maranthupookumoo.jpg

அவருடைய தந்தையான பெரியதம்பி நவநாதனுடன் கதைத்தபோது அவர் சொன்னார், இப்படி ஒரு சந்தர்ப்பம் அந்த பாட்டுப்போட்டியில் கிடைத்தால் நிச்சயமாக இந்தப் பாடலைத்தான் தான் படிப்பேன் என்று அந்த சிறுமி தன்னிடமும் தாயிடமும் சொல்லி இருந்தார் என்று சொன்னார். தனக்கு எங்காவது கிடைக்கும் ஏதாவது ஒரு அரிய சந்தர்ப்பத்தையும் தனது தேசத்தின் விடுதலையை, தன்னிடம் இருந்து ஆயுத முனையில் பறிக்கப்பட்ட அந்த தேசத்தின் இனிமை வாழ்வை மக்களுக்கு சொல்லவேண்டும் என்ற அந்த சிறுமியின் நினைப்பும் நோக்கமும் பெரியவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு செய்தியை சொல்லி நிற்கின்றது.

வழமையான ஒரு நிகழ்வுக்குள் எப்படி எமது தேசிய செய்தியை சொல்வது என்ற அற்புதமான நேரத்தெரிவு அந்த சிறுமியுடையது. தமிழக தொலைக்காட்சிகள் அனைத்தும் வேறுவேறு பெயர்களில் வேறுபட்ட நடுவர்கள் வித்தியாசமான அனுசரணையாளர்களை முன்னிறுத்தி இப்படியான பாட்டுப்போட்டிகளை, சிறந்த குரல் தேர்வுகளை நடாத்திவருகிறார்கள்.

அப்படியான ஒரு நிகழ்ச்சிதான் விஜய் தொலைக்காட்சியின் ‘யூனியர் சுப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியும். ஆனால் பாருங்கள் ஒரு சாதாரண பாடல்நிகழ்ச்சியை தனது தேசத்தின் அடிமை நிலையை சொல்ல பயன்படுத்துகிறார். ஒரு பாடலை யாருக்கும் சமர்ப்பிக்கலாம் என்ற சுற்று வரும்போது அதனை ‘பாட்டு எங்களை மாதிரி எங்கடை மண்ணைவிட்டு துரத்தப்பட்ட தமிழ் மக்களுக்காக எங்களை மாதிரி எங்கடை மண்ணைவிட்டு துரத்தப்பட்ட மக்களுக்காக’ என்று சொல்லிவிட்டு தொடர்கிறார்.

ஒரு பெரும் பேரணி அல்லது ஒரு பெரும் அரசியல் போராட்டம் என்னவிதமான சலசலப்புகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்துமோ அதே அளவுக்கு இந்த சிறுமியின் பாடலும் அதனை அவள் உள்ள உணர்வு கலந்துபாடிய விதமும் ஏற்படுத்தி இருக்கின்றது. உண்மையில் இதுதான் விடுதலைக்காக போராடும் மக்களின் செய்தி. விடுதலையை தேடும் இனத்தின் வெளிப்பாடு. இதனை சொல்வதற்கு அந்த சிறுமி எந்த இராஜதந்திர கல்லூரியிலும் பயின்று பட்டம்பெற்று வரவில்லை.

அந்த கடலுக்குள்ளை கன பேரோடை அழுகை சத்தமும் கண்ணீரும் அடங்கி இருக்கு. அந்த அலைகள் எங்களை மக்கள் நிறைய பேரோடை வாழ்க்கையை புரட்டிப்போட்டிருக்கு. எங்களாலை எங்கடை சொந்த மண்ணில் மிதிக்க முடியுமா நிறைய கனவுகள் நிறைய ஆசைகள்? என்று தன் தலைமுறை தன்னுடைய வேர் இழந்துவிட்டு நிற்கின்றது என்ற சோகம் சொல்லுவதற்கு அவளுக்குள் உள்ளிருந்தது தன் தேசம், தன் தாயகம் என்ற எண்ணக்கருதான். நிச்சயமாக இந்த பாடலை கேட்ட எந்த மனிதனும் ஈழத்தமிழர்கள் தமது தாயகத்தை பறிகொடுத்து நிற்கின்றார்கள்.

