Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவை ஆதரித்து இந்தியா எதிரி நாடொன்றை உருவாக்கப் போகிறதா?: அத்துரலிய ரத்ன தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

america%20india.jpg

அமெரிக்காவை ஆதரித்து இந்தியா தனது தென் பிராந்தியத்திலும் பாகிஸ்தானைப் போன்று எதிரி நாடொன்றை உருவாக்கிக் கொள்ளப் போகின்றதா? அல்லது எதிர்த்து நட்பு நாடொன்றை உருவாக்கிக் கொள்ளப் போகின்றதா? என்பது தொடர்பில் உன்னிப்பாக கவனித்து வருவதாக ""நல்லதொரு நாளைக்கான'' ஏற்பாட்டாளரும் ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளரும் எம்.பி. யுமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

எம்மீது பொருளாதார தடை விதிப்பதற்கான முன்னோட்டமே ஐ.நா. வில் எமக்கெதிராக முன்வைக்கப்படும் பிரேரணையாகுமென்றும் தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர்கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நல்லதொரு நாளைக்கான மக்கள் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அத்துரலிய ரத்ன தேரர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தேரர் மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாதத்தை இலங்கையில் தோல்வியுறச் செய்ததால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் எமக்கெதிரான பிரேரணையை நாளை (இன்று) முன்வைக்கவுள்ளது.

இது தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது இன்று முக்கியமான விடயமாக நோக்கப்படுகின்றது.

இந்தியாவின் தென் பகுதியிலேயே அணு ஆலைகள் காணப்படுகின்றன.

எனவே பாகிஸ்தானைப் போன்று தென் பிராந்தியத்திலும் இந்தியாவிற்கு எதிரியை சம்பாதித்துக் கொள்வதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பது இந்தியாவின் பொறுப்பாகும்.

இவ்விடயம் தொடர்பில் நாம் அவதானமாகக் கவனித்து வருகிறோம்.

அதேவேளை, அரசாங்கமும் மேற்குலக நாடுகளின் கைப்பொம்மைகளாக செயற்படாது தேசிய திட்டமொன்ரைற அரசியல் கொள்கையொன்றை தயாரிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் மேற்குலக நாடுகளின் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க முடியாது.

ஈராக், லிபியா,ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளைப் போன்று இலங்கையிலும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்கா முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதற்காக நாட்டுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை பூதாகரமாக்கி அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக குழப்பங்களை விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே அரசாங்கமும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். எமக்கு பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக சர்வதேச உதவிகளை நாடிச் செல்லாது தேசிய கொள்கையொன்றை தயாரிக்க வேண்டும்.

அப்போது தான் சர்வதேச தலையீடுகளை தடுக்க முடியும். நாளை (இன்று) எமக்கெதிராக அமெரிக்கா முன்வைக்கும் பிரேரணையோடு அனைத்தும் முடிந்து விட்டதென எண்ணலாகாது. இது தொடரும்.

பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். இதற்கெல்லாம் நாம் தயாராக வேண்டும். மக்கள் ஓரணியில் நாட்டுக்காக அணிதிரள வேண்டும் என்றார்.

http://www.eeladhesa...chten&Itemid=50

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்லரசுகளைப்போன்று சவால் விடுகின்றார் தேரர். 60 ஆண்டுகள் தமிழனைப்பேய்காட்டியது போன்று சர்வதேசத்தையும் உதாசீனம் செய்யும் நிலை தன் தலையில் தானே மண் அள்ளிக் கொட்டும் நிலைதான். உலகத்தின் ஒரு புள்ளி நாடு என்பதை மறந்துவிடக்கூடாது. இலங்கையை கைப்பற்ற 24 மணிநேரம் தேவையி;ல்லை உலகநாடுகளுக்கு.

ஒரு பரகசியம் செய்தியாக வந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் போன்று சிங்களம் செயல்பட தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது.

பொருளாதார தடை விதிக்கப்பட்டால் தேரர் கூறுவது போன்று வீர வசனங்களை கேட்க நன்றாக இருக்கும், ஆனால் அது பசிக்கு விளங்காது.

தவளை தன்வாயால் கெடும் என்பார்கள் தேரரும் இப்போது தன் வாயினால் நாசமாக்கபோகின்றார்

தவளை தன்வாயால் கெடும் என்பார்கள் தேரரும் இப்போது தன் வாயினால் நாசமாக்கபோகின்றார்

இந்தியாவுக்கு தேரரும் அவர்களின் ஆட்களும் கேக்கு துண்டு மாதிரி.இதைவிட முக்கிய செய்தி ஒன்று.ஜெனீவாவில் தீர்மானம் பிசகும் பட்சத்தில் சிங்கள மக்களிடையே ஒரு உள்ளூர் கலகம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகிறார்கள்.பொறுத்திருந்து பார்போம்

இந்த சிங்கள பௌத்தப் பயங்கரவாதி போன்றவர்கள் சந்தர்ப்பத்துக்கேற்ப கூறும் கருத்துக்கள், சிங்கள அரச பயங்கரவாதிகள் விலைமாதுகளில், வெகுமதிகளில் மயங்கிய தமிழின விரோத இந்தியக் காட்டுமிராண்டிகளின் தமிழருக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு கடந்த காலங்களில் உதவியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.