அவர்களின் இந்த தாகம் என்றாவது தீரவேண்டும் என்று மனதுக்குள் நினைப்பான். சிலவேளை அதற்கான குரலையும் எழுப்புவான். இதுதான்... இதுதான்... அந்த பாடலின் வெற்றி. இன்னுமொரு புறத்தில் இங்கே குளிரும் பனிப்பொழிவும் நிறைந்த ஐரோப்பிய சூழலில் ஜெனீவாவை நோக்கி சில மனிதர்கள் நெஞ்சு நிறைந்த உறுதியுடனும் விடுதலைக்கான ஒரு நீண்டபயணத்தின் ஒரு அங்கமாக சர்வதேச கதவுகளை நீதிகேட்டு தட்டுவதால் ஏதேனும் ஒரு சிறு ஒளிக்கீற்று தன்னும் தமது இனத்துக்கு கிடைத்துவிட மாட்டாதா என்ற நம்பிக்கையுடன் நடந்துவந்து கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் இறுகப்போர்த்துக்கொண்டு கதகதப்பாக்கும் வெப்பகாற்றுகளுக்குள் அறைகளுக்குள் தூங்கி கிடக்கும் இந்த நாட்களிலும் அவர்கள் நடந்துவந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்ப்படும் கிராமங்களின் மக்களுக்கு தமது தேசம் பறிபோனதையும் இனப்படுகொலை ஒன்றை செய்துமுடித்துவிட்டு உலகஅரங்கில் செங்கம்பள வரவேற்புகளுடன் சிங்களஅரச அதிகாரம் நடமாடி திரிவதை அம்பலமாக்கியபடியே அவர்கள் நடந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.

அவர்களை தாண்டியபடியே ஆயிரக்கணக்கான பயணிகள் தமது வாகனங்களில் கடந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மனதில் ஒரு கேள்வியை இந்த நடைபயணிகள் ஏற்படுத்தி இருப்பார்கள் நிச்சயமாக. ‘ஏன் இவர்கள் இந்த பனிவீசும் கடும் குளிருக்குள் நடக்கிறார்கள். இவர்கள் ஏந்தி இருக்கும் கொடி எது. இவர்களின் கோரிக்கை எது’ என்ற கேள்விகளை நிச்சயமாக இவர்கள் தாம் நடந்த பாதை மருங்கிலும் தூவி இருப்பார்கள்.

இவர்களின் நோக்கம் ஒன்றேதான். ஈழத்தமிழினம் பறிகொடுத்த இறைமையை, அவர்களின் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுப்பதுதான். இவர்களுக்கு தெளிவாகவே தெரியும். நடக்கப்போகின்ற ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரின் முடிவில் ஈழத் தமிழினத்துக்கு விடுதலையை தூக்கி தந்துவிடமாட்டார்கள் என்று.

ஆனாலும் விடுதலை மறுக்கப்பட்டு தொடரும் இனப்படுகொலைக்குள்ளும் இனச்சுத்திகரிப்புக்குள்ளும் ஒரு இனம் அழிகின்றது என்ற உண்மை ஏற்கப்படுமானால் அதுவே பெரும் முன்னெழுச்சி இப்போது என்று. ஒரு விடுதலைக்கான இனம் தனது அனைத்துவிதமான வெளிப்பாடுகளுக்குள்ளாகவும் தனது சுதந்திரவேட்கையை வெளிப்படுத்தியே தீரும் என்பதையே இந்த இரண்டு நிகழ்வுகளும் காட்டுகின்றன.

அந்த பதின்மூன்று வயதுச்சிறுமி தனது பாடல் போட்டி அரங்கை தனது தாயகத்தின் அடிமை நிலையை சொல்ல பயன்படுத்துகிறாள். இதோ எலும்புக்குள்ளும் நுழையும் குளிருக்குள்ளாக இவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்களே இவர்களும் அதே செய்தியைதான் தமது நடைபயணத்தின் மூலம் சொல்லியபடி நடக்கிறார்கள். நாம் என்ன செய்யப்போகின்றோம். அந்த சிறுமி பாடியதைகேட்டு அழுதுவிட்டு அடுத்த வேலைகளில் மூழ்கிவிடப்போகின்றோமா..? இந்த குளிருக்குள்ளால் நடக்கிறார்களே என்று உச்சுக் கொட்டிவிட்டு அனுதாபத்தை விதைத்து விட்டு அறைகளுக்குள் முடங்கபோகின்றோமா..?

அவர்கள் எம் எல்லோரிடமும் கேட்பதும் வேண்டுவதும் இதைத்தான். எல்லோரும் ஒன்றாக ஜெனீவாவின் முன் திரள்வோம். எமக்கு சர்வதேசம் மறுத்துவிட்ட நீதியை மீண்டும் கேட்போம் என்பதுதான்.

‘மறந்துபோகுமோ மண்ணின் வாசனை

தொலைந்துபோகுமோ தூரதேசத்தில்

வேப்பமரக் குயிலே என் வீடு இன்னும் இருக்கிறதா

ஏக்கமுடன் நீபாடும் ஒற்றைக்குரல் ஒலிக்கிறதா

வந்த இடம் ஒட்டவில்லை

தாய்நிலமோ எட்டவில்லை

சொந்தங்களும் பக்கமில்லை

சொல்லியழ நேரமில்லை

அன்னை நிலம் முத்தமிட்டு

அழுதுதுயர் தீர்வதெப்போ...’

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